சனி, 20 ஏப்ரல், 2019

காலம் 643

கண்களில்     வைத்துக்     காத்திருக்கிறேன்     ---உன்
காதலால்       என்மனம்     பூத்திருக்குதே
விண்ணிலே     உலவும்    வெண்மதியே   ---உன்னை
விரும்பி       பாடுதல்      என்விதியே

கண்களில்      கவலைகள்     ஏனடி     ---உன்னை
காப்பவன்     என்றும்      நானடி
பெண்களில்     அரியவள்      நீயடி      ---எனக்கு
பிரிவினை       அளிப்பதும்     ஏனடி

தொட்ட     இடமோ        புகழ் மணக்கும்    ---உன்
கோவை     இதழில்     தேன்வடியும்
கட்டிக்       கரும்படி      உந்தன் மொழி   ---உன்னை
காதலித்து     திரிவது     எந்தன்   வழி

கல்லில்       வடித்த      சிலையானேன்     --உன்
காதலில்    துடிக்கும்    நிலையானேன்
சொல்லால்      அடித்து     சென்றாயடி     ---நான்
சுகம்பெற     வழியொன்று     சொல்லாயோ

காலம்        ஒருநாள்      கைகொடுக்கும்    ---என்
கணமணி    உன்மனம்     கனிந்துவிடும்
வேளை      வருமெனக்      காத்திருப்பேன்    ---உன்னை
விருந்தாக்கி       தினமும்     மகிழ்ந்திருப்பேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக