தங்க நிலவாய் தளதளக்கும் ---உன்னை
தழுவி அணைத்திட மனம் கிளுகிளுக்கும்
அங்கம் முழுவதும் நல்ல அழகுமயம் ---தினம்
ஆண்டு ரசித்திட எனக்குள் ஆசைமயம்
பொங்கிடும் அருவியாய் சிரித்திடுவாய் ---உடல்
பூரித்து இளமையில் அழைத்திடுவாய்
திங்களும் தோற்றிடும் தேவியடி ---உனை
தினமும் நினைத்து அலையும் வேலையடி
காலினில் சிலம்பு கலகலக்கும் ---உந்தன்
கைவளை ஓசையோ மெய்சிலிர்க்கும்
நாலடி நடந்தால் அது நாடகமாம் ---இந்த
நங்கை மனமென்றும் அறியாப் பூடகமாம்
இடையெனும் பொருளே இல்லாதவள் ---அவள்
இயற்கை கல்வியே கல்லாதவள்
உடையினில் மறைத்து உலா வருவாள் ---உண்மையில்
எனக்கு அவள்தான் உயிர் தருவாள்
மனதினில் கோவில் நான் அமைப்பேன் ---என்
மைவிழி மாதினை அங்கே அமர வைப்பேன்
இனித்திடும் தமிழினில் பாட்டிசைப்பேன் ---அவளை
இமைப் பொழுதும் பிரியாமல் வாழ்ந்திடுவேன்
தழுவி அணைத்திட மனம் கிளுகிளுக்கும்
அங்கம் முழுவதும் நல்ல அழகுமயம் ---தினம்
ஆண்டு ரசித்திட எனக்குள் ஆசைமயம்
பொங்கிடும் அருவியாய் சிரித்திடுவாய் ---உடல்
பூரித்து இளமையில் அழைத்திடுவாய்
திங்களும் தோற்றிடும் தேவியடி ---உனை
தினமும் நினைத்து அலையும் வேலையடி
காலினில் சிலம்பு கலகலக்கும் ---உந்தன்
கைவளை ஓசையோ மெய்சிலிர்க்கும்
நாலடி நடந்தால் அது நாடகமாம் ---இந்த
நங்கை மனமென்றும் அறியாப் பூடகமாம்
இடையெனும் பொருளே இல்லாதவள் ---அவள்
இயற்கை கல்வியே கல்லாதவள்
உடையினில் மறைத்து உலா வருவாள் ---உண்மையில்
எனக்கு அவள்தான் உயிர் தருவாள்
மனதினில் கோவில் நான் அமைப்பேன் ---என்
மைவிழி மாதினை அங்கே அமர வைப்பேன்
இனித்திடும் தமிழினில் பாட்டிசைப்பேன் ---அவளை
இமைப் பொழுதும் பிரியாமல் வாழ்ந்திடுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக