வெள்ளி, 26 ஏப்ரல், 2019

கவியரசு 649

சிறு கூடற்பட்டி      வளர்    தென்றலே      போற்றி    ---தமிழ்
திரையுலகில்    பாடல்    புனைந்த    தேனமுதே    போற்றி
அருவி நீர்     பொழிவதுபோல்    அமையுமுன்    கவிதை    --எமது
அம்மை   சிவகாமி   அருள் பெற்ற   அன்பரே    போற்றி

காற்றினிலே     உன்பாடல்   கச்சிதமாய்       ஒலிக்கும்   --நம்
காதுகளில்     தேன்பாய    களிப்பை அள்ளித்   தெளிக்கும்
நாற்றிசையும்     புகழ் மணக்கும்    நற்கவிஞ      போற்றி   ---உயர்
கற்பகத்தார்      அருள் பெற்ற       கவிமழையே    போற்றி

கண்ணனுக்குத்    தாசனாகி     கவிதையிலே   வென்றாய்   --தமிழ்
கவிஞரிலே    தலைமகனாய்       கலையுலகில்    நின்றாய்
அன்னைத்    தமிழ்    பெற்றெடுத்த    அழகு  முத்தையா    வாழ்கவே ---உம
அடிபணிந்து    போற்றுகிறோம்    அன்ப      இவண்    மீண்டும்    வருகவே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக