காணக் கருப்பு அழகன் ---இரு
காதுவரை தொடுகின்ற மீசைக்காரன்
தென்னம் பாளை சிரிப்பழகன் --நல்ல
தெம்மாங்கு பாடும் பாட்டுக்காரன்
எட்டினடந்தாலே அவன் எதிரிகள் தூளாவார் ---அங்கு
பட்டையை கிளப்பி பந்தாட்டம் ஆடிடுவான்
வெட்டி வச்ச கரும்பென மேனியிலே புதுவாசம் ---அவனை
கட்டியணைக்கும் என்காதலுக்கு வருவானோ
கொல்லும் விழியழகும் கோவை சிரிப்பழகும் --மனம்
கொள்ளை கொண்டு போக குமரன் வருவானா
கள்ளியெந்தன் மனதில் காதல் வந்ததடி ---அந்த
காதல் தலைக்கேற என்கண்கள் மயங்குதடி
மடியிலே நான் துயில மச்சான் வருவானோ ---நான்
மணமுடிக்க நாளும் மகிழ்வாக வந்திடுமோ
துடிக்கும் என்னையும் தன்தோளில் சுமப்பானோ ---இது
தொல்லை என என்னையும் விட்டுப் பிரிவானோ
எண்ணமதை சொல்ல எனக்குத் துணையில்லையே ---அன்பு
வண்ணப் பறவைகளே வாய்திறந்து சொல்வீரா
கண்ணில் விழுந்தவனை கைவிடவும் நான் மாட்டேன் --இன்று
கனிவாகப் பேசியவன் கைகளைப் பற்றிடுவேன்
காதுவரை தொடுகின்ற மீசைக்காரன்
தென்னம் பாளை சிரிப்பழகன் --நல்ல
தெம்மாங்கு பாடும் பாட்டுக்காரன்
எட்டினடந்தாலே அவன் எதிரிகள் தூளாவார் ---அங்கு
பட்டையை கிளப்பி பந்தாட்டம் ஆடிடுவான்
வெட்டி வச்ச கரும்பென மேனியிலே புதுவாசம் ---அவனை
கட்டியணைக்கும் என்காதலுக்கு வருவானோ
கொல்லும் விழியழகும் கோவை சிரிப்பழகும் --மனம்
கொள்ளை கொண்டு போக குமரன் வருவானா
கள்ளியெந்தன் மனதில் காதல் வந்ததடி ---அந்த
காதல் தலைக்கேற என்கண்கள் மயங்குதடி
மடியிலே நான் துயில மச்சான் வருவானோ ---நான்
மணமுடிக்க நாளும் மகிழ்வாக வந்திடுமோ
துடிக்கும் என்னையும் தன்தோளில் சுமப்பானோ ---இது
தொல்லை என என்னையும் விட்டுப் பிரிவானோ
எண்ணமதை சொல்ல எனக்குத் துணையில்லையே ---அன்பு
வண்ணப் பறவைகளே வாய்திறந்து சொல்வீரா
கண்ணில் விழுந்தவனை கைவிடவும் நான் மாட்டேன் --இன்று
கனிவாகப் பேசியவன் கைகளைப் பற்றிடுவேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக