கண்ணின் மணியே என்று உன்னை ---நான்
காதல் மொழியில் அழைத்தல் உண்டு
என்னில் பாதி நீதான் அன்றோ ---என்
இதயவாசல் என்றும் உனக்குச் சொந்தம்
பொன்னை அள்ளியே பூசிக்கொண்டாய் ---பொங்கும்
நிலவில் நல்ல மஞ்சம் அமைத்தாய்
கன்னி உந்தன் கண்ணடி பட்டேன் ---உனது
காதல் கடலில் நானே விழுந்தேன்
இரவு என்றும் உறக்கம் இல்லை ---என்
இருவிழி எனோ மூடவும் இல்லை
உறவினை எண்ணி தினம் உருகுகின்ரேன் ---நீயும்
ஓடியே வந்து என்னைக் காத்திட வேண்டும்
நாளினை எண்ணிக் கிடக்கலானேன் ---நல்ல
நம்பிக்கை வழியினில் நடக்கலானேன்
வேளை எனக்கு விரைந்திட வேண்டும் ---நானும்
வெற்றி மாலை அணிந்திட வேண்டும்
வேலவன் அருளால் அந்த வெற்றி வேண்டும் ---நான்
விரும்பிடும் உன்னையே மணந்திட வேண்டும்
காலா காலங்கள் வாழ்ந்திட வேண்டும் ---இளைய
கன்னியின் மடியினில் துயிலவும் வேண்டும்
காதல் மொழியில் அழைத்தல் உண்டு
என்னில் பாதி நீதான் அன்றோ ---என்
இதயவாசல் என்றும் உனக்குச் சொந்தம்
பொன்னை அள்ளியே பூசிக்கொண்டாய் ---பொங்கும்
நிலவில் நல்ல மஞ்சம் அமைத்தாய்
கன்னி உந்தன் கண்ணடி பட்டேன் ---உனது
காதல் கடலில் நானே விழுந்தேன்
இரவு என்றும் உறக்கம் இல்லை ---என்
இருவிழி எனோ மூடவும் இல்லை
உறவினை எண்ணி தினம் உருகுகின்ரேன் ---நீயும்
ஓடியே வந்து என்னைக் காத்திட வேண்டும்
நாளினை எண்ணிக் கிடக்கலானேன் ---நல்ல
நம்பிக்கை வழியினில் நடக்கலானேன்
வேளை எனக்கு விரைந்திட வேண்டும் ---நானும்
வெற்றி மாலை அணிந்திட வேண்டும்
வேலவன் அருளால் அந்த வெற்றி வேண்டும் ---நான்
விரும்பிடும் உன்னையே மணந்திட வேண்டும்
காலா காலங்கள் வாழ்ந்திட வேண்டும் ---இளைய
கன்னியின் மடியினில் துயிலவும் வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக