கண்ணில் வைத்துப் பார்த்து இருந்தேன் --அவர்
காதல் நெஞ்சில் பூத்து இருந்தேன்
என்னில் பாதி நீ என்றாரே தோழி ---எனோ
எங்கோ போனார் அவர் என்றும் வாழி
அந்தி சாயும் மாலை நேரம் ---அந்த
அழகிய ஆற்றங் கரையின் ஓரம்
பந்தி வைத்தது நினைவில் இல்லையோ ---அவர்
பருவப் பசியைத் தீர்த்தது நான் அல்லவோ
இருவர் அன்று ஒருவர் ஆனோம் ---நாங்கள்
இளமை தானம் செய்து கொண்டோம்
உருகியே ஒன்றிப் போனோம் அன்று ---இதனை
உணர்ந்து கொண்டால் என்றும் நன்று
தலைவன் இல்லாத தலைவி ஆனேன் ---நம்
தமிழை மறந்த பிள்ளை யானேன்
அலையும் நெஞ்சில் அமைதி யில்லை ---என்
அத்தான் இன்றி இங்கு வாழ்வு இல்லை
போனவர் என்னிடம் வந்திட வேண்டும் ---இனி
புதையலாய் வாழ்வும் ஜொலித்திட வேண்டும்
தேனும் பாலுமிங்கு கலந்திட வேண்டும் ---அன்பு
தெய்வம் கருணையில் காத்திட வேண்டும்
காதல் நெஞ்சில் பூத்து இருந்தேன்
என்னில் பாதி நீ என்றாரே தோழி ---எனோ
எங்கோ போனார் அவர் என்றும் வாழி
அந்தி சாயும் மாலை நேரம் ---அந்த
அழகிய ஆற்றங் கரையின் ஓரம்
பந்தி வைத்தது நினைவில் இல்லையோ ---அவர்
பருவப் பசியைத் தீர்த்தது நான் அல்லவோ
இருவர் அன்று ஒருவர் ஆனோம் ---நாங்கள்
இளமை தானம் செய்து கொண்டோம்
உருகியே ஒன்றிப் போனோம் அன்று ---இதனை
உணர்ந்து கொண்டால் என்றும் நன்று
தலைவன் இல்லாத தலைவி ஆனேன் ---நம்
தமிழை மறந்த பிள்ளை யானேன்
அலையும் நெஞ்சில் அமைதி யில்லை ---என்
அத்தான் இன்றி இங்கு வாழ்வு இல்லை
போனவர் என்னிடம் வந்திட வேண்டும் ---இனி
புதையலாய் வாழ்வும் ஜொலித்திட வேண்டும்
தேனும் பாலுமிங்கு கலந்திட வேண்டும் ---அன்பு
தெய்வம் கருணையில் காத்திட வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக