வெள்ளி, 17 மே, 2019

தேனும்பாலும் 664

கண்ணில்     வைத்துப்      பார்த்து    இருந்தேன்    --அவர்
காதல்        நெஞ்சில்      பூத்து    இருந்தேன்
என்னில்    பாதி நீ     என்றாரே     தோழி    ---எனோ
எங்கோ     போனார்  அவர்  என்றும்   வாழி

அந்தி     சாயும்     மாலை     நேரம்    ---அந்த
அழகிய     ஆற்றங்  கரையின்    ஓரம்
பந்தி     வைத்தது     நினைவில்    இல்லையோ   ---அவர்
பருவப்     பசியைத்     தீர்த்தது     நான்    அல்லவோ

இருவர்       அன்று     ஒருவர்      ஆனோம்    ---நாங்கள்
இளமை      தானம்     செய்து     கொண்டோம்
உருகியே     ஒன்றிப்     போனோம்    அன்று   ---இதனை
உணர்ந்து      கொண்டால்    என்றும்   நன்று

தலைவன்      இல்லாத     தலைவி      ஆனேன்    ---நம்
தமிழை       மறந்த      பிள்ளை    யானேன்
அலையும்   நெஞ்சில்    அமைதி    யில்லை   ---என்
அத்தான்      இன்றி  இங்கு     வாழ்வு    இல்லை

போனவர்     என்னிடம்     வந்திட     வேண்டும்   ---இனி
புதையலாய்     வாழ்வும்    ஜொலித்திட    வேண்டும்
தேனும்        பாலுமிங்கு   கலந்திட      வேண்டும்    ---அன்பு
தெய்வம்     கருணையில்      காத்திட    வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக