வியாழன், 9 மே, 2019

தர்மதேவதை 658

சொந்தம்      என்றே        சொன்னாலும்     ---நாம
சொக்கிப்     போய்       நின்னாலும்
பந்தமும்      பாசமும்      நிலைக்குமா    ---தாய்
பாசத்திற்கு     இங்கு    இணை  ஏதம்மா

கண்ணில்     வைத்துக்     காத்தவள்   ---நமக்கு
காலம்       முழுதும்     உழைத்தவள்
பெண்ணிற்கு      நிகரிங்கு      கூறம்மா    ---அவளின்றி
பெரியது       உலகினிலே     ஏதம்மா

குருதிக்கொடை     நமக்கு     கொடுத்தவள்   ---நம்
குடும்பம்     காத்திட     வந்தவள்
அருவிபோல்      பொழிவாளே      அன்பிலே   ---அவள்
பெருமை       யாரறிவார்      நம்மிலே

இரவு ம்     பகலும்      விழித்தவள்    ---தனது
இன்பம்     எல்லாம்     மறந்தவள்
உறவுக்காக    உயிர்தருவாள்     உண்மையில்   ---இதனை
உரியவர்கள்    புரிந்து  கொண்டால்   நன்மையே

கோவிலில்     உள்ள     தெய்வம்    ---நம்
குடும்பங்களில்     வாழ்ந்திட     வேண்டி
தாயெனும்     உருவிலே     வந்தது    --அந்த
தர்மமே       மனிதர்களைக்     காக்குது

(உலக     அன்னையர்     தின     சிறப்புப்    பாடல் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக