கண்களில் வைத்துக் காத்திருக்கிறேன் ---உன்
காதலால் என்மனம் பூத்திருக்குதே
விண்ணிலே உலவும் வெண்மதியே ---உன்னை
விரும்பி பாடுதல் என்விதியே
கண்களில் கவலைகள் ஏனடி ---உன்னை
காப்பவன் என்றும் நானடி
பெண்களில் அரியவள் நீயடி ---எனக்கு
பிரிவினை அளிப்பதும் ஏனடி
தொட்ட இடமோ புகழ் மணக்கும் ---உன்
கோவை இதழில் தேன்வடியும்
கட்டிக் கரும்படி உந்தன் மொழி ---உன்னை
காதலித்து திரிவது எந்தன் வழி
கல்லில் வடித்த சிலையானேன் --உன்
காதலில் துடிக்கும் நிலையானேன்
சொல்லால் அடித்து சென்றாயடி ---நான்
சுகம்பெற வழியொன்று சொல்லாயோ
காலம் ஒருநாள் கைகொடுக்கும் ---என்
கணமணி உன்மனம் கனிந்துவிடும்
வேளை வருமெனக் காத்திருப்பேன் ---உன்னை
விருந்தாக்கி தினமும் மகிழ்ந்திருப்பேன்
காதலால் என்மனம் பூத்திருக்குதே
விண்ணிலே உலவும் வெண்மதியே ---உன்னை
விரும்பி பாடுதல் என்விதியே
கண்களில் கவலைகள் ஏனடி ---உன்னை
காப்பவன் என்றும் நானடி
பெண்களில் அரியவள் நீயடி ---எனக்கு
பிரிவினை அளிப்பதும் ஏனடி
தொட்ட இடமோ புகழ் மணக்கும் ---உன்
கோவை இதழில் தேன்வடியும்
கட்டிக் கரும்படி உந்தன் மொழி ---உன்னை
காதலித்து திரிவது எந்தன் வழி
கல்லில் வடித்த சிலையானேன் --உன்
காதலில் துடிக்கும் நிலையானேன்
சொல்லால் அடித்து சென்றாயடி ---நான்
சுகம்பெற வழியொன்று சொல்லாயோ
காலம் ஒருநாள் கைகொடுக்கும் ---என்
கணமணி உன்மனம் கனிந்துவிடும்
வேளை வருமெனக் காத்திருப்பேன் ---உன்னை
விருந்தாக்கி தினமும் மகிழ்ந்திருப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக