நிலவில் என்னடி மயக்கம் ---உன்னை
நினைத்திட வருவது கிறக்கம்
உறவில் நீ தரும் நெருக்கம் ---அது
உடனே வேண்டும் எனக்கும்
கண்களை வீசியே வருவாய் ---உன்
கனியிதழ் சுவையினை தருவாய்
என்மனம் எதுவென அறிவாய் --எனக்கு
என்றுமே நீ தானே வருவாய்
நாலடி நடந்தால் போதும் ---முகத்தில்
நாணம் வந்துனை மோதும்
சேலடி கண்களைப் பார்க்கையில் --எந்தன்
சீவனும் போகுமே நீ பார்க்கையில்
இரவினில் நானும் எழுவேன் --உந்தன்
இணையடி தொழுதிட நினைவேன்
மறந்துனை விட்டிட முடியுமா ---என்
மனதின் ஆசைகள் விடியுமா
காலங்கள் ஓடியே போகும் ---அழகு
கண்மணி என்மனம் நோகும்
கோலங்கள் மாறிடக் கூடும் ---குயிலும்
நாமிருவர் வாழ்ந்திடப் பாடும்
நினைத்திட வருவது கிறக்கம்
உறவில் நீ தரும் நெருக்கம் ---அது
உடனே வேண்டும் எனக்கும்
கண்களை வீசியே வருவாய் ---உன்
கனியிதழ் சுவையினை தருவாய்
என்மனம் எதுவென அறிவாய் --எனக்கு
என்றுமே நீ தானே வருவாய்
நாலடி நடந்தால் போதும் ---முகத்தில்
நாணம் வந்துனை மோதும்
சேலடி கண்களைப் பார்க்கையில் --எந்தன்
சீவனும் போகுமே நீ பார்க்கையில்
இரவினில் நானும் எழுவேன் --உந்தன்
இணையடி தொழுதிட நினைவேன்
மறந்துனை விட்டிட முடியுமா ---என்
மனதின் ஆசைகள் விடியுமா
காலங்கள் ஓடியே போகும் ---அழகு
கண்மணி என்மனம் நோகும்
கோலங்கள் மாறிடக் கூடும் ---குயிலும்
நாமிருவர் வாழ்ந்திடப் பாடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக