சொந்தம் என்றே சொன்னாலும் ---நாம
சொக்கிப் போய் நின்னாலும்
பந்தமும் பாசமும் நிலைக்குமா ---தாய்
பாசத்திற்கு இங்கு இணை ஏதம்மா
கண்ணில் வைத்துக் காத்தவள் ---நமக்கு
காலம் முழுதும் உழைத்தவள்
பெண்ணிற்கு நிகரிங்கு கூறம்மா ---அவளின்றி
பெரியது உலகினிலே ஏதம்மா
குருதிக்கொடை நமக்கு கொடுத்தவள் ---நம்
குடும்பம் காத்திட வந்தவள்
அருவிபோல் பொழிவாளே அன்பிலே ---அவள்
பெருமை யாரறிவார் நம்மிலே
இரவு ம் பகலும் விழித்தவள் ---தனது
இன்பம் எல்லாம் மறந்தவள்
உறவுக்காக உயிர்தருவாள் உண்மையில் ---இதனை
உரியவர்கள் புரிந்து கொண்டால் நன்மையே
கோவிலில் உள்ள தெய்வம் ---நம்
குடும்பங்களில் வாழ்ந்திட வேண்டி
தாயெனும் உருவிலே வந்தது --அந்த
தர்மமே மனிதர்களைக் காக்குது
(உலக அன்னையர் தின சிறப்புப் பாடல் )
சொக்கிப் போய் நின்னாலும்
பந்தமும் பாசமும் நிலைக்குமா ---தாய்
பாசத்திற்கு இங்கு இணை ஏதம்மா
கண்ணில் வைத்துக் காத்தவள் ---நமக்கு
காலம் முழுதும் உழைத்தவள்
பெண்ணிற்கு நிகரிங்கு கூறம்மா ---அவளின்றி
பெரியது உலகினிலே ஏதம்மா
குருதிக்கொடை நமக்கு கொடுத்தவள் ---நம்
குடும்பம் காத்திட வந்தவள்
அருவிபோல் பொழிவாளே அன்பிலே ---அவள்
பெருமை யாரறிவார் நம்மிலே
இரவு ம் பகலும் விழித்தவள் ---தனது
இன்பம் எல்லாம் மறந்தவள்
உறவுக்காக உயிர்தருவாள் உண்மையில் ---இதனை
உரியவர்கள் புரிந்து கொண்டால் நன்மையே
கோவிலில் உள்ள தெய்வம் ---நம்
குடும்பங்களில் வாழ்ந்திட வேண்டி
தாயெனும் உருவிலே வந்தது --அந்த
தர்மமே மனிதர்களைக் காக்குது
(உலக அன்னையர் தின சிறப்புப் பாடல் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக