
கடவுளும் கவிஞனும் ஒன்றல்லவா-அதை
கற்பனை செய்திடல் நன்றல்லவா
புவியைபடைத்தவன் கடவுளெனில்-அழியா
புகழை பெற்றவன் கவிஞனன்ரோ
கண்ணில் தோன்றும் காட்சிகளை -நல்ல
கற்பனை உருவம்- கொண்டமைத்து
மண்ணில் படைத்திடும் பிரமனவன் - தினம்
மாயங்கள் செய்திடும் மன்னனவன்
இருவர் மனதிலும் களங்கமில்லை -உலக
இன்ப துன்பத்தை வென்றநிலை
ஒருவர் வேலையும் முடியவில்லை -இதை
உலகம் இன்னமும் உணரவில்லை
காணும் பொருள் உயிர்வகைகள்
கடலும் நிலமும் மற்றவைகள்
கடவுள் படைத்தவை அழிவதுண்டு-ஆனால்
கவிஞன் படைத்தவை அழிவதில்லை
Sir
பதிலளிநீக்குGood Keep It Going