வெள்ளி, 26 ஏப்ரல், 2019

வள்ளிக்கணவன் 650

வாழ்வு       சிறிது
வளர்க்கலை      பெரிது
வருத்தப்படுதோ      மனது

கோல      நிலவும்
குளிர்ச்சி     அளிக்குமே
குமரி     மடியில் தேடு

ஆழத்தில்     நீந்தினால்
அமைதி      கிடைக்குமே
அன்பால்   எதையும்    வெல்லு

வாலைக்       குமரி
வாழ      வருகிறாள்
வாரிக்     கொடுத்துவிடு

அன்னையின்     கருணை
அகிலம்       காக்குமே
யார்தான்      அவளுக்கீடு

உண்மை      ஒன்றுதான்
உலகை        வெல்லலாம்
உத்தமனாக      வாழு

கண்ணியம்      காப்பாய்
கவலையெத்     தவிர்ப்பாய்
புண்ணியனாக       எழுவாய்

பூமியில்      எவரும்
நிலைத்தவர்     இல்லை
புகழினை    என்றும்நாடு

வருவதும்       போவதும்
வாழ்ந்து      திரிவதும்
வாழவின்     முறைகளாகும்

வள்ளி கணவன்    பெயர்தான்
வாழ்ந்திட    வழியினைத்    தருமே
வல்லமை   அதனால்    பெருகும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக