சனி, 21 செப்டம்பர், 2013

kalavaada-172.

களவாட வந்தான் -அவனைக்
 கைதாக்கிக்  கொண்டேன்
 உளம் மாறியதாலே -நான்
 ஒன்றாகக்  கலந்தேன்

 நெருப்பாக  நின்றான் -நானோ
 நீராகிக் கொண்டேன்
 பொறுப்பாக  வாழ்ந்திட -நல்ல
 புத்திபல  சொன்னேன்

 சீரான  உருவம் -அழகு
 சிலையாக  வடிவம்
 கூரான  மீசை -தினம்
 கொஞ்சிடவே  ஆசை

 சிங்கமாய்  சிரித்தான் -ஏனோ
 சிறுபிள்ளை  ஆனேன்
 அங்கங்கே  சிலிர்ப்பு -அடியே
 யாரிதற்கு  பொறுப்பு

 தேனான  இளமை -அது
 திகட்டாத  புதுமை
 நானாக  இல்லை -அங்கு
 நாமென்று  ஆனோம்

 களவாட  வந்தான் -அவனே
 கணவனாக   ஆனான்
 உளமாற  சொன்னேன் -என்றும்
 உண்மை  இது உண்மை 

வியாழன், 19 செப்டம்பர், 2013

mothalum kaadhalum-171.

நிலவாகும் எந்தன் நெஞ்சம்
 நினைவாலே என்மனம்  கொஞ்சும்
 கனவாகுமோ  காதல் மஞ்சம்
 காலடி  என்னுடல்  தஞ்சம்

 அவள்::
 மாயங்கள்  செய்திடும்  மன்னவனோ
 மையலைக்  கொண்டிட்டமாலவனொ
 காதல்  என்பது  பேதமையே
 கற்று  உணர்தல்  நிமதியே
 அவன்:
 நீயின்றி  எப்படி  பிழைப்பேன்
 நித்தமும்  பெயரிட்டு  அழைப்பேன்
 வாழ்வது  எந்நாளும்  உன்னோடு
 வந்திடு  அன்பே  என்னோடு
 அவள்
 பொறுப்பின்றி  பேசுதல்  முறையோ
 பின்னாலே  வருவது  சரியோ
 எண்ணத்தை  இன்றேனும்  மாற்று
 இல்லையேல்  ஆடுவேன்  கூத்து
 அவன்
 அலையின்றி கடலிங்கு  இல்லை
 அழகின்றி  வாழ்வது  தொல்லை
 வயலுக்கு மழைபோல  தேகம்
 வாழ்க்கையில்  வந்ததே  மோகம்
 அவள்
 உன்னைக்  கண்டாலே  வெறுப்பு
 உளறலுக்கு  நான்தானா  பொறுப்பு
 கண்ணைக்  கவருமா  காதல்
 காலத்திற்கும்  உன்னாலே  மோதல்
 அவன்
 என்ன  தவறுகள்  செய்தேன்
 இதயத்தில்  ஓரிடம்  கொடுத்தேன்
 அன்னம் மறந்து  நாளாச்சு
 அழகியே  உனக்கு  நானாச்சு
 இருவரும்
 நிலவுக்கு  ஒளியாக  இருப்போம்
 நினைத்ததும்  எங்கேயோ  பறப்போம்
 களவுக்கும்  பேர்போன  காதல்
 கருத்தினில்  நமக்கேது  மோதல்

புதன், 18 செப்டம்பர், 2013

kalai vaani-170.

கலை  யாவும்  கண்டேன்
 களிப்பே  நான்  கொண்டேன்
 உலகு  ஆளும்  தேவி
 உந்தனைப் பாட  வந்தேன்

 வரம்  வேண்டி  நின்றோர்
 உனது  வாசலில்  நிற்ப்பார்
 நிறம் பார்த்து  நீயும்
 நினைப்பது  இல்லை  தாயே

 அகிலத்தை  காக்கும்  அன்னையும் நீயே
 ஆடுவோர்   ஆடலை  அழிப்பதும் நீயே
 புவனமே  போற்றும்  புனிதவதி நீயே
 பொங்கிடும்  கடலின்  சந்கொலியும் நீயே

 சங்கரி சக்தி  சாஸ்வதம் நீயே
 சமரிலே  வென்ற  சாமுண்டி நீயே
 எங்களின்  இதயம்  என்றுமே நீயே
 எளியோரைக்   காக்கும் ஈஸ்வரியும் நீயே

 திங்களும் மதியும்  திசைகளும் நீயே
 தேனாறு  பாயும்  வரலாறும் நீயே
 பெண்களைப் போற்றும் பெருங்கருணை நீயே
 பேதமை நீக்கிடும்  பெரும் சக்தி நீயே

 மலர்     தூவி  துதிப்பேன்
 மனதில்  தினம் நினைப்பேன்
 கலை சார்ந்த  வாழ்வினை
 கனிந்து அருள்க  அம்மா 

திங்கள், 16 செப்டம்பர், 2013

idhayam-169

கவிஎன்ன  சொல்லும்
 கதையென்ன கேட்கும்
 கண்ணுறங்கும்  நிலையிலே

 காதல்  கதை பேசுமா
 கண்ணில்  வலை வீசுமா
 கற்பனையில்  வாழும் நிலையிலே

 உறவென்ன சொல்லும்
 உணர்வென்ன  செய்யும்
 உள்ளத்து  ஆசைவலையிலே

 நிலையென்று நினைக்கும்
 நிஜமென்று  நம்பும்
 நிம்மதியில்லாப்  பொழுதிலே

 அழுதாலும்  ரசிக்கும்
 அன்பானால்  இழுக்கும்
 அநியாயக்காரர்  மனதிலே

 கொடுப்பாரை  ஏசும்
 குணம்கெட்டு  திரியும்
 கொள்கையில்லா  வாழ்விலே

 இழந்தாலும்  சிரிக்கும்
 இருப்போரை  துதிக்கும்
 இதயமேயிலார் வழியிலே 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

siru pillai-168.

மானாடும்  சோலை -வண்ண
மலராடும்  வேளை
 மீனாடும்  கண்ணாள் -புது
 மின்னலாய்  வந்தாள்

 ஏனென்று  கேட்டேன் -அவள்
 எள்ளியே  சிரித்தாள்
 நானென்று  சொன்னேன் -சற்று
 நளினமாய்  முறைத்தாள்

 ஈரெட்டு  வயது -நல்ல
 இளமையில்  மனது
 கால் தொட்டு  கூந்தல் -இரு
 கண்களில்  மையல்

 பேரென்ன  என்றேன் -தன
 பின்னலை  இழுத்தாள்
 ஊரென்ன  என்றேன் -ஏனோ
 உற்றென்னைப்  பார்த்தாள்

 தங்கத்தில்  அங்கம் -அது
 தணலாக  மின்னும்
 சிங்கமாய்  சிலிர்ப்பு -நம்
 செந்தமிழ்  வனப்பு

 முத்தாக  சிரிப்பு -வான்
 முழுமதியின்  வார்ப்பு
 பித்தாகிப்  போனேன் -சிறு
 பிள்ளை  போலானேன்

 கொத்தாகப்  பறித்தாள் -என்னை
 கொலை செய்து  விட்டாள்
 செத்தாலும்  மறவேன் -அவள்
 சீரடியை  தொடர்வேன் 

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

kaadhal paravaikal-167.

காற்றில்  சிறகடிக்கும் -இளம்
 காதல் பறவைகளே
 பார்க்கும்  என்மனநிலையை -என்
 பதியிடம்  சொல்வீரோ

 கன்னம்  கருப்பழகன் -நல
 காதல்  விழியழகன்
 பெண்கள் மயங்கிடும் -தூய
 பேரழகு  செல்வமவன்

 நிமிர்ந்த  நடையழகன் -அவன்
 நேச  மொழியழகன்
 உயர்ந்த  வடிவழகன் -என்
 உள்ளத்தை  யள்ளியவன்

 கட்டி  அணைக்கையிலே -மூன்று
 காலமும்  மறந்துவிடும்
 வெட்ட  வெளியினிலும் -அந்த
 விசயமும் நடந்துவிடும்

 சிந்தை   அணுவினிலே -அவனின்
 சில்மிஷம்  கலந்துவிடும்
 பந்தென  அவனகையில் -நான்
 படும் துயர்  யாரறிவார்

 காண  முடியாமல் -அவனிடம்
 கற்றதை  சொல்லாமல்
 வீணே  புலம்புகிறேன் -இந்த
விவரத்தை  சொல்வீரோ

 உடலும்  இளைத்ததம்மா -இருக்கும்
 உள்ளம்  களைத்ததம்மா
 கடலில்  துரும்பானேன் -அவனைக்
 கண்டாலே சொல்லிடுங்கள்

வியாழன், 12 செப்டம்பர், 2013

thozhi-166

ஒருநாள்  வந்தான்  இரவில் -என்
 உடலில்  கலந்தான்  உறவில்
 மறுநாள் வருவானென நினைத்தேன் -ஏனோ
 வரவே  இல்லையே  தோழி

 சிலநாள்  தனியே  அழுதேன் -அவனை
 சிந்தையில்  வைத்தே  தொழுதேன்
 திருநாள்  மறத்தல்  சரியா -எனக்கு
 தேறுதல்  சொல்வாய்  தோழி

 ஈருடல்  ஒன்றென  ஆனோம் -அந்த
 இன்பத்தில்  எங்கயோ  போனோம்
 போனவர்  வந்திட  இல்லை -நான்
 புழுதியில்   கிடக்கின்ற  முல்லை

 கண்களில்  மழைநீர்  கொட்டும் -அவன்
 காதலில்  என்மனம்  வாட்டும்
 பெண்களில்  நானொரு  பேதை -தினம்
 புலம்பித்  தவிப்பது  காதை

 உடலை  ஒருநாள் துறப்பேன் -அந்த
 உத்தமனை  எப்படி  மறப்பேன்
 வயலைக் காப்பது  மேகம் -ஏனோ
 வாட்டத்தில் உருகுதே  தேகம் 

புதன், 11 செப்டம்பர், 2013

gunaseelan-165

மனநிலை  குறைந்த  மாந்தர் -நல்ல
 மகிழ்வினைப்  பெறுதல் வேண்டி
 குணமெனும் சீலன் கோவிலை -தம்
 குடும்பத்தோடு சேர்தல்  நலமாம்

 அலைகடலில்  தூங்கும் மாலன்-நல
 அன்பர்க்கு அருளும் சீலன்
 கலைமிகு  வண்ணம் கொண்டான் -அவனை
 கவி  பாடி வாழ்த்தல்  சுகமே

 நின்றிடும்  கோலம்  கண்டோம் -உடனே
 நிலைத்திடும் பேறு  கொண்டோம்
 அன்பனை  தொழுது  நின்றால் -இனி
 அவனருள் பெறுதல்  எளிதே

 அள்ளியே  தரும்  வள்ளல் -விட்டு
 அகலுமே  நமது  அல்லல்
 சொல்லியா  புரிய வேண்டும் -அவரது
 சுந்தரப்  பெருமை கோடி

 நாடியே  வந்த பேர்கள் -என்றும்
 நலமது அடைவார்  திண்ணம்
 வாடிய மனிதர் காக்க -இங்கே
 வந்திட்ட  கருணை  அன்றோ

 திருமலை செல்ல  முடியா -நெஞ்சில்
 தீதிலா  மாந்தர்  எல்லாம்
 குணமெனும் சீலன் பாதம் -பற்றி
 கும்பிட்டு  மகிழ்தல்  உண்டு 

sagiyae-164

கண்ணன்  வருவானோடி -சகியே
 காரிருளில்  தன்னிலெனைக்
 கட்டியே அணைத்து -என்
 கனியமுதம்  பருகிய   (கண்ணன் )

 உணவு  பிடிக்கவில்லை -சகியே
 உறக்கம் சிறிதுமில்லை
 கிறக்கம்  பிடித்ததடி -மனசில்
 கிலேசம்  வளர்ந்ததடி  (கண்ணன்)

 கைவளை  கழன்றதடி -சகியே
 கண்கள்  சிவந்ததடி
 மேனி வலிக்குதடி -எனது
 வேதனை  அறிவாயோடி(கண்ணன்)

 நட்ட  நடுஇரவில் -அந்த
 நம்பி  கலந்தானேடி
 வெட்க  மிகுந்ததடி -இதை
 வெளியில்  சொல்லாதேடி  (கண்ணன்)

 சொல்லத்  தெரியவில்லை -சகியே
 சுந்தர  முகமழகு
 அள்ளி  அணைத்தானே -என்னை
 அன்பினில்  நனைத்தானே (கண்ணன்)

 தந்தை  அடிப்பாரோ -சகியே
 தாயும்  துடிபபாளோ
 சிந்தையில்  புகுந்தானே -ஏனோ
 ஜீவனை  வென்றானே  (கண்ணன்)

 தவிக்க  விடுவானோ -சகியே
 தழுவிட  வருவானோ
 துடிக்கும்  மனநிலையை -அவனிடம்
 தூது  நீசொல்லாயோ  (கண்ணன்)

  

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

kannan

வானில்  எங்கும்  பறந்தேன் -இந்த
 வாழ்க்கை  முழுதும்  திரிந்தேன்
 காணும்  பொருளில் எல்லாம் -என்
 கண்ணன் உன்னையே கண்டேன்

 நீல  மேக  வர்ணம் -உன்
 நிறத்தை  எனக்கு  காட்டும்
 கோலக் குயிலின்  ஓசை -எனக்கு
 குழலின் இனிமை  ஊட்டும்

 மின்னும்  அழகு  மேனி -புது
 மோக  வலையைப்  பின்னும்
 கன்னக்  குழியின்  சிரிப்பு -வந்த
கவலை  போக்கி இழுக்கும்

 கங்கைக்  கரை யோரம் -அவன்
 காதல்  லீலை  தொடரும்
 மங்கை  மனதில் காதல் -என்றும்
 மயக்கம் நிறையப்  படரும்

 காலில்  சலங்கை  ஓசை -பெண்கள்
 கண்டால் மனதில்  ஆசை
 பாழும்  வெட்கம்  தடுக்கும் -ஆனால்
 பாசம் இன்னும் பேருக்கும்

 கண்ணன் பெயரைச்  சொல்ல -நெஞ்சில்
 கவிதை  நிறையப்  பிறக்கும்
 மண்ணை  தின்ற  மாயன் -அன்று
 மாடு  மேய்த்த  ஆயன்

 காக்கும்  கடவுள்  கண்ணன் -அன்பு
 காதல் கலையில் மன்னன்
 நீக்கமற எங்கும்  நிறைந்தான் -அவனை
 நினைந்து  பாடி  மகிழ்வேன்