திங்கள், 9 மார்ச், 2009

கவிஞன்










கடவுளும்
கவிஞனும் ஒன்றல்லவா-அதை
கற்பனை செய்திடல் நன்றல்லவா
புவியைபடைத்தவன் கடவுளெனில்-அழியா
புகழை பெற்றவன் கவிஞனன்ரோ

கண்ணில் தோன்றும் காட்சிகளை -நல்ல
கற்பனை
உருவம்- கொண்டமைத்து
மண்ணில்
படைத்திடும் பிரமனவன் - தினம்
மாயங்கள்
செய்திடும் மன்னனவன்

இருவர் மனதிலும் களங்கமில்லை -உலக
இன்ப
துன்பத்தை வென்றநிலை
ஒருவர்
வேலையும் முடியவில்லை -இதை
உலகம் இன்னமும் உணரவில்லை

காணும்
பொருள் உயிர்வகைகள்
கடலும் நிலமும் மற்றவைகள்
கடவுள்
படைத்தவை அழிவதுண்டு-ஆனால்
கவிஞன்
படைத்தவை அழிவதில்லை

1 கருத்து: