சிறு கூடற்பட்டி வளர் தென்றலே போற்றி ---தமிழ்
திரையுலகில் பாடல் புனைந்த தேனமுதே போற்றி
அருவி நீர் பொழிவதுபோல் அமையுமுன் கவிதை --எமது
அம்மை சிவகாமி அருள் பெற்ற அன்பரே போற்றி
காற்றினிலே உன்பாடல் கச்சிதமாய் ஒலிக்கும் --நம்
காதுகளில் தேன்பாய களிப்பை அள்ளித் தெளிக்கும்
நாற்றிசையும் புகழ் மணக்கும் நற்கவிஞ போற்றி ---உயர்
கற்பகத்தார் அருள் பெற்ற கவிமழையே போற்றி
கண்ணனுக்குத் தாசனாகி கவிதையிலே வென்றாய் --தமிழ்
கவிஞரிலே தலைமகனாய் கலையுலகில் நின்றாய்
அன்னைத் தமிழ் பெற்றெடுத்த அழகு முத்தையா வாழ்கவே ---உம
அடிபணிந்து போற்றுகிறோம் அன்ப இவண் மீண்டும் வருகவே
திரையுலகில் பாடல் புனைந்த தேனமுதே போற்றி
அருவி நீர் பொழிவதுபோல் அமையுமுன் கவிதை --எமது
அம்மை சிவகாமி அருள் பெற்ற அன்பரே போற்றி
காற்றினிலே உன்பாடல் கச்சிதமாய் ஒலிக்கும் --நம்
காதுகளில் தேன்பாய களிப்பை அள்ளித் தெளிக்கும்
நாற்றிசையும் புகழ் மணக்கும் நற்கவிஞ போற்றி ---உயர்
கற்பகத்தார் அருள் பெற்ற கவிமழையே போற்றி
கண்ணனுக்குத் தாசனாகி கவிதையிலே வென்றாய் --தமிழ்
கவிஞரிலே தலைமகனாய் கலையுலகில் நின்றாய்
அன்னைத் தமிழ் பெற்றெடுத்த அழகு முத்தையா வாழ்கவே ---உம
அடிபணிந்து போற்றுகிறோம் அன்ப இவண் மீண்டும் வருகவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக