சனி, 6 ஏப்ரல், 2019

குயில் 640

நிலவில்       என்னடி      மயக்கம்    ---உன்னை
நினைத்திட     வருவது  கிறக்கம்
உறவில்      நீ  தரும்     நெருக்கம்    ---அது
உடனே      வேண்டும்    எனக்கும் 

கண்களை    வீசியே    வருவாய்   ---உன்
கனியிதழ்     சுவையினை    தருவாய்
என்மனம்  எதுவென     அறிவாய்    --எனக்கு
என்றுமே     நீ   தானே     வருவாய்

நாலடி      நடந்தால்    போதும் ---முகத்தில்
நாணம்      வந்துனை     மோதும்
சேலடி     கண்களைப்    பார்க்கையில்   --எந்தன்
சீவனும்      போகுமே     நீ    பார்க்கையில்

இரவினில்      நானும்    எழுவேன்   --உந்தன்
இணையடி   தொழுதிட    நினைவேன்
மறந்துனை     விட்டிட     முடியுமா   ---என்
மனதின்      ஆசைகள்    விடியுமா

காலங்கள்    ஓடியே     போகும்    ---அழகு
கண்மணி    என்மனம்     நோகும்
கோலங்கள்    மாறிடக்     கூடும்     ---குயிலும்
நாமிருவர்       வாழ்ந்திடப்     பாடும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக