அலைபோலப் பாயுது எம்மனசு ----உன்னை
அள்ளிடத் துடிக்குது இளவயசு
சிலைபோல உன்மேனி பொன்னே ---எந்தன்
சீவன் பறிபோகுது கண்ணே
கண்டாலே எந்தன் மனம் ஆடும் --உன்னை
கவிதையில் ஏற்றி வைத்துப் பாடும்
திண்டாடிப் போவதும் சரியா ---நீயும்
திரும்பாமல் செல்வதுவும் முறையா
விழியாலே என்னைவீசிக் கொல்வாய் ---அதனையுன்
வெற்றியென நினைத்துக் கொள்வேன்
பழிசுமந்து வாழ்வதும் தகுமோ --எனது
பாபங்கள் உனைச்சும்மா விடுமோ
நின்றாலும் நடந்தாலும் கூட்டம் ---உன்னை
நினைந்தவர் போடுவார் ஆட்டம்
ஒன்றாகிப் போவதும் எப்போ ---இந்த
உண்மையை சொன்னாலும் தப்போ
கண்ணிலே நிற்கிறாய் ஏனடி ---நீயோ
கற்கண்டு தேன் கலந்த சாறடி
எண்ணாமல் இருப்பதும் என்னடி ---நாம்
இணைவது ஒன்றுதான் நன்றடி
அள்ளிடத் துடிக்குது இளவயசு
சிலைபோல உன்மேனி பொன்னே ---எந்தன்
சீவன் பறிபோகுது கண்ணே
கண்டாலே எந்தன் மனம் ஆடும் --உன்னை
கவிதையில் ஏற்றி வைத்துப் பாடும்
திண்டாடிப் போவதும் சரியா ---நீயும்
திரும்பாமல் செல்வதுவும் முறையா
விழியாலே என்னைவீசிக் கொல்வாய் ---அதனையுன்
வெற்றியென நினைத்துக் கொள்வேன்
பழிசுமந்து வாழ்வதும் தகுமோ --எனது
பாபங்கள் உனைச்சும்மா விடுமோ
நின்றாலும் நடந்தாலும் கூட்டம் ---உன்னை
நினைந்தவர் போடுவார் ஆட்டம்
ஒன்றாகிப் போவதும் எப்போ ---இந்த
உண்மையை சொன்னாலும் தப்போ
கண்ணிலே நிற்கிறாய் ஏனடி ---நீயோ
கற்கண்டு தேன் கலந்த சாறடி
எண்ணாமல் இருப்பதும் என்னடி ---நாம்
இணைவது ஒன்றுதான் நன்றடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக