சனி, 20 ஏப்ரல், 2019

தென்றல் 644

 சின்ன       இடை     சிங்காரி     ---அவள்
சீனப்      பட்டு     ஒய்யாரி
கன்னல்    தமிழ்     பேச்சுக்காரி    ---பிறரை
கண்ணால்     வளைக்கும்     மாயக்காரி

மின்னலென      நடை    நடப்பாள்    ---வரும் 
 மேகத்தையும்      குடை     பிடிப்பாள்
கன்ன       கதுப்பு      அழகில்   ---அவள்
காண்பவரை     அலைய   வைப்பாள்

என்ன      சொல்லிப்    பாடிடுவேன்   ---அவள்
இடையை     தொட்டு    ஆடிடுவேன்
தென்றல்     வரும்    வேளையிலே    ---அவளோடு
தேன்நிலவு      நானும்      போய்விடுவேன்

இரவு         பகல்       இனியேது    ---அவள்
இருக்கும்      இடம்     சொர்க்கமே
உறவிலே       மழை      பொழியும்     ---என்
உள்ளம்       எல்லாம்     நிறையும்

வாலைக்       குமரி     யவள்    ---நன்கு
வடித்து       வைத்த      சிற்பமவள்
ஆலையில்    கரும்பாய்    என்னையே    --இங்கு
ஆக்கி வைத்து      எதற்கோ       சிரிக்கிறாள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக