
உலகாள கருவின்றி
உருவின்றி பயிராகி
நிலமாள வந்தவள் நீ
பலகாலம் நிலையாகி
பாரெங்கும் புகழாகி
குலமாதர் இனமாவாய் நீ
எதிர்த்தாளும் அழியாமல்
எடுத்தாலும் குறையாமல்
புதிருக்கு விடையாவாய் நீ
படைகொண்ட பெரு வீரர்
படிப்புள்ள பெரியோர்கள்
அடிதொழ நிற்பவள் நீ
இறவாத பல நூல்கள்
எரிகின்ற அருட்தீபம்
இருந்திட காரணம் நீ
சதிராடும் விழி மாதர்
தருமாடற் சுவையெல்லாம்
தனதாக கொள்பவள் நீ
தீராத பெருந்தாகம்
தீண்டிட புது மோகம்
மாறாத இளங்கன்னி நீ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக