சின்ன இடை சிங்காரி ---அவள்
சீனப் பட்டு ஒய்யாரி
கன்னல் தமிழ் பேச்சுக்காரி ---பிறரை
கண்ணால் வளைக்கும் மாயக்காரி
மின்னலென நடை நடப்பாள் ---வரும்
மேகத்தையும் குடை பிடிப்பாள்
கன்ன கதுப்பு அழகில் ---அவள்
காண்பவரை அலைய வைப்பாள்
என்ன சொல்லிப் பாடிடுவேன் ---அவள்
இடையை தொட்டு ஆடிடுவேன்
தென்றல் வரும் வேளையிலே ---அவளோடு
தேன்நிலவு நானும் போய்விடுவேன்
இரவு பகல் இனியேது ---அவள்
இருக்கும் இடம் சொர்க்கமே
உறவிலே மழை பொழியும் ---என்
உள்ளம் எல்லாம் நிறையும்
வாலைக் குமரி யவள் ---நன்கு
வடித்து வைத்த சிற்பமவள்
ஆலையில் கரும்பாய் என்னையே --இங்கு
ஆக்கி வைத்து எதற்கோ சிரிக்கிறாள்
சீனப் பட்டு ஒய்யாரி
கன்னல் தமிழ் பேச்சுக்காரி ---பிறரை
கண்ணால் வளைக்கும் மாயக்காரி
மின்னலென நடை நடப்பாள் ---வரும்
மேகத்தையும் குடை பிடிப்பாள்
கன்ன கதுப்பு அழகில் ---அவள்
காண்பவரை அலைய வைப்பாள்
என்ன சொல்லிப் பாடிடுவேன் ---அவள்
இடையை தொட்டு ஆடிடுவேன்
தென்றல் வரும் வேளையிலே ---அவளோடு
தேன்நிலவு நானும் போய்விடுவேன்
இரவு பகல் இனியேது ---அவள்
இருக்கும் இடம் சொர்க்கமே
உறவிலே மழை பொழியும் ---என்
உள்ளம் எல்லாம் நிறையும்
வாலைக் குமரி யவள் ---நன்கு
வடித்து வைத்த சிற்பமவள்
ஆலையில் கரும்பாய் என்னையே --இங்கு
ஆக்கி வைத்து எதற்கோ சிரிக்கிறாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக