எத்தனை கோடி இன்பம் ---உலகில்
இறைவா நீ தான் வைத்தனை
சத்திய நெறிவளர் ஜோதியே ---உந்தன்
சன்னதி வழங்கிடும் சமத்துவ நீதியே
நிற்பன நடப்பன நிலத்தில் ஊர்வன ---இவைகள்
நிம்மதி பெற்றிட நின்னடி துணையே
கற்பனைக் கெட்டாத காவியம் நீயே ---நற்
கதி பெற உன்னையே தொழுவதும் முறையே
தமிழினில் பாடல்கள் தந்தவன் நீயே ---பெற்ற
தாயினைப் போலவே காப்பவன் நீயே
அமிழ்தினும் இனிய அருட்பெரும் ஜோதி ---உன்னை
அன்புடன் தொழுபவர் அடைவதோ நன்மை
ஏழையின் இல்லம் இருப்பவன் நீயே ---இங்கு
இயல் இசை நாடகம் எல்லாம் நீயே
நாளைய பொழுதின் நாயகன் நீயே ---ஓம்
நமசிவாய மென்றிடும் நல்லருள் நீயே
மான் மழுவேந்திய மங்கள ரூபா ---மங்கை
பார்வதி மனைதிகழ் விசுவாசா
தேனினும் இனித்திடும் தேவாரம் நீயே ---உன்னை
தினமும் தொழுதிடும் சிறுவனும் நானே
இறைவா நீ தான் வைத்தனை
சத்திய நெறிவளர் ஜோதியே ---உந்தன்
சன்னதி வழங்கிடும் சமத்துவ நீதியே
நிற்பன நடப்பன நிலத்தில் ஊர்வன ---இவைகள்
நிம்மதி பெற்றிட நின்னடி துணையே
கற்பனைக் கெட்டாத காவியம் நீயே ---நற்
கதி பெற உன்னையே தொழுவதும் முறையே
தமிழினில் பாடல்கள் தந்தவன் நீயே ---பெற்ற
தாயினைப் போலவே காப்பவன் நீயே
அமிழ்தினும் இனிய அருட்பெரும் ஜோதி ---உன்னை
அன்புடன் தொழுபவர் அடைவதோ நன்மை
ஏழையின் இல்லம் இருப்பவன் நீயே ---இங்கு
இயல் இசை நாடகம் எல்லாம் நீயே
நாளைய பொழுதின் நாயகன் நீயே ---ஓம்
நமசிவாய மென்றிடும் நல்லருள் நீயே
மான் மழுவேந்திய மங்கள ரூபா ---மங்கை
பார்வதி மனைதிகழ் விசுவாசா
தேனினும் இனித்திடும் தேவாரம் நீயே ---உன்னை
தினமும் தொழுதிடும் சிறுவனும் நானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக