நிலவில் வந்தது மயக்கம் ---உனை
நினைக்க மனதும் இனிக்கும்
உலவும் தென்றல் அழைக்கும் ---எனக்கு
உனது உறவும் பிடிக்கும்
வானம் வாழ்த்துகள் சொல்லும் ---ஆனால்
வாடைக் காற்றோ கொல்லும்
தேனும் பாலும் கசக்கும் --நான்
தினமும் உன்னையே நினைக்கும்
நீயும் நானும் ஒன்று ---அதனை
நினைத்து விட்டால் நன்று
காயும் நிலவும் வீணா ---என்னை
கலங்க விடுவதும் ஏனோ
காதல் கொன்டேன் உன்மேல் ---நீயும்
கடைக்கண் பாரேன் என்மேல்
மோதல் என்பது எதற்கு ---எனது
மோகம் தீர்வது கணக்கு
அள்ளியே அணைத்திட வாராய் --என்
அழகு மயிலே ஜோராய்
பள்ளிப் பாடங்கள் சொல்லு ---உனது
பார்வையால் தினமும் கொல்லு
நினைக்க மனதும் இனிக்கும்
உலவும் தென்றல் அழைக்கும் ---எனக்கு
உனது உறவும் பிடிக்கும்
வானம் வாழ்த்துகள் சொல்லும் ---ஆனால்
வாடைக் காற்றோ கொல்லும்
தேனும் பாலும் கசக்கும் --நான்
தினமும் உன்னையே நினைக்கும்
நீயும் நானும் ஒன்று ---அதனை
நினைத்து விட்டால் நன்று
காயும் நிலவும் வீணா ---என்னை
கலங்க விடுவதும் ஏனோ
காதல் கொன்டேன் உன்மேல் ---நீயும்
கடைக்கண் பாரேன் என்மேல்
மோதல் என்பது எதற்கு ---எனது
மோகம் தீர்வது கணக்கு
அள்ளியே அணைத்திட வாராய் --என்
அழகு மயிலே ஜோராய்
பள்ளிப் பாடங்கள் சொல்லு ---உனது
பார்வையால் தினமும் கொல்லு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக