சித்திரை மாத முழு நிலவில் ---நம்
தீர்த்தக் கரை அருவி யோரத்தில்
அத்தை மகள் எனக்கெனக் காத்திருந்தாள் ---அங்கு
அவள் அழகை ரசித்திட நானும் அருகிருந்தேன்
கைகள் என்னவோ வாழை மடல் ----அவள்
காதுகள் இரண்டுமே தாழை மடல்
நெய்யில் செய்தது போல உடல் ---நான்
நெருங்கிடக் கண்டேன் ஆழக் கடல்
கட்டி அணைக்கையில் உடல் சிலிர்க்கும் ---அவள்
கைவளை ஓசையில் மனம் துடிக்கும்
பெட்டிப் பாம்பென என்னையும் மாற்றிவிட்டாள் --கரும்
பின்னலில் சிக்கிப் பிரியம் கொண்டேன்
கண்களை அம்பாக்கி என்னைக் கொய்து விட்டாள் ---தன
கருவிழி சாடையில் புதுக் கவிதை சொன்னாள்
அன்பினில் என்னையும் ஆட்டி வைத்தாள் ---தன
அழகினால் நெஞ்சுக்குள் என்னைப் பூட்டி வைத்தாள்
பெண்ணாய்ப் பிறந்த அவள் பேரரசி ---அவள்
பின்னால் செல்லும் நானோ விசுவாசி
எண்ணி எப்போதும் நீ யோசி ---நான்
என்றும் தொடர்வேன் அவளோடு கதை பேசி
தீர்த்தக் கரை அருவி யோரத்தில்
அத்தை மகள் எனக்கெனக் காத்திருந்தாள் ---அங்கு
அவள் அழகை ரசித்திட நானும் அருகிருந்தேன்
கைகள் என்னவோ வாழை மடல் ----அவள்
காதுகள் இரண்டுமே தாழை மடல்
நெய்யில் செய்தது போல உடல் ---நான்
நெருங்கிடக் கண்டேன் ஆழக் கடல்
கட்டி அணைக்கையில் உடல் சிலிர்க்கும் ---அவள்
கைவளை ஓசையில் மனம் துடிக்கும்
பெட்டிப் பாம்பென என்னையும் மாற்றிவிட்டாள் --கரும்
பின்னலில் சிக்கிப் பிரியம் கொண்டேன்
கண்களை அம்பாக்கி என்னைக் கொய்து விட்டாள் ---தன
கருவிழி சாடையில் புதுக் கவிதை சொன்னாள்
அன்பினில் என்னையும் ஆட்டி வைத்தாள் ---தன
அழகினால் நெஞ்சுக்குள் என்னைப் பூட்டி வைத்தாள்
பெண்ணாய்ப் பிறந்த அவள் பேரரசி ---அவள்
பின்னால் செல்லும் நானோ விசுவாசி
எண்ணி எப்போதும் நீ யோசி ---நான்
என்றும் தொடர்வேன் அவளோடு கதை பேசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக