நிலவு வந்தது நீயும் இல்லையே ---காதல்
நினைவு தந்தது உனது நேசம் தொல்லையே
களவை நினைக்குது கருணை இல்லையே ---எனது
காதல் ஒன்றுதான் கண்ணீர் மழையே
இரவு வந்ததால் இளமை தொல்லையே ---நாம்
இணைந்து விட்டதால் இந்தப் பிழையே
உறவு கொள்ளவே ஒருஉயிரும் இல்லையே ---என்
உயிரில் கலந்தவன் என்பது உண்மையே
நாளும் போகுது நன்மை இல்லையே ---ஒரு
நன்றி என்பதும் உனக்கு வல்லையே
வாழும் காலமும் இனி வசந்தமாகுமா ---என்
வருத்தம் தீர்ந்திடும் நல்ல நாளும் சேருமா
கண்கள் தேடுதே உன்கருணை முகத்தையே --எனது
காதல் கசந்ததோ உனக்கு கவனம் இல்லையோ
பெண்ணாய் பிறந்தவள் எனோ பேதையாகினேன் ---உன்
பிரிய நினைவினில் அல்லவா வெம்பிப் போகிறேன்
வருவது என்றால் வா வா வெகு விரைவிலே --இந்த
வனிதை துயரினை வந்தே போக்குவாய்
தருவது என்பதை என்தலைவா தந்திடு ---பருவ
தாகம் தீர்த்திட எந்தன் தங்கமே வந்திடு
நினைவு தந்தது உனது நேசம் தொல்லையே
களவை நினைக்குது கருணை இல்லையே ---எனது
காதல் ஒன்றுதான் கண்ணீர் மழையே
இரவு வந்ததால் இளமை தொல்லையே ---நாம்
இணைந்து விட்டதால் இந்தப் பிழையே
உறவு கொள்ளவே ஒருஉயிரும் இல்லையே ---என்
உயிரில் கலந்தவன் என்பது உண்மையே
நாளும் போகுது நன்மை இல்லையே ---ஒரு
நன்றி என்பதும் உனக்கு வல்லையே
வாழும் காலமும் இனி வசந்தமாகுமா ---என்
வருத்தம் தீர்ந்திடும் நல்ல நாளும் சேருமா
கண்கள் தேடுதே உன்கருணை முகத்தையே --எனது
காதல் கசந்ததோ உனக்கு கவனம் இல்லையோ
பெண்ணாய் பிறந்தவள் எனோ பேதையாகினேன் ---உன்
பிரிய நினைவினில் அல்லவா வெம்பிப் போகிறேன்
வருவது என்றால் வா வா வெகு விரைவிலே --இந்த
வனிதை துயரினை வந்தே போக்குவாய்
தருவது என்பதை என்தலைவா தந்திடு ---பருவ
தாகம் தீர்த்திட எந்தன் தங்கமே வந்திடு