சனி, 6 ஏப்ரல், 2019

துதிப்பாடல்கள் 641

ஸ்ரீ குருவாயி    அம்மன் ;
உருவாகி     மணமாகி    உலகெங்கும்      வொளியாகி
திருவாகி     தேனாகி     திசையெங்கும்     அரணாகி
குருவாகி    எம்மை      காக்கும்        குலதெய்வமே
வருவாய்       நீ யம்மா     வாழ்வில்    நலம்பெருக்கவே


ஸ்ரீ   ஆதி நாயகன் ;

ஆதிநாயகன்       நம்   அன்னையின்      மைந்தன்    --உயர்
ஜோதி        வடிவினர்     சுந்தர        முகத்தோன்
வேதம்      உரைத்தவர்      விண்ணவர்     தலைவர்  --இவரை
வேண்டித்      தொழுதிடில்      வெற்றிகள்     கிடைக்குமே


ஸ்ரீ  பாலசுப்ரமண்யர்    ;

பாலசுப்ரமண்யர்      நம்   பரமனின்       புத்திரர்     ---தன து
பக்தர்க்கருளும்         பரம    தயாளர்
நீல மயிலேறி      நிலத்தினைக்       காப்பவர்      ---இவரை
நித்தமும்         நினைத்திடில்       நிறையும்      செல்வமே


( இயற்றியவர்     கவிஞர்   திருமாறன் ,   வாயு புத்ரன்  ஆகிய  புனைப் பெயர்களுக்குரிய   குரு .லட்சுமிகாந்தன் -குடிமகன் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக