புதன், 17 ஏப்ரல், 2019

கற்கண்டு 642

அலைபோலப்       பாயுது     எம்மனசு     ----உன்னை
அள்ளிடத்       துடிக்குது        இளவயசு
சிலைபோல      உன்மேனி      பொன்னே   ---எந்தன்
சீவன்       பறிபோகுது      கண்ணே

கண்டாலே       எந்தன்  மனம்       ஆடும்    --உன்னை
கவிதையில்       ஏற்றி வைத்துப்      பாடும்
திண்டாடிப்       போவதும்       சரியா      ---நீயும்
திரும்பாமல்       செல்வதுவும்      முறையா

விழியாலே       என்னைவீசிக்        கொல்வாய்   ---அதனையுன்
வெற்றியென       நினைத்துக்       கொள்வேன்
பழிசுமந்து        வாழ்வதும்       தகுமோ    --எனது
பாபங்கள்       உனைச்சும்மா      விடுமோ

நின்றாலும்       நடந்தாலும்        கூட்டம்     ---உன்னை
நினைந்தவர்        போடுவார்      ஆட்டம்
ஒன்றாகிப்        போவதும்       எப்போ      ---இந்த
உண்மையை      சொன்னாலும்     தப்போ

கண்ணிலே       நிற்கிறாய்       ஏனடி      ---நீயோ
கற்கண்டு        தேன்  கலந்த       சாறடி
எண்ணாமல்       இருப்பதும்       என்னடி     ---நாம்
இணைவது        ஒன்றுதான்       நன்றடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக