வியாழன், 16 மே, 2019

தீர்வு 661

ஊரை       அடித்து       உலையில்    போட்டாய்   ---இங்கு
உள்ள     நிலத்தை     வளைச்சுப்    போட்டாய்
நீரைத்      திருடி     காசு     பார்த்தாய்    ---செல்லையா
நிற்காமல்      போவது      எங்கே    நீயும்  சொல்லையா

துண்டை     எடுத்து      தோளில்       போட்டாய்    ---தெரு
கோடிவரை     உனக்கு     வீடு    கட்டினாய்
கண்டதெல்லாம்   உனக்குத்தான்   சொந்தமாச்சு   கண்ணய்யா   --நீ
கசக்கிப்     பிழிஞ்சு     காசு      சேர்ப்பாய்     பொன்னையா

இரவு    பகல்    தினமும்     நீ      தூங்குவதில்லை    ---ஆற்றில்
இருக்கும்    மணலை         வாரிக்     கொண்டாய்
உறவென்று     வந்த     போதும்   சின்னையா  ---தினம்
உனக்கு      கப்பம்       கட்ட     வேணும்     என்னய்யா

நல்லவன்      போல     வேஷம்     போட்டாய்   ---உன்னை
நம்பி      வந்தால்      கழுத்தை      அறுப்பாய்
பல்லைக்     காட்டி   சிரித்திடுவாய்     நல்லையா   ---நல்ல
பாசமாக      நடிச்சு      வாரே      செல்லையா

எச்சில்     இலை      சோத்துக்காக    தெருவில்  --இங்கு
ஏழை      படுகிற     பாட்டைப்     பாரு
மச்சு      வீட்டுலே     வாழுறீயே     மன்னனா    ---நீயும்
மனிதர்களை      மதிக்கத்    தெரியாத     மூடனா

பெண்ணாலே  மண்ணில்    பிறந்து    வந்தும்   --மற்ற
பெண்களை      தாயென      மதிக்கவில்லை
கண்டவரைப்      பெண்டாள     ஆசையா    ---உனக்கும்
கடவுள்      ஒருநாள்     தரப்போரார்   பெரிய  பூசையா

காலம்       இங்கே      மாறும்      பாரு    ---அப்போ
உன்கணக்கும்   பார்க்கிற     நேரம்     சேரும்
வேலைகள்      காத்திருக்கு     விரைவிலே    ---செய்த
வினைகளுக்கு    தீர்வு  உண்டு     முடிவிலே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக