ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

சிறுவன் 645

எத்தனை        கோடி     இன்பம்    ---உலகில்
இறைவா       நீ தான்     வைத்தனை
சத்திய     நெறிவளர்      ஜோதியே     ---உந்தன்
சன்னதி     வழங்கிடும்     சமத்துவ   நீதியே

நிற்பன    நடப்பன     நிலத்தில்    ஊர்வன     ---இவைகள்
நிம்மதி     பெற்றிட     நின்னடி     துணையே
கற்பனைக்      கெட்டாத      காவியம்    நீயே     ---நற்
கதி பெற     உன்னையே     தொழுவதும்     முறையே

தமிழினில்      பாடல்கள்     தந்தவன்       நீயே    ---பெற்ற
தாயினைப்     போலவே     காப்பவன்     நீயே
அமிழ்தினும்     இனிய     அருட்பெரும்    ஜோதி     ---உன்னை
அன்புடன்      தொழுபவர்     அடைவதோ     நன்மை

ஏழையின்      இல்லம்       இருப்பவன்      நீயே    ---இங்கு
இயல்       இசை      நாடகம்      எல்லாம்     நீயே
நாளைய     பொழுதின்      நாயகன்       நீயே   ---ஓம்
நமசிவாய    மென்றிடும்      நல்லருள்    நீயே

மான்       மழுவேந்திய      மங்கள       ரூபா    ---மங்கை
பார்வதி      மனைதிகழ்      விசுவாசா
தேனினும்     இனித்திடும்      தேவாரம்     நீயே    ---உன்னை
தினமும்      தொழுதிடும்      சிறுவனும்     நானே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக