ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

சித்திரை 652

சித்திரை      மாத       முழு நிலவில்     ---நம்
தீர்த்தக்     கரை     அருவி    யோரத்தில்
அத்தை    மகள்     எனக்கெனக்     காத்திருந்தாள்     ---அங்கு
அவள்      அழகை     ரசித்திட      நானும்     அருகிருந்தேன்

கைகள்       என்னவோ       வாழை      மடல்     ----அவள்
காதுகள்      இரண்டுமே     தாழை     மடல்
நெய்யில்      செய்தது      போல     உடல்     ---நான்
நெருங்கிடக்      கண்டேன்    ஆழக்     கடல்

கட்டி       அணைக்கையில்      உடல்     சிலிர்க்கும்   ---அவள்
கைவளை    ஓசையில்      மனம்        துடிக்கும்
பெட்டிப்      பாம்பென      என்னையும்     மாற்றிவிட்டாள்    --கரும்
பின்னலில்      சிக்கிப்      பிரியம்     கொண்டேன்

கண்களை      அம்பாக்கி    என்னைக்    கொய்து      விட்டாள்    ---தன
கருவிழி     சாடையில்      புதுக்      கவிதை      சொன்னாள்
அன்பினில்      என்னையும்      ஆட்டி      வைத்தாள்      ---தன
அழகினால்     நெஞ்சுக்குள்    என்னைப்      பூட்டி    வைத்தாள்

பெண்ணாய்ப்     பிறந்த      அவள்      பேரரசி    ---அவள்
பின்னால்      செல்லும்    நானோ    விசுவாசி
எண்ணி      எப்போதும்      நீ      யோசி     ---நான்
என்றும்      தொடர்வேன்     அவளோடு     கதை பேசி 

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

தென்னை 651

ஏழை       நானென்பேன்   --என்
இருவிழிகள்     மழை    பொழியும்
நாளை      நமதென்பேன்   ---அதில்
நல்லவை      உருவாகும்

உண்மையின்      வழிசென்றால்    --இந்த
உலகம்        சுகமாகும்
நன்மைகள்    செய்துவிடில்     ---உனக்கு
இந்த நாடே       வசமாகும்

அன்பினைக்       கடைப்பிடிக்க    ---நீயும்
அடைவது        வெற்றியடா
பண்பின்      வழி     தொடர்ந்தால்   --எந்த
பாறையும்        தூளாகும்

பெண்களை      மதிப்பதனால்    ---நீ
பெறுவது       நல்லவைகள்
கண்களை      திறந்துவிடு     ---அதில்
கருணையை      தேக்கிவிடு

நாலடி        நடக்கியிலே    ---உன்னுடன்
நல்லவை      கூடவரும்
நம்பிக்கை     கொண்டுவிடு    ---அதுவே
நம்மையும்      வாழவிடும்

ஏசுதல்        செய்யாதே     ---பிறரை
எள்ளி        நகையாதே
வீசிடும்     பூங்காற்றாய்      ---தினமும்
வெற்றிகள்      குவித்திடுமாய்

உன்னையே      நம்பிவிடு     ---அதனால்
உயர்வுகள்      நிச்சயமே
தென்னையைப்       போலிருப்பாய்    ---இந்த
ஜெகத்தினை       ஜெயித்திருப்பாய்

வள்ளிக்கணவன் 650

வாழ்வு       சிறிது
வளர்க்கலை      பெரிது
வருத்தப்படுதோ      மனது

கோல      நிலவும்
குளிர்ச்சி     அளிக்குமே
குமரி     மடியில் தேடு

ஆழத்தில்     நீந்தினால்
அமைதி      கிடைக்குமே
அன்பால்   எதையும்    வெல்லு

வாலைக்       குமரி
வாழ      வருகிறாள்
வாரிக்     கொடுத்துவிடு

அன்னையின்     கருணை
அகிலம்       காக்குமே
யார்தான்      அவளுக்கீடு

உண்மை      ஒன்றுதான்
உலகை        வெல்லலாம்
உத்தமனாக      வாழு

கண்ணியம்      காப்பாய்
கவலையெத்     தவிர்ப்பாய்
புண்ணியனாக       எழுவாய்

பூமியில்      எவரும்
நிலைத்தவர்     இல்லை
புகழினை    என்றும்நாடு

வருவதும்       போவதும்
வாழ்ந்து      திரிவதும்
வாழவின்     முறைகளாகும்

வள்ளி கணவன்    பெயர்தான்
வாழ்ந்திட    வழியினைத்    தருமே
வல்லமை   அதனால்    பெருகும் 

கவியரசு 649

சிறு கூடற்பட்டி      வளர்    தென்றலே      போற்றி    ---தமிழ்
திரையுலகில்    பாடல்    புனைந்த    தேனமுதே    போற்றி
அருவி நீர்     பொழிவதுபோல்    அமையுமுன்    கவிதை    --எமது
அம்மை   சிவகாமி   அருள் பெற்ற   அன்பரே    போற்றி

காற்றினிலே     உன்பாடல்   கச்சிதமாய்       ஒலிக்கும்   --நம்
காதுகளில்     தேன்பாய    களிப்பை அள்ளித்   தெளிக்கும்
நாற்றிசையும்     புகழ் மணக்கும்    நற்கவிஞ      போற்றி   ---உயர்
கற்பகத்தார்      அருள் பெற்ற       கவிமழையே    போற்றி

கண்ணனுக்குத்    தாசனாகி     கவிதையிலே   வென்றாய்   --தமிழ்
கவிஞரிலே    தலைமகனாய்       கலையுலகில்    நின்றாய்
அன்னைத்    தமிழ்    பெற்றெடுத்த    அழகு  முத்தையா    வாழ்கவே ---உம
அடிபணிந்து    போற்றுகிறோம்    அன்ப      இவண்    மீண்டும்    வருகவே  

சொர்க்கவாசல் 648

மாயக்கார         கண்ணன்       வந்தான்     ---பசு
மாடுகளை   மேய்த்திடவே     கண்ணன்    வந்தான்
ஆயர்குடி  சிறப்புப்பெற     கண்ணன்   வந்தான்   ---நம்மில்
அன்புகாட்டி     ஜாலம் செய்ய     கண்ணன்     வந்தான்

வேய்ங்குழலை   இசைத்திடவே    கண்ணன்      வந்தான்    ---இனிய
வேணுகானம்    நாம்    கேட்க     கண்ணன்    வந்தான்
பாவிகளை     அழிப்பதற்கு     கண்ணன்      வந்தான்   ---மண்ணில்
பரந்தாமன்     பெயர்      கொண்ட    கண்ணன்    வந்தான்

கீதையை    நாம் படிக்க    நல்ல   ஞானம்      தந்தான்   ---அதை
கேட்பவர்க்கு      எந்நாளும்    இன்பம்      தந்தான்
ராதையின்      மனதில்     அவனே     நின்றான்    --அன்று
ராசலீலை   யாவையும்     கண்ணன்   செய்தான்

தர்மமதைக்     காத்துநிற்க    உலகில்    வந்தான்    ---தன
தங்கை    மானம்   காக்க   அவனே    நின்றான்
அதர்மங்கள்    அழிப்பதற்கு     அரியாய்     வந்தான்   ---தெருவில்
ஆடிப்பாடி    நம்மனதைக்     கொள்ளை     கொண்டான்

கண்ணவன்    திருப்பெயரை      தினமும்      சொல்லு    ---வரும்
கவலைகளை   நீயும் இன்று     விலக்கித்   தள்ளு
சொன்னபடி    நம்மிடையே    கண்ணன்     வந்தான்   ---நமக்கு
சொர்க்க     வாசல்     திறந்திடவே     கண்ணன்     செய்தான் 

திங்கள், 22 ஏப்ரல், 2019

தங்கம் 647

மச்சான்       பேரு        மன்னாரு    --அவர்
மயங்கி       எனோ      நின்னாரு
அச்சாரம்      ஒன்னு     தந்தாரு     --பொறவு
அதுக்கும்      மேலயும்      போவாரு

ஊரை       சுத்தப்       போவாரு    ---அங்கே
உதையும்    வாங்கி     வருவாரு
பேரை       கெடுத்துக்    கொள்வாரு     ---எனோ
பின்னால்      திரும்பி      அழுவாரு

மச்சான்      மனசு     தங்கம்தான்    ---என்னை
மயக்க   வைக்கிற     சிங்கம்தான்
மிச்சம்      காசுகள்      சேக்கலை      ---தினமும்
மீதம்       பிடித்திடத்      தெரியலே

உழைச்சு      நல்லாவே       பொழைக்கணும்    --நாம
உசந்த        வாழ்வும்        வாழணும்
களைச்சுப்     போகிற       வயசிலே    ---உலகில்
கஷ்ட்டம்        இல்லாமே      நிலைக்கணும்

கடவுள்       கண்ணைத்      திறக்கணும்      ---எங்க
கவலை      எல்லாமும்     தீரணும்
நடவு        நல்லபடி       விளையணும்     ---நம்ம
நாடும்        செழுச்சு      உயரணும்


கொல்லிமலை 646

கண்ணில்      வைத்துப்        பாக்கிறேன்    ---உன்
காதலை       நெஞ்சில்       வேர்க்கிரேன்
முன்னில்     வந்துவிடு    மன்னவா     ---எனக்கு
மோகம்      தலைக்கேறுது     தென்னவா

இரவு        முழுதும்        விழிப்பேன்    ---உன்னோடு
இணைந்திட       நாளொன்று     பார்ப்பேன்
உறவு     கொள்ள   மனமும்     நாடும்    ---உன்
மடிதனில்       நான் துயில     வேண்டுமே

பள்ளியறைப்      பாடங்களை     சொல்லு     ---வரும்
பகல்        இரவை       நீயும்       விட்டுத்     தள்ளு
அள்ளியே     அணைத்திட     வா   அன்பரே    --இந்த
அடிமையை    காத்திட     வந்திடு    நண்பரே

எடுக்க      எடுக்கவும்       இன்பமாகும்    --நீயும்
இல்லை    யென்றால்  அது   துன்பமாகும்
படித்த        பாடமதைக்       காட்டுவாய்      ---எனக்கு
பரவசத்      தேன்   அள்ளி      ஊட்டுவாய்

ஓடியாடி     உழைப்பினை      செய்வோம்     ---தினம்
உரிய        பொருள்       சேர்த்திடுவோம்
தேடி வந்த       செல்வம்     நீதானே     ---உனக்கு
தித்திக்கும்    கொல்லி  மலைத்தேன்    நான்தானே 

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

சிறுவன் 645

எத்தனை        கோடி     இன்பம்    ---உலகில்
இறைவா       நீ தான்     வைத்தனை
சத்திய     நெறிவளர்      ஜோதியே     ---உந்தன்
சன்னதி     வழங்கிடும்     சமத்துவ   நீதியே

நிற்பன    நடப்பன     நிலத்தில்    ஊர்வன     ---இவைகள்
நிம்மதி     பெற்றிட     நின்னடி     துணையே
கற்பனைக்      கெட்டாத      காவியம்    நீயே     ---நற்
கதி பெற     உன்னையே     தொழுவதும்     முறையே

தமிழினில்      பாடல்கள்     தந்தவன்       நீயே    ---பெற்ற
தாயினைப்     போலவே     காப்பவன்     நீயே
அமிழ்தினும்     இனிய     அருட்பெரும்    ஜோதி     ---உன்னை
அன்புடன்      தொழுபவர்     அடைவதோ     நன்மை

ஏழையின்      இல்லம்       இருப்பவன்      நீயே    ---இங்கு
இயல்       இசை      நாடகம்      எல்லாம்     நீயே
நாளைய     பொழுதின்      நாயகன்       நீயே   ---ஓம்
நமசிவாய    மென்றிடும்      நல்லருள்    நீயே

மான்       மழுவேந்திய      மங்கள       ரூபா    ---மங்கை
பார்வதி      மனைதிகழ்      விசுவாசா
தேனினும்     இனித்திடும்      தேவாரம்     நீயே    ---உன்னை
தினமும்      தொழுதிடும்      சிறுவனும்     நானே  

சனி, 20 ஏப்ரல், 2019

தென்றல் 644

 சின்ன       இடை     சிங்காரி     ---அவள்
சீனப்      பட்டு     ஒய்யாரி
கன்னல்    தமிழ்     பேச்சுக்காரி    ---பிறரை
கண்ணால்     வளைக்கும்     மாயக்காரி

மின்னலென      நடை    நடப்பாள்    ---வரும் 
 மேகத்தையும்      குடை     பிடிப்பாள்
கன்ன       கதுப்பு      அழகில்   ---அவள்
காண்பவரை     அலைய   வைப்பாள்

என்ன      சொல்லிப்    பாடிடுவேன்   ---அவள்
இடையை     தொட்டு    ஆடிடுவேன்
தென்றல்     வரும்    வேளையிலே    ---அவளோடு
தேன்நிலவு      நானும்      போய்விடுவேன்

இரவு         பகல்       இனியேது    ---அவள்
இருக்கும்      இடம்     சொர்க்கமே
உறவிலே       மழை      பொழியும்     ---என்
உள்ளம்       எல்லாம்     நிறையும்

வாலைக்       குமரி     யவள்    ---நன்கு
வடித்து       வைத்த      சிற்பமவள்
ஆலையில்    கரும்பாய்    என்னையே    --இங்கு
ஆக்கி வைத்து      எதற்கோ       சிரிக்கிறாள் 

காலம் 643

கண்களில்     வைத்துக்     காத்திருக்கிறேன்     ---உன்
காதலால்       என்மனம்     பூத்திருக்குதே
விண்ணிலே     உலவும்    வெண்மதியே   ---உன்னை
விரும்பி       பாடுதல்      என்விதியே

கண்களில்      கவலைகள்     ஏனடி     ---உன்னை
காப்பவன்     என்றும்      நானடி
பெண்களில்     அரியவள்      நீயடி      ---எனக்கு
பிரிவினை       அளிப்பதும்     ஏனடி

தொட்ட     இடமோ        புகழ் மணக்கும்    ---உன்
கோவை     இதழில்     தேன்வடியும்
கட்டிக்       கரும்படி      உந்தன் மொழி   ---உன்னை
காதலித்து     திரிவது     எந்தன்   வழி

கல்லில்       வடித்த      சிலையானேன்     --உன்
காதலில்    துடிக்கும்    நிலையானேன்
சொல்லால்      அடித்து     சென்றாயடி     ---நான்
சுகம்பெற     வழியொன்று     சொல்லாயோ

காலம்        ஒருநாள்      கைகொடுக்கும்    ---என்
கணமணி    உன்மனம்     கனிந்துவிடும்
வேளை      வருமெனக்      காத்திருப்பேன்    ---உன்னை
விருந்தாக்கி       தினமும்     மகிழ்ந்திருப்பேன் 

புதன், 17 ஏப்ரல், 2019

கற்கண்டு 642

அலைபோலப்       பாயுது     எம்மனசு     ----உன்னை
அள்ளிடத்       துடிக்குது        இளவயசு
சிலைபோல      உன்மேனி      பொன்னே   ---எந்தன்
சீவன்       பறிபோகுது      கண்ணே

கண்டாலே       எந்தன்  மனம்       ஆடும்    --உன்னை
கவிதையில்       ஏற்றி வைத்துப்      பாடும்
திண்டாடிப்       போவதும்       சரியா      ---நீயும்
திரும்பாமல்       செல்வதுவும்      முறையா

விழியாலே       என்னைவீசிக்        கொல்வாய்   ---அதனையுன்
வெற்றியென       நினைத்துக்       கொள்வேன்
பழிசுமந்து        வாழ்வதும்       தகுமோ    --எனது
பாபங்கள்       உனைச்சும்மா      விடுமோ

நின்றாலும்       நடந்தாலும்        கூட்டம்     ---உன்னை
நினைந்தவர்        போடுவார்      ஆட்டம்
ஒன்றாகிப்        போவதும்       எப்போ      ---இந்த
உண்மையை      சொன்னாலும்     தப்போ

கண்ணிலே       நிற்கிறாய்       ஏனடி      ---நீயோ
கற்கண்டு        தேன்  கலந்த       சாறடி
எண்ணாமல்       இருப்பதும்       என்னடி     ---நாம்
இணைவது        ஒன்றுதான்       நன்றடி 

சனி, 6 ஏப்ரல், 2019

துதிப்பாடல்கள் 641

ஸ்ரீ குருவாயி    அம்மன் ;
உருவாகி     மணமாகி    உலகெங்கும்      வொளியாகி
திருவாகி     தேனாகி     திசையெங்கும்     அரணாகி
குருவாகி    எம்மை      காக்கும்        குலதெய்வமே
வருவாய்       நீ யம்மா     வாழ்வில்    நலம்பெருக்கவே


ஸ்ரீ   ஆதி நாயகன் ;

ஆதிநாயகன்       நம்   அன்னையின்      மைந்தன்    --உயர்
ஜோதி        வடிவினர்     சுந்தர        முகத்தோன்
வேதம்      உரைத்தவர்      விண்ணவர்     தலைவர்  --இவரை
வேண்டித்      தொழுதிடில்      வெற்றிகள்     கிடைக்குமே


ஸ்ரீ  பாலசுப்ரமண்யர்    ;

பாலசுப்ரமண்யர்      நம்   பரமனின்       புத்திரர்     ---தன து
பக்தர்க்கருளும்         பரம    தயாளர்
நீல மயிலேறி      நிலத்தினைக்       காப்பவர்      ---இவரை
நித்தமும்         நினைத்திடில்       நிறையும்      செல்வமே


( இயற்றியவர்     கவிஞர்   திருமாறன் ,   வாயு புத்ரன்  ஆகிய  புனைப் பெயர்களுக்குரிய   குரு .லட்சுமிகாந்தன் -குடிமகன் )

குயில் 640

நிலவில்       என்னடி      மயக்கம்    ---உன்னை
நினைத்திட     வருவது  கிறக்கம்
உறவில்      நீ  தரும்     நெருக்கம்    ---அது
உடனே      வேண்டும்    எனக்கும் 

கண்களை    வீசியே    வருவாய்   ---உன்
கனியிதழ்     சுவையினை    தருவாய்
என்மனம்  எதுவென     அறிவாய்    --எனக்கு
என்றுமே     நீ   தானே     வருவாய்

நாலடி      நடந்தால்    போதும் ---முகத்தில்
நாணம்      வந்துனை     மோதும்
சேலடி     கண்களைப்    பார்க்கையில்   --எந்தன்
சீவனும்      போகுமே     நீ    பார்க்கையில்

இரவினில்      நானும்    எழுவேன்   --உந்தன்
இணையடி   தொழுதிட    நினைவேன்
மறந்துனை     விட்டிட     முடியுமா   ---என்
மனதின்      ஆசைகள்    விடியுமா

காலங்கள்    ஓடியே     போகும்    ---அழகு
கண்மணி    என்மனம்     நோகும்
கோலங்கள்    மாறிடக்     கூடும்     ---குயிலும்
நாமிருவர்       வாழ்ந்திடப்     பாடும் 

வாழிய நாடு 639

வாழிய  நாடு     ---நம்
பாரத    நாடு
வளம்     பெறப்    பாடு --என்றும்
நம்  வாழ்வில்     அன்போடு

சூழ்ந்திடும்       கடல்கள்   --நமது
சுதந்திரம்       காக்கும்
சொல்லினில்  நேர்மை   ---என்றும்
சுகம்     பெற  வைக்கும்

வாழ்ந்திடும்    மாந்தர்   ---தம்முள்
வளர்ப்பது     சிநேகம்
வறியோர்க்   கீவதில்   ---நாம்
வளர்ப்போம்     விவேகம்

அன்பினை     வளர்ப்போம்   --நல்
அகிம்சையில்    உயர்வோம்
பண்பினை       மதிப்போம்   --வரும்
பகைமையை     அழிப்போம்

இந்தியராக      பிறந்திட     ---நாம்
என்ன   தவம்     செய்தோம்
ஏழ்மையை      போக்கிட     ---இங்கு
எல்லோரும்     உழைப்போம்

அன்பெனும்     வழிதனில்     ---நாம்
அனைவரும்     நடப்போம்
அயர்வின்றி     உழைத்தால்   ---நாட்டில்
அண்டுமோ      வறுமை

பெண்களின்     பெருமை    --பிறர்
புரிந்திட      வைப்போம்
பேதங்கள்     போக்கி  --அவர்களை
பெருமையாய்    நினைப்போம்

எங்கிலும்      உழைப்பு     --நமக்கு
இனியெங்கே      களைப்பு
இந்தியா      வெல்க   ---என்பது
நம்மவர்     நினைப்பு