
காவிரிக் கரை யோரம் - நான் கண்ண அயர்ந்து படுத்திருக்க பூவிரி எழில் முகத்தாள்-பொற் குடம் கொண்டு வந்தாள்
"வா" வென சொன்னது கண்கள் -சுற்றி வளைத்திடத் துடித்தன கைகள் "தா" வெனக் கெஞ்சின அத ரம்-அந்த தைய லோ இன்பத்தின் சிகரம் !
காவிய கண்ணகியோ -இல்லை கற்பனை பூங்குயிலோ ஓவிய பெண்ணழகோ -அவள் ஊர்வசி தன் மகளோ ?
தங்கம் அங்கமாய் அமைந் ததுவோ -முகம் தாமரை மலரில் செய்ததுவோ பொங்கும் இளமை வ்ழிந்ததுவோ -அது பூவையை தேடி வந்ததுவோ?
அன்னம் நடையில் தோற்றிடுமோ -இடை ஆண்களை வென்றிடும் பெரும் படையோ கன்னம் இரண்டும் குங்குமமோ -அவள் காலடி உலகம் சரண் புகுமோ ?
"வா" வென சொன்னது கண்கள் -சுற்றி வளைத்திடத் துடித்தன கைகள் "தா" வெனக் கெஞ்சின அத ரம்-அந்த தைய லோ இன்பத்தின் சிகரம் !
காவிய கண்ணகியோ -இல்லை கற்பனை பூங்குயிலோ ஓவிய பெண்ணழகோ -அவள் ஊர்வசி தன் மகளோ ?
தங்கம் அங்கமாய் அமைந் ததுவோ -முகம் தாமரை மலரில் செய்ததுவோ பொங்கும் இளமை வ்ழிந்ததுவோ -அது பூவையை தேடி வந்ததுவோ?
அன்னம் நடையில் தோற்றிடுமோ -இடை ஆண்களை வென்றிடும் பெரும் படையோ கன்னம் இரண்டும் குங்குமமோ -அவள் காலடி உலகம் சரண் புகுமோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக