ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

சித்திரை 652

சித்திரை      மாத       முழு நிலவில்     ---நம்
தீர்த்தக்     கரை     அருவி    யோரத்தில்
அத்தை    மகள்     எனக்கெனக்     காத்திருந்தாள்     ---அங்கு
அவள்      அழகை     ரசித்திட      நானும்     அருகிருந்தேன்

கைகள்       என்னவோ       வாழை      மடல்     ----அவள்
காதுகள்      இரண்டுமே     தாழை     மடல்
நெய்யில்      செய்தது      போல     உடல்     ---நான்
நெருங்கிடக்      கண்டேன்    ஆழக்     கடல்

கட்டி       அணைக்கையில்      உடல்     சிலிர்க்கும்   ---அவள்
கைவளை    ஓசையில்      மனம்        துடிக்கும்
பெட்டிப்      பாம்பென      என்னையும்     மாற்றிவிட்டாள்    --கரும்
பின்னலில்      சிக்கிப்      பிரியம்     கொண்டேன்

கண்களை      அம்பாக்கி    என்னைக்    கொய்து      விட்டாள்    ---தன
கருவிழி     சாடையில்      புதுக்      கவிதை      சொன்னாள்
அன்பினில்      என்னையும்      ஆட்டி      வைத்தாள்      ---தன
அழகினால்     நெஞ்சுக்குள்    என்னைப்      பூட்டி    வைத்தாள்

பெண்ணாய்ப்     பிறந்த      அவள்      பேரரசி    ---அவள்
பின்னால்      செல்லும்    நானோ    விசுவாசி
எண்ணி      எப்போதும்      நீ      யோசி     ---நான்
என்றும்      தொடர்வேன்     அவளோடு     கதை பேசி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக