திங்கள், 27 மே, 2019

தங்கமே 667

நிலவு      வந்தது        நீயும்       இல்லையே   ---காதல்
நினைவு    தந்தது     உனது   நேசம்    தொல்லையே
களவை      நினைக்குது   கருணை     இல்லையே   ---எனது
காதல்      ஒன்றுதான்      கண்ணீர்   மழையே

இரவு      வந்ததால்     இளமை     தொல்லையே    ---நாம்
இணைந்து     விட்டதால்     இந்தப்   பிழையே
உறவு    கொள்ளவே     ஒருஉயிரும்      இல்லையே    ---என்
உயிரில்    கலந்தவன்     என்பது     உண்மையே

நாளும்      போகுது      நன்மை      இல்லையே    ---ஒரு
நன்றி       என்பதும்    உனக்கு   வல்லையே
வாழும்     காலமும்      இனி     வசந்தமாகுமா ---என்
வருத்தம்    தீர்ந்திடும்      நல்ல     நாளும்     சேருமா

கண்கள்     தேடுதே      உன்கருணை      முகத்தையே   --எனது
காதல்    கசந்ததோ    உனக்கு    கவனம்    இல்லையோ
பெண்ணாய்     பிறந்தவள்     எனோ    பேதையாகினேன்    ---உன்
பிரிய   நினைவினில்  அல்லவா   வெம்பிப்    போகிறேன்

வருவது    என்றால்       வா வா   வெகு விரைவிலே  --இந்த
வனிதை      துயரினை      வந்தே       போக்குவாய்
தருவது        என்பதை     என்தலைவா      தந்திடு    ---பருவ
தாகம்        தீர்த்திட      எந்தன்     தங்கமே     வந்திடு 

ஞாயிறு, 26 மே, 2019

நிலவு 666

தங்க      நிலவாய்      தளதளக்கும்    ---உன்னை
தழுவி     அணைத்திட   மனம்     கிளுகிளுக்கும்
அங்கம்     முழுவதும்    நல்ல      அழகுமயம்    ---தினம்
ஆண்டு     ரசித்திட      எனக்குள்     ஆசைமயம்

பொங்கிடும்      அருவியாய்       சிரித்திடுவாய்    ---உடல்
பூரித்து       இளமையில்       அழைத்திடுவாய்
திங்களும்      தோற்றிடும்     தேவியடி    ---உனை
தினமும்      நினைத்து     அலையும்     வேலையடி

காலினில்       சிலம்பு       கலகலக்கும்    ---உந்தன்
கைவளை       ஓசையோ      மெய்சிலிர்க்கும்
நாலடி       நடந்தால்     அது      நாடகமாம்   ---இந்த
நங்கை       மனமென்றும்      அறியாப்     பூடகமாம்

இடையெனும்     பொருளே      இல்லாதவள்  ---அவள்
இயற்கை        கல்வியே      கல்லாதவள்
உடையினில்     மறைத்து     உலா      வருவாள்    ---உண்மையில்
எனக்கு      அவள்தான்      உயிர்    தருவாள்

மனதினில்      கோவில்       நான்        அமைப்பேன்   ---என்
மைவிழி        மாதினை      அங்கே      அமர வைப்பேன்
இனித்திடும்      தமிழினில்      பாட்டிசைப்பேன்    ---அவளை
இமைப்       பொழுதும்       பிரியாமல்      வாழ்ந்திடுவேன் 

வண்ணப் பறவை 665

மனிதன்  : வண்ண    மலர்ச்     சோலையில்   ---தினம்
                      வந்து      சேரும்      பறவைகளே
                      என்ன    சேதி      சொல்லுகிறாய்    ---அதனை
                      ஏற்க        முடியுமா      பார்க்கிறேன்
பறவை ;;    கூடி      வாழுதல்     புரியவில்லை     ---இதனால்
                       குடும்பங்களில்  வருவது    மிகவும்     தொல்லை
                       ஓடி  நீங்கள்    எங்கோ    ஒளிந்தாலும்  --உங்கள்
                        உள்ளத்தில்     என்றேனும்     அமைதி யுண்டா
                        இருப்பதை     அள்ளியே      கொடுக்கணும்  தினம்
                       இரவு  பகலாக     நீங்க      உழைக்கணும்
                       பொறுப்பினை      உணர்ந்து    நடக்கணும்   --அதுவே
                       பூமியில்      வாழ்வதின்     இலக்கணம்
                       சாதி      சமயங்கள்       வேறுபாடு   ---நமக்கு
                       சங்கடம்      விளைப்பது     கண்கூடு
                       நீதி      நெறிமுறை     சொன்னவர்கள்    ---மண்ணில்
                       நிச்சயம்      வேற்றுமை     கொண்டாரா
                       பெண்களை     வாழ்ந்திட     வைத்திடணும்   --அந்த
                       பெருமையில்      ஆணிற்கும்    பங்கு  உண்டு
                       கண்ணியம்      காத்து      நடப்பதினால்   ---தெய்வ
                       கருணையும்     மனிதர்க்கு     கிடைக்குமன்றோ
மனிதன் ;; நல்லவை     சொன்னதால்      கேட்டுக்கிறேன்  --இங்கே
                      நாளையே      அதன்படி      நடக்கவைப்பேன்
                      உருவில்       சிறியது      என்றாலும்    ---நீங்கள்
                     உணர்வினில்     பெரிதாய்     உயர்ந்து     விட்டீர்                     



வெள்ளி, 17 மே, 2019

தேனும்பாலும் 664

கண்ணில்     வைத்துப்      பார்த்து    இருந்தேன்    --அவர்
காதல்        நெஞ்சில்      பூத்து    இருந்தேன்
என்னில்    பாதி நீ     என்றாரே     தோழி    ---எனோ
எங்கோ     போனார்  அவர்  என்றும்   வாழி

அந்தி     சாயும்     மாலை     நேரம்    ---அந்த
அழகிய     ஆற்றங்  கரையின்    ஓரம்
பந்தி     வைத்தது     நினைவில்    இல்லையோ   ---அவர்
பருவப்     பசியைத்     தீர்த்தது     நான்    அல்லவோ

இருவர்       அன்று     ஒருவர்      ஆனோம்    ---நாங்கள்
இளமை      தானம்     செய்து     கொண்டோம்
உருகியே     ஒன்றிப்     போனோம்    அன்று   ---இதனை
உணர்ந்து      கொண்டால்    என்றும்   நன்று

தலைவன்      இல்லாத     தலைவி      ஆனேன்    ---நம்
தமிழை       மறந்த      பிள்ளை    யானேன்
அலையும்   நெஞ்சில்    அமைதி    யில்லை   ---என்
அத்தான்      இன்றி  இங்கு     வாழ்வு    இல்லை

போனவர்     என்னிடம்     வந்திட     வேண்டும்   ---இனி
புதையலாய்     வாழ்வும்    ஜொலித்திட    வேண்டும்
தேனும்        பாலுமிங்கு   கலந்திட      வேண்டும்    ---அன்பு
தெய்வம்     கருணையில்      காத்திட    வேண்டும் 

கன்னி 663

கண்ணின்   மணியே   என்று      உன்னை  ---நான்
காதல்   மொழியில்     அழைத்தல்    உண்டு
என்னில்      பாதி      நீதான்     அன்றோ    ---என்
இதயவாசல்     என்றும்     உனக்குச்   சொந்தம்

பொன்னை      அள்ளியே     பூசிக்கொண்டாய்    ---பொங்கும்
நிலவில்       நல்ல   மஞ்சம்      அமைத்தாய்
கன்னி   உந்தன்     கண்ணடி    பட்டேன்   ---உனது
காதல்      கடலில்     நானே   விழுந்தேன்

இரவு        என்றும்      உறக்கம்      இல்லை  ---என்
இருவிழி     எனோ    மூடவும்    இல்லை
உறவினை   எண்ணி    தினம்     உருகுகின்ரேன்  ---நீயும்
ஓடியே      வந்து      என்னைக்     காத்திட  வேண்டும்

நாளினை      எண்ணிக்      கிடக்கலானேன்   ---நல்ல
நம்பிக்கை     வழியினில்     நடக்கலானேன்
வேளை      எனக்கு       விரைந்திட    வேண்டும்    ---நானும்
வெற்றி     மாலை        அணிந்திட    வேண்டும்

வேலவன்       அருளால்   அந்த  வெற்றி    வேண்டும்    ---நான்
விரும்பிடும்     உன்னையே      மணந்திட     வேண்டும்
காலா       காலங்கள்      வாழ்ந்திட      வேண்டும்   ---இளைய
கன்னியின்      மடியினில்     துயிலவும்      வேண்டும்  

வியாழன், 16 மே, 2019

சேடி 662

நிலவுப்      பெண்ணும்       வருமா   ---நான்
நினைத்த     இன்பமும்     தருமா
பழகிட      நினைத்தால்     சுகமே   ---அதனை
பார்த்து       ரசிக்குது     தினமே

நீரில்       ஆடியே      திளைத்தேன்   ---அவனை
நினைத்து     உடலும்    களைத்தேன்
நேரினில்      சொல்லிடத்    துடித்தேன்    ---தினம்
நெஞ்சினில்     வைத்து    சுமந்தேன்

பருவக்       காலப்      பாட்டு    ---அவன்
பக்குவமாய்     பாடுதல்      கேட்டு
உருகி    உருகியே    சுகித்தேன்   ---அதனால்
உயரே      வானத்தில்     பறந்தேன்

உள்ளதை     அள்ளியே     கொடுத்தான்   ---என்
உதட்டில்    முத்திரை     பதித்தான்
கள்ளனைப்     போல வன்    கவர்ந்தான்   ---நானும்
கன்னித்     தன்மையை     இழந்தேன்

வாழும்       காலம்      வாழ்வேன்    ---என்
வள்ளலை     நினைத்து     மகிழ்வேன்
சூழ்ந்திடும்     இன்பங்கள்    கோடியே    ---நீயும்
சுருக்கவே      வந்திடு       சேடியே 

தீர்வு 661

ஊரை       அடித்து       உலையில்    போட்டாய்   ---இங்கு
உள்ள     நிலத்தை     வளைச்சுப்    போட்டாய்
நீரைத்      திருடி     காசு     பார்த்தாய்    ---செல்லையா
நிற்காமல்      போவது      எங்கே    நீயும்  சொல்லையா

துண்டை     எடுத்து      தோளில்       போட்டாய்    ---தெரு
கோடிவரை     உனக்கு     வீடு    கட்டினாய்
கண்டதெல்லாம்   உனக்குத்தான்   சொந்தமாச்சு   கண்ணய்யா   --நீ
கசக்கிப்     பிழிஞ்சு     காசு      சேர்ப்பாய்     பொன்னையா

இரவு    பகல்    தினமும்     நீ      தூங்குவதில்லை    ---ஆற்றில்
இருக்கும்    மணலை         வாரிக்     கொண்டாய்
உறவென்று     வந்த     போதும்   சின்னையா  ---தினம்
உனக்கு      கப்பம்       கட்ட     வேணும்     என்னய்யா

நல்லவன்      போல     வேஷம்     போட்டாய்   ---உன்னை
நம்பி      வந்தால்      கழுத்தை      அறுப்பாய்
பல்லைக்     காட்டி   சிரித்திடுவாய்     நல்லையா   ---நல்ல
பாசமாக      நடிச்சு      வாரே      செல்லையா

எச்சில்     இலை      சோத்துக்காக    தெருவில்  --இங்கு
ஏழை      படுகிற     பாட்டைப்     பாரு
மச்சு      வீட்டுலே     வாழுறீயே     மன்னனா    ---நீயும்
மனிதர்களை      மதிக்கத்    தெரியாத     மூடனா

பெண்ணாலே  மண்ணில்    பிறந்து    வந்தும்   --மற்ற
பெண்களை      தாயென      மதிக்கவில்லை
கண்டவரைப்      பெண்டாள     ஆசையா    ---உனக்கும்
கடவுள்      ஒருநாள்     தரப்போரார்   பெரிய  பூசையா

காலம்       இங்கே      மாறும்      பாரு    ---அப்போ
உன்கணக்கும்   பார்க்கிற     நேரம்     சேரும்
வேலைகள்      காத்திருக்கு     விரைவிலே    ---செய்த
வினைகளுக்கு    தீர்வு  உண்டு     முடிவிலே  

செவ்வாய், 14 மே, 2019

பள்ளிக்கூடம் 660

நிலவில்      வந்தது       மயக்கம்    ---உனை
நினைக்க     மனதும்    இனிக்கும்
உலவும்      தென்றல்    அழைக்கும்   ---எனக்கு
உனது       உறவும்     பிடிக்கும்

வானம்     வாழ்த்துகள்    சொல்லும்  ---ஆனால்
வாடைக்     காற்றோ     கொல்லும்
தேனும்      பாலும்     கசக்கும்    --நான்
தினமும்     உன்னையே      நினைக்கும்

நீயும்      நானும்      ஒன்று    ---அதனை
நினைத்து     விட்டால்     நன்று
காயும்      நிலவும்     வீணா   ---என்னை
கலங்க     விடுவதும்    ஏனோ

காதல்      கொன்டேன்      உன்மேல்   ---நீயும்
கடைக்கண்     பாரேன்     என்மேல்
மோதல்      என்பது      எதற்கு   ---எனது
மோகம்    தீர்வது     கணக்கு

அள்ளியே      அணைத்திட      வாராய்   --என்
அழகு     மயிலே     ஜோராய்
பள்ளிப்     பாடங்கள்     சொல்லு    ---உனது
பார்வையால்     தினமும்     கொல்லு 

ஆண்டவன் 659

அவன்  :: நினைக்க     நினைக்க    மனம்    இனிக்குது  ---உன்னை
                   நெருங்கி    வளைத்திட   உடல்   துடிக்குது
                  அணைக்கத்   துடிக்கிற    வயசு   அல்லவா  --நீ
                   அனுமதி      தந்தால்   நல்ல சுகம்   அல்லவா
அவள்  ::  கணக்கு      பண்ணிடத்    துடிக்காதே   --உன்
                    காதலை     என்னிடம்    வீணில்    காட்டாதே
                   உனக்கும்    எனக்கும்    என்ன    உறவாய்யா  --நீயும்
                   ஒதுங்கிப்    போனால்    ரொம்பவும்   சரிதான்யா
அவன்  ::  காலில்       விழட்டுமா    நீதான்     சொல்லடி  ---உனது
                    கருவிழி      என்னை     தினமும்    கொல்லுதே
                    பாலில்      விழுந்த்திட்ட    புது பழக்குலையே   --இந்த
                   பாவி       மனம்     உனக்கின்னும்     புரியலையே
அவள் ::  வார்த்தை    ஜாலங்கள்    என்னிடம்    வேகாது   ---உந்தன்
                   வறட்டு     ஜம்பம்     எப்போதும்    உதவாது
                  நினைப்பதை    என்னிடம்    நேரில்    சொல்லாதே    ---நான்
                  நெருப்பாய்     சுடுவேன்    என்பதை     மறவாதே
அவன் :: சொன்னபடி     கேட்கிறேன்    இன்னும்    போதுமா   ---நாம
                   சுகம்  பெற      வழியென்ன      கூறம்மா
                 அன்பினால்      இருவரும்     ஒன்றாய்     சேரலாம்   --அந்த
                 ஆண்டவன்       அருளால்       நன்றாய்     வாழலாம் 

வியாழன், 9 மே, 2019

தர்மதேவதை 658

சொந்தம்      என்றே        சொன்னாலும்     ---நாம
சொக்கிப்     போய்       நின்னாலும்
பந்தமும்      பாசமும்      நிலைக்குமா    ---தாய்
பாசத்திற்கு     இங்கு    இணை  ஏதம்மா

கண்ணில்     வைத்துக்     காத்தவள்   ---நமக்கு
காலம்       முழுதும்     உழைத்தவள்
பெண்ணிற்கு      நிகரிங்கு      கூறம்மா    ---அவளின்றி
பெரியது       உலகினிலே     ஏதம்மா

குருதிக்கொடை     நமக்கு     கொடுத்தவள்   ---நம்
குடும்பம்     காத்திட     வந்தவள்
அருவிபோல்      பொழிவாளே      அன்பிலே   ---அவள்
பெருமை       யாரறிவார்      நம்மிலே

இரவு ம்     பகலும்      விழித்தவள்    ---தனது
இன்பம்     எல்லாம்     மறந்தவள்
உறவுக்காக    உயிர்தருவாள்     உண்மையில்   ---இதனை
உரியவர்கள்    புரிந்து  கொண்டால்   நன்மையே

கோவிலில்     உள்ள     தெய்வம்    ---நம்
குடும்பங்களில்     வாழ்ந்திட     வேண்டி
தாயெனும்     உருவிலே     வந்தது    --அந்த
தர்மமே       மனிதர்களைக்     காக்குது

(உலக     அன்னையர்     தின     சிறப்புப்    பாடல் )

திங்கள், 6 மே, 2019

உன்னைநம்பி 657

ஏழை யென்று     உன்னை     யிகழ்வார்கள்    ---தோளில்
ஏறிநின்று        விஷமமாய்       சிரிப்பார்கள்
கோழையாக     இருக்கலாமோ      தம்பி     ---பிறர்
குட்டக்   குட்ட    குனியலாமோ    நம்பி

நாளைய      உலகம்      நமக்காகும்     ---அதில்
நமது        இடம்      முதலாகும்
வேலையென்று    இறங்கி  விட்டால்    தம்பி    ---அதனை
வெற்றியாக        முடிக்கவேணும்     நம்பி

இரவு  பகல்      வேலை      பாரு     ---உன்னால்
இயன்ற வர்க்கு     நன்மை      சேரு
கறக்கின்ற      மடிதானே     சுரக்கும்   ---வரும்
கவலைகள்     எங்கேயோ     பறக்கும்

வெட்டிப்       பேச்சு    இனியும்      வேண்டாம்   --பிறர்
வேதனையை       ரசிக்க     வேண்டாம்
விட்டதை       பிடிக்கவேண்டும்      உலகிலே    ---அது
வெற்றிக்கு      வழியாகும்     விரைவிலே

கல்விக்       கண்ணை      திறந்து      விடு    ---இங்கே
கல்லாதாரை      கற்றிட     வைத்துவிடு
பள்ளிகள்      திறக்கவேணும்      தம்பி    ---நம்ம
பாரதமே       இருக்குதப்பா     உன்னையயே  நம்பி 

வெள்ளி, 3 மே, 2019

வண்ணப்பறவை 656

காணக்        கருப்பு      அழகன்   ---இரு
காதுவரை    தொடுகின்ற     மீசைக்காரன்
தென்னம்    பாளை     சிரிப்பழகன்    --நல்ல
தெம்மாங்கு     பாடும்      பாட்டுக்காரன்

எட்டினடந்தாலே     அவன் எதிரிகள்     தூளாவார்   ---அங்கு
பட்டையை     கிளப்பி      பந்தாட்டம்     ஆடிடுவான்
வெட்டி  வச்ச    கரும்பென    மேனியிலே    புதுவாசம்   ---அவனை
கட்டியணைக்கும்   என்காதலுக்கு   வருவானோ

கொல்லும்   விழியழகும்     கோவை     சிரிப்பழகும்    --மனம்
கொள்ளை     கொண்டு போக     குமரன்    வருவானா
கள்ளியெந்தன்    மனதில்    காதல்      வந்ததடி    ---அந்த
காதல்     தலைக்கேற    என்கண்கள்    மயங்குதடி

மடியிலே      நான்  துயில     மச்சான்      வருவானோ    ---நான்
மணமுடிக்க     நாளும்      மகிழ்வாக      வந்திடுமோ
துடிக்கும்      என்னையும்    தன்தோளில்    சுமப்பானோ    ---இது
தொல்லை என     என்னையும்     விட்டுப்     பிரிவானோ

எண்ணமதை   சொல்ல       எனக்குத்      துணையில்லையே   ---அன்பு
வண்ணப்   பறவைகளே     வாய்திறந்து      சொல்வீரா
கண்ணில்    விழுந்தவனை    கைவிடவும்    நான்    மாட்டேன்   --இன்று
கனிவாகப்     பேசியவன்      கைகளைப்      பற்றிடுவேன் 

சித்திரை 655

சித்திரை      மாசம்     பொறந்தாச்சு     ---மனசில்
சில்லென்று    ஆனந்தம்     வந்தாச்சு
இத்தரை     எங்கிலும்     பசுமையடி    ---நம்
இந்தியா    சிறந்திடப்     பாடுங்கடி

கூடியே     நின்று     கும்மி      போடுங்கடி    ---நம்
குடும்பங்கள்     வாழ்ந்திட    வேண்டுங்கடி
ஓடியாடி      நன்றாய்    உழைத்திடுவோம்     ---இங்கு
உழவுத்       தொழில் செய்து    வாழ்ந்திடுவோம்

பெண்களைப்       பெரிதாய்     போற்றிடுவோம்     ---அவர்கள்
பெருமையாய் சுகம்பெற      செய்திடுவோம்
கண்களைப்       போன்றது      கற்பாகும்    ---அதனை
காப்பது         அனைவரின்     பொறுப்பாகும்

சாதிசமய       பேரை      சொல்லி     ---இங்கு
சண்டைகள்      எதுவும்     மூட்ட    வேண்டாம்
நீதி வழி       சென்று       வென்றிடுவோம்    ---தர்ம
நியாயத்திற்காக      உயிர்       தருவோம்

படைப்பினில்       மனிதர்கள்       சரிசமமே    ---அதை
பார்த்து    தெளிவது       நல்மனமே
கிடைப்பதை    பிடித்து     முன்னேறு   ---எந்த
கேலிக்கும்    உழைப்பால்    பதில் கூறு 

புதன், 1 மே, 2019

சரிசமம் 654

உலகாளப்       பொதுநீதி      உருவானது     ---மண்ணில்
உழைப்பவர்     குரலே      முதலானது
விளைக்கின்ற    பொருளெல்லாம்     அவராலானது   ---சிந்தும்
வியர்வையே       அவர்பங்கு       முதலானது

கல்லுடைப்போர்க்கும்    நெஞ்சில்     கவலையுண்டு    ---அவரது
கண்ணீரை   துடைப்பதில்   நமக்கென்ன    நஷ்டமுண்டு
அல்லும்    பகலும்     உழைப்பது      தெரியாதா    ---அவர்கள்
அயர்ந்தாலே      நம்நிலை    என்னவெனப்      புரியாதா

மாட      மாளிகை   உயர் மச்சுவீடுகள்     யாராலே   ---தினம்
மாடாய்      வெய்யிலில்   உழைத்து    தேய்பவராலே
தேடிச்     சென்று     நாமும்     உதவி கள்   செய்திட    வேண்டாமா ---இந்த
ஜகத்தினை    இனியேனும்      நாமும்      மாற்றிடக்      கூடாதா




குடிசை       வீட்டிற்கும்       ஒளியைக்     கொடு     ---அவர்
குடும்பங்கள்      வாழ்ந்திட     வழியைக்     காட்டு
அடிமை      எண்ணமதை     இன்றேனும்    விலக்கி    விடு   ---நாம்
அனைவரும்     சரிசமமென    இங்கே      வாழ்ந்துவிடு

உழைப்பவர்    நன்றாய்     வாழ்ந்த்திட      உறுதி ஏடு   ---உன்
மனவாசல்   பிறர்க்கென     திறந்து  விடு
களைக்கின்ற     ஏழைக்கும்    உந்தன்     கையைக்    கொடு  ---அவரது
கண்ணீரை     மாற்றி  சுகம் பெற    புதுவாழ்வு      கொடு
(மே   தின    சிறப்புப்    பாடல் )

கருணை 653

அப்பனைப்       பாடுவேன்      ---அவரின்
அருளினைப்     பெற வேண்டும்
என் அம்மையைப்      பாடுவேன்     ---நிறைய
பொருள்    தர வேண்டும்

எப்பவும்       பாடுவேன்    ---இங்கே
எனக்கு     எல்லாமும்    வேண்டும்
இகபர      சுகம்     நல்கிடும்    ---என்
இன்னரும்       தெய்வமே

அற்புத      உலகினை   ---அன்பால்
அமைத்ததும்       நீயே
ஆருயிர்      அனைத்தையும்     ---மண்ணில்
படைத்தவள்       தாயே

மண்ணிலே      உயிர்கள்    --வானத்து
மழையினால்      பயிர்கள்
எண்ணற்ற       நன்மைகள்    ---எங்கள்
இறைவனே      நீ  தந்தது

கன்னல்       தமிழால்    ---உந்தன்
கருணையைப்      பாடுவேன்
காலங்கள்     மாறிடினும்     ---தூய
காலடி      தனை மறவேன்