திங்கள், 30 ஜூன், 2014

தென்றல் 250.

கனவா    நனவா
 காதல்    மலரா
 கண்டேன்  உன்னையடி

 நினைவா   நிகழ்வா
 நேசம்   குறைவா
 நெஞ்சம்   துடிக்குதடி

 புத்தம்    புதிது
 பொங்கும்   இளமை
 பூத்துக்   குலுங்குதடி

 வாளின்   வீச்சு
 வாங்குது   மூச்சு
 வற்றாப்   பொய்கையடி

 சொர்க்கம்   இதுவோ
 ஜொலிக்கும்   மதுவோ
 சுகமே   நீயேயடி

 கண்ணால்    பார்த்தாய்
 காலில்   வீழ்ந்தேன்
 எண்ணப்  புதுமையடி

 ஏக்கம்   தந்தாய்
 என்னைக்   கொன்றாய்
 தூக்கம்   போனதடி

 தனியே   வந்தால்
 தழுவி   அணைப்பேன்
 தஞ்சம்   நீயேயடி

 மஞ்சம்   அழைக்கும்
 மலர்கள்   சிரிக்கும்
 கொஞ்சல்  இனிக்குமடி

 நிலவாய்   சிரித்தாய்
 நிதமும்   அழைத்தாய்
 உலவும்   தென்றலடி 

கேள்விகள் 249.

வானம்    நிலவை    வெறுக்குமா
 வாழ்க்கை    என்றும்    கசக்குமா
 தேனின்      இனிப்பு    நீங்குமா
 தெரிந்தால்   பதிலை   சொல்லுவாய்

 கண்களை    காட்சி    மறைக்குமா
 காலம்    நிலையாய்  நிற்குமா
 பெண்கள்  துயரம்   தீருமா
 பொறுமை   வாழ்விலே   வெல்லுமா

 சந்திரர்    சூரியர்    மாறுமா
 சாத்திரம்   தவறினை   செய்யுமா
 மந்திரம்   மாயம்    செல்லுமா
 மாதரின்   பெருமை   குறையுமா

 ஆழியில்   நீரும்   வற்றுமா
 ஆகாயம்   மண்ணிலே   இறங்குமா
 கருணை   என்பது   கடினமா
 காரிகை   இதற்குப்   பதிலென்ன

 இரவே    பகலாய்   இயங்குமா
 ஈகை     என்பது    பாபமா
 உறவே   பகையை  வளர்க்குமா
 உத்தமி    பதிலினை   சொல்லடி

 நினைவு    கனவாய்    நிகழுமா
 நேசம்    நிம்மதி    இழக்குமா
 இளமை    என்றுமே    நிலைக்குமா
 இதற்கும்   பதிலினைக்   கூறடி

 எழுத்தினை    எண்ணம்    என்பதா
 இயற்கை    செயற்கையாய்    போகுமா
 கிழக்கும்   மேற்காய்    திரும்புமா
 கிளியே   விடையினை    சொல்லம்மா

 நீலம்   விண்ணினை   மறக்குமா
 நிஜமே    பொய் யிடம்   தோற்குமா
 பாலின்    வெள்ளை   மாறுமா
 பதிலை இன்றே    சொல்லடி

 பிறந்தவர்   என்றும்   இருப்பாரோ
 பிழைகள்   சரியென   தேறுமா
 கறந்தது   மடியினில்   திரும்புமோ
 கள்ளியே    நீயும்    சொல்லடி

தாகம் 248.

விண்ணில்    ஓடும்    மேகங்களே -தினம்
 விரைந்து    பறக்கும்    காகங்களே
 கண்ணீர்    கதையை   சொல்லுகிறேன் -அதனை
 கனிவாய்    கேட்டுக்    கொள்வீரே

 அழகு நிறைப்    பெண்    ஒருத்தி -ஏனோ
 அலைய    வைத்தாள்    எனைவருத்தி
 உலவும்    காற்றுநீ    செல்லாயோ -எனது
 உள்ளம்    வருந்துதல்    சொல்லாயோ

 கள்ளம்    கபடு    எதுவுமில்லை -அவளது
 காதல்    தருவது  பெருந்தொல்லை
 வெள்ளத்தில்   வீழ்ந்தது    போல் -பிரிவு
 வேதனையில்   வெந்து   நொந்தேன்

 கண்ணீர்   மழை   பொழிந்தேன் -அந்த
 கரத்தினை   பற்றிட  நானலைந்தேன்
 என்னை    மணம்   புரிவாளோ -நல்ல
 இன்பத்தில்   சிரிக்கவைப்பாளோ

 தழுவி    எந்தனை     அணைப்பாளோ -தீரா
 தாகத்தை     தீர்த்து   வைப்பாளோ
 நிலவில்    நெஞ்சம்    கனிவாளோ -இதனை
 நினைத்து   நிதம்    மகிழ்வாளோ

 இத்தனையும்   நீங்கள்   எடுத்துரைப்பீரோ -அந்த
 இனியவள்   என்னிடம்  வருவாளோ
 பித்தம்   தெளிந்திட   மருந்துண்டோ -இந்த
 பேதை   நலம்பெற    வழியுமுண்டோ

ஞாயிறு, 29 ஜூன், 2014

மயக்கம் 247.

அழகிற்கு    அழகானாய் -என்
 அறிவுக்குத்    துணையானாய்
 பழகிடக்     கனியானாய் -அன்பே
 என்பசிக்கு  விருந்தானாய்

 தேனிற்கு   சுவைபோலே -நல்ல
 தீந்தமிழ்    சொல்போலே
 கண்ணிற்கு   ஒளிபோல -எனது
 கருத்தினை   நீகவர்ந்தாய்

 எத்தனை    இரவுகளோ -அதில்
 ஏக்கமே     வரவாகும்
 முத்தத்தில்    நான்னனைந்தேன் -சகியே
 மோகத்தில்   கொன்றதென்ன

 உன்னையே   தினம் நினைத்தேன் -கனவில்
 உன்னுடல்   நானனைத்தேன்
 இன்னுமா   மனக்கலக்கம் -அட
 என்னடி    புதுமயக்கம்

 மயக்கத்தில்   ஆழ்த்துகிறாய் -காதல்
 மையலில்     வீழ்த்துகிறாய்
 தயக்கத்தில் நான்தவிக்க -எங்கே
 தையலே    ஓடுகிறாய்

 வாடுது     என்மனது -தினம்
 வதங்குது  இள வயது
 தேடுதல்   புரியல்லையோ -அழகு
 தேவதை   பதில்சொல்லு 

சனி, 28 ஜூன், 2014

நேசம் 246.

காற்றில்    ஆடும்    செடிகள் -இங்கே

 நல்ல    கவிதை    வழங்கலாம்
 கனிந்த    காதல்    ஒருநாளில் -நம்
 கைகள்    மீறிப்    போகலாம்

 ஆற்றில்    தோன்றும்    குமிழ்கள் -பார்க்க
 அழகாய்    நமக்குத்    தெரியலாம்
 அடுத்த கணம்    ஏனோ    அவையும் -வீணில
 அழிந்து    ஒளிந்து    போகலாம்

 நேற்று    நடந்த    நிகழ்வுகள் -ஏனோ
 நினைவை     விட்டு    நீங்கலாம்
 நேசம்     பாசம்    அன்பெல்லாம் -சிலர்
 நெஞ்சம்    மறத்தல்    ஆகலாம்

 அழுத     ஏழை     கண்ணீர் -என்றும்
 அழிக்கும்    வேலை    செய்யலாம்
 அன்பு    வழியில்    சென்றாலோ -முடிவில்
 அதிக    வெற்றி    அடையலாம்

 இன்ப    துன்பம்    என்பதெல்லாம் -உலகில்
 எல்லோர்    வாழ்வில்    பாதிதான்
 இறைவன்    என்பான்    ஒன்றுதான் -இதனை
 ஏற்றால்    வருவது    நன்மைதான்

 இளமை    முதுமை    என்பதுவும் -மண்ணில்
 இயற்கை    செய்யும்    வேலைதான்
 ஏற்றம்    தாழ்வு    வருவதும் -நல்ல
 இதயம்    அளிக்கும்    செய்கைதான்

 பொன்னும்    பொருளும்    தேடுவோர்கள் -வாழ்வில்
 பொறுமை    என்பதை    மறப்பதோ
 பூமித்    தாயை    மகிழ    வைத்தோர் -பெரும்
 புகழில்    சிறந்து    வாழலாம் 

புதன், 25 ஜூன், 2014

இதயஜோதி 245.

நிலவுக்கு    அழகினை    அளித்தவன் -வானில்
 நிறங்களை    அள்ளியே    தெளித்தவன்
 மலருக்குள்    மணத்தினை    மறைத்தவன் -நம்
 மனதினை    ஆள்கிற     மாயவன்

 நீருக்குள்     நிலத்தினை    அமைத்தவன் -மக்கள்
 நெஞ்சத்தில்   அன்பினை    விதைத்தவன்
 வேருக்குள்    நீரையும்     கொடுத்தவன் -உலகோர்
 வேதனை     போக்கிடும்     தூயவன்

 வாவென    அழைத்ததும்     வருபவன் -பொருளை
 வாரியே      அள்ளித்    தருபவன்
 தாயென    உயர்களைக்    காப்பவன் -என்றும்
 தஞ்சம்    அளித்திடும்    நல்லவன்

 ஏழையின்    கண்ணீர்    துடைப்பவன் -அவர்
 இதயத்தை    கோவிலாய்க்   கொண்டவன்
 நாளைய    உலகிற்கும்    புதியவன் -தமிழ்
 நன்மறை    போற்றிடும்    நாயகன்

 கருணைஎனும்    சொல்லிற்கு    உரியவன் -அவன்
 காலங்களை    வென்றிட்ட     மூலவன்
 இருளினை    விலக்கிடும்     இனியவன் -எல்லோர்
 இயக்கத்தில்    ஜோதியாய்    ஒளிர்பவன்

 நீதியைக்    காத்து     நிற்பவன் -தீய
 நெஞ்சினை   நஞ்சென    நினைப்பவன்
 ஆதியும்     அந்தமும்    இல்லாதவன் -அந்த
 அருளினைப்    போற்றியே     வாழுவோம்

திங்கள், 23 ஜூன், 2014

இளமானே 244.

ராகங்கள்  பதினாறு என்ற   மெட்டில்
      காலங்கள்    உருவாகும்
       கவிதைகள்     வரவாகும்
 நான்  சொல்லும்  வார்த்தை   புரியாததா

 கனிவான     பார்வைகள்
 நம்காதலை   உருவாக்கும்
 கண்ணான    உன் எண்ணம்   அறிவேனம்மா

 அழகாக   நடைபோடும்
 உன் அறிவென்னை   எடை போடும்
 பழமாகும்   நம்காதல்   வளமாகுமே

 இளமாலைப்   பொழுதாகி
 நாமிருவரும்   ஒன்றாகி
 களவாடும்   நாளும்   விரிவாகுமே

 இனியென்ன    கவலைகள்
 இல்லையே   இன்னல்கள்
 எந்நாளும்   நம்வாழ்வு   பொன்னாகுமே

 உன்னோடு    நானாவேன்
 உறவுக்கு    துணையாவேன்
 எப்போதும்   நிறைவாகும்    சந்தோஷமே

 இருபிள்ளை    பெறவேண்டும்
 நம்மெதிர்காலம்    இனிதாகும்
 இல்வாழ்வில்    நாமென்றும்   சுகமாகலாம்

 இறையோனின்    அருளாலே
 இப்போதும்    மகிழ்வாலே
 கரைமீறிப்   புதுவெள்ளம்   பாய்ந்தோடுமே

 கண்ணனின்   கண்பட்டால்
 கருமேகம்    கலைந்தோடும்
 இன்னமும்   சஞ்சலம்   உனக்கேனம்மா

 இளமானே    என்தேவி
 உனை என்னாளும்    மறவேனே
 எனக்கிங்கே  உனையன்றி    கதியாரம்மா ....

சனி, 21 ஜூன், 2014

இளமை 243.

கண்ணிலே    தோன்றும்
 காட்சிகள்     யாவும்
 கனவாகிப்    போகுமோ -அன்பே
 காலம்       கைகூடுமோ

 எண்ணத்தில்    வசிக்கும்
 எழில்வண்ண    முகமும்
 மின்னலாய்       மாறுமோ -வெண்
 மேகங்கள்      சூழுமோ

 மண்ணிலே  வீழ்ந்திடும்
 மழைத்துளி  யாகினேன்
 பெண்ணாய்  பிறந்தேன் -இனி
 பெருமைகள்  சேருமோ

 உன்னிலே    நானும்
 என்னிலே   நீயும்
 ஒருவராய்  மாறினோம் -அன்றே
 ஒன்றியே   போயினோம்

 எத்தனை    எண்ணம்
 இளமையின்   வண்ணம்
 அத்தனை    சுகமும் -மன
 அமைதியை  நல்குமோ

 எந்தனை    நீங்கியே
 எங்குநீ    போனாய்
 சுந்தர    வடிவே -எனது
 சொர்க்கமும்   நீயே

 கனிந்தது   காதல்
 முடிந்தது   மோதல்
 இனிதாக   வாழுவோம் -நாமினி
 இவ்வுலகை   ஆளுவோம் 

புதன், 18 ஜூன், 2014

பழக்குலை 242.

கண்ணில்    தெரியுது   வண்ணம் -அதில்
 கலந்து    நிற்குது   எண்ணம்
 உன்னில்    மலர்ந்தது   நாணம் -அடி
 உனக்கு      வந்ததேன்   மௌனம்

 நீயாய்    வந்தாய்    எதிரே -உனது
 நினைவு    எனக்குப்    புதிரே
 தீயாய்    சுடுகிறது    என்ன -கொம்பு
 தேனே    நீதான்    பெண்ணே

 மணநாள்    என்று    காண்போம் -நம்
 மனதில்    மகிழ்வினை    உண்போம்
 கணமும்    பிரியேன்    உன்னை -நீ
 கனிந்து    விளைந்திட்ட   தென்னை

 ஏக்கம்    நான்விடும்    மூச்சு -என்றும்
 இனிக்கும்    உந்தன்    பேச்சு
 தூக்கம்    என்பதோ    போச்சு -இரவில்
 துடிக்கும்    நிலையென   ஆச்சு

 அழகிற்கு    நானென்றும்    அடிமை -உன்னை
 அனுதினம்   தொழுவது    கடமை
 பழுத்திட்ட    பழக்குலைக்   கொத்து -அந்தப்
 பாற்கடல்    வழங்கிய    முத்து

 உயிருக்குள்     ஒன்றாய்    இருப்போம் -காதல்
 உணர்வினில்    இன்றே    கலப்போம்
 நிலவுக்குள்    ஒளியினைத்   தேடி -எனது
 நிலையினைப்    புரிந்து    நீவாடி 

தெய்வம் 241.

கருவாய்    இருந்தேன் -அன்று
 கருத்தாய்    ம ல ர்ந்தேன்
 பெறுவேன்    நலமே   அம்மா -எனது
 பிறப்பும்    உன்னால்   அம்மா

 உயிராய்    நுழைந்தேன் -அன்பு
 உன்னால்    வளர்ந்தேன்
 எல்லாம்    உன்னால்   அம்மா -நான்
 என்றும்    பணிவேன்   தன்னால்

 அமுதம்    உண்டேன் -நல்
 அழகினைக்    கொண்டேன்
 புவியில்    மனிதன்   யானே -எனக்குப்
 புகழைத்    தந்தவள்   நீயே

 பள்ளியில்    படித்தேன் -பல
 க லைகள்     அறிந்தேன்
 சொல்லிட    மகிழ்ச்சி   அம்மா -என்றும்
 சொர்க்க மும்    நீயே   அம்மா

நாயாய்    அலைந்தேன் -உயர்
 நன்றியைப்    பெற்றேன்
 தாய்போல்    உண்டோ   அம்மா -வாழ்வில்
 தஞ்சம்    உன்னடி   அம்மா

 எத்தனை    பெற்றும் -நான்
 என்னமோ    கற்றும்
 உத்தமி    உன்போல்   உண்டோ -அதனால்
 உன்னையே    தெய்வம்   என்பேன் 

புதன், 11 ஜூன், 2014

கருமை நிறக் கண்ணா 240.

கண்ணா   வருவாய்   கனவில் -மனம்
 கனிவேன்   உனது   நினைவில்
 உன்னால்   உயர்வு   அடைந்தேன் -நான்
 உன்னடி    தொழுவேன்  என்றும்

 பொன்னார்   மணியே   பொழிலே -வரும்
 மின்னல்    மேக (ம்)   மழையே
 கண்ணா   கருமை   கண்ணா -எனது
 கவலையை  தீர்க்கும்  மன்னா

 நினைத்தால்   உடனே   வருவாய் -பலர்
 நெஞ்சுக்கு   நிம்மதி   தருவாய்
 அனைத்திலும்   உள்ளவன்   நீயே -உலகில்
 ஆதியும்    அந்தமும்    தாயே

 மங்கையின்   மானம்   காப்பாய் -அவள்
 மாண்பினை   மண்ணிலே   சேர்ப்பாய்
 கங்கைக்   கரையிலும்   வாழ்கிறாய் -உன்னை
 கண்டவர்   மனங்களை   ஆள்கிறாய்

 நீரிலும்   நிலத்திலும்   இருக்கிறாய் -நல்ல
 நீதியை    மறந்தால்    வெறுக்கிறாய்
 தூணிலும்   துரும்பிலும்   உறைகிறாய் -என்றும்
 தூயவர்    வணங்கிடும்   மறையாகிறாய் 

செவ்வாய், 10 ஜூன், 2014

பெண்ணே 239.

நிலவால்   மலர்ந்தேன் -காதல்
 நினைவால்   வளர்ந்தேன்
 கனவாகுமா   காதல் -கண்ணா
 நமக்கேன்   வாடல்

 கண்ணால்   அழைத்தாய் -நீ
 கணையை   தொடுத்தாய்
 பெண்ணே   இதுவும் சரியோ -இனி
பேதமாகுதல்   முறையோ

 இரவால்   இளைத்தேன் -என்
 இதயம்   நனைத்தேன்
 உறவால்   வாழ்வேன் -உலகில்
 உன்னாலன்றோ   எல்லாம்

 நன்றாய்   இருப்போம் -நாம்
 நலமாய்   மகிழ்வோம்
 என்றுமிங்கே   சுகமே -ஏனோ
 உனக்கிந்த   குணமே

 என்னை   மறந்தேன் -உன்னை
 என்னுள்   இணைத்தேன்
 கண்ணில்  காட்சிநீயே -எனது
 கவலை  யுனக்கு   கேலியோ

 நாளையே    வருவேன் -உன்னை
 நன்மணம்   புரிவேன்
 வேளை வந்தது   கண்ணே -விசனம்
 வேண்டாம்   பெண்ணே 

இளமைக் காலம் 238.

காலம்    நல்ல     காலம் -புதிய
 கவிதை   ஊறும்   நேரம்
 கோலம்   செய்யும்   ஜாலம் -அதில்
 கொஞ்சும்   இளமை   வாழும்

 வான   வில்லின்   வண்ணம் -மனதில்
 வந்து   குதிக்கும்   எண்ணம்
 கானக்  குயிலின்   பாட்டு -நமது
 காது    இனிக்கும்   கேட்டு

 சலசலவென   ஓடும்   அருவி -எங்கும்
 சப்த   ஸ்வரங்கள்   பாடும்
 ஆலம்   விழுதில்  கிளிகள் நம்மை
 ஆலோலம்   பாடி   அழைக்கும்

 வட்ட   வடிவ   நிலவு -நீல
 வான   வெளியில்   உலவும்
 கட்டுக்   கடங்கா   நெற்கதிர்கள் -கொஞ்சம்
 கனிவாய்  தலையை   ஆட்டும்

 துள்ளும்   இளமைக்    கூட்டம் -தமது
 துடிப்பை   செயலில்  காட்டும்
 பள்ளி   அறையில்   பாடம் -நல்ல
 பதமாய்   விடிய   நடக்கும்

 சொல்ல   சொல்ல   இனிக்கும் -அந்த
 சுவையில்  சொர்க்கம்  கிடைக்கும்
 அள்ள   அள்ள   வளரும் -தூய
 அன்பில்   உலகம்   செழிக்கும் 

செவ்வாய், 3 ஜூன், 2014

புதிய வாழ்வு 237.

நிலவைப்   பார்த்து   ரசிப்பேன் -உன்னை
 நினைச்சுப்   பொழுதைக்   கழிப்பேன்
 விளக்கம்   என்னம்மா   கண்ணே -அதையும்
 விரைந்து   சொல்லு   பெண்ணே

 துட்டு   நிறைய   இருக்கா -அட
 சொல்லிப்   போடு   சுருக்கா
 வெட்டிப்   பேச்சு   வேணாம் -நீ
 விரசா   ஓடுய்யா   தூரம்

 கோவம்   எதுக்கு   மானே -உன்னை
 கொஞ்ச   வேணும்   நானே
 மாமன்   முறையா   ஆவேன் -நானே
 மணக்கப்   போறேன்   தானே

 ஊரு   பாத்தா   உதைக்கும் -இப்ப
 உனக்கு   இதுவா   பொழப்பு
 பேரு   கெட்டுப்   போகும் -பொறவு
 பெருசா   சண்டை   மூளும்

 வானம்   எட்டிப்   பிடிப்பேன் -எனது
 வாழ்க்கை   முழுதும்   சுமப்பேன்
 தானம்   பெருசு   அம்மா -உனது
 தாளில்   கிடப்பேன்   தஞ்சம்

 இருவரும் ;சண்டை   போட்டுக்   கிடந்தோம் -நாம்
 சமரசம்   ஆகியே   இணைந்தோம்
 பெண்டு   பிள்ளை   பொறக்கும் -இனிமே
 நமக்குப்   புதிய வாழ்வு   கிடைக்கும் 

திங்கள், 2 ஜூன், 2014

புதையல் 236.

ஆற்றில்   வரும்   மீனும் -என்
 அழகி   உந்தன்   கண்ணோ
 பார்த்து  உன்னை  ரசிப்பேன் -உனக்குப்    
 பக்க   பலமாய்   இருப்பேன்

 ஆடி   அசையும்   அழகு -அந்த
 அஜந்தா   ஓவிய  மெருகு
 பாடிப்   பறக்கும் குயிலும் -தேவியின்
 பக்கம்  வந்திட   மிரளும்

 பாலின்   நிறத்தில்   பற்கள் -இந்தப்
 பாவை   உடலோ   கணைகள்
 வேலும்   கண்ணில்  உண்டு -இவளின்
 விவரம்  அறிவது   நன்று

வாளை   மீனின்  செழுமை -நீயோ
 வார்த்து  வைத்திட்ட  பதுமை
 பாளை   சிரிப்பில்   கொல்வாய் -உற்று
 பார்ப்பவர்   மனதையும்   வெல்வாய்

வாழை   தோற்கும்   கால்கள் -பொன்னில்
 வடிவம்   கொண்ட   சிலையோ
 ஆளை   அசத்தும்   உருவம் -உனக்கு
 அனைவரை   வென்றிடும் கர்வம்

 வெல்லமாய்   இனிக்கும்   பேச்சு -எனக்கு
 வியர்த்து    வாங்குது   மூச்சு
 கொள்ளை   அழகுக்   குவியல் -இங்கு
 குவித்து   வைத்த   புதையல்