செவ்வாய், 10 மார்ச், 2009

வள்ளல்








வந்ததை
இங்கு யாரறிவார் -பின்
வருவதை யார் முன் உணர்ந்திடுவார்
யந்திரம் போல்வது வாழ்கையென - இன்னும்
ஏனோ
மனிதா உணராயோ

வாழ்க்கை என்பது நீரோட்டம் -இதை
மறந்து திரிபவர் பேயாட்டம்
தாழ்வு
வாழ்வு மிங்கு சூதாட்டம்-இதில்
தன்னை மறந்திடில் போராட்டம்

ஆய்ந்து நன்றாய் அறிவதற்கே -நல்ல
அறிவை
அதிகம் கொடுத்தானே
தேர்ந்து உயர்ந்து விளைந்திடாது -வீணே
தேம்பி
அழுவதிலே லாபமுண்டோ

வாழும் காலம் அறிபவர் யார்
வந்தவர்
நின்றவர் யாரிருப்பார்
பாழும்
வுலகின் இயல்புதனை -தினம்
பகுத்து வகுத்து கண்டவர் யார்

உழைத்தவன் வலுத்தவன் இருப்பதில்லை
ஒருநாள்
மண்ணில் மறைந்திடுவர்
நிலைத்தவர் பூமியில் யாரேனிலோ -தன்
நெஞ்சினை பிறர்க்கு அளித்தவன் தான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக