
பாசமெல்லாம் காட்டி வைத்து
நித்தம் என்னை காத்து வந்த
நேச மிகு தெய்வம் எங்கே
அடித்து என்னை வளர்க்கவில்லை
ஆளடிமை செய்யவில்லை
தடித்த ஒரு வார்த்தை கூட என்
தங்கமே நீ சொன்னதில்லை
காலன் உன்னை அழைத்தானோ உன்னை
கையை தொட்டும் இழுத்தாணூ
பாலன் முகம் பார்ர்த்தபின்னும் அந்த
பாவி மகன் மறுத்தானோ
கற்றாழை பறிக்க வந்த
காலமெனும் கொடிய மகன்
பொற்றாமரை பறித்தான் என்னை
புழு போல துடிக்க விட்டான்
என்ன நினைத்து அவன்
என்னுயிரை எடுத்து சென்றான்
சின்னவன் தானே என்று சிறிது
சித்து விளையாடினானா
காலனை இங்கு அழைப்பேன் அவனை
கட்டி வைத்தும் உதைப்பேன்
கோல மயில் உன்னை மீண்டும்
கூட்டி வந்து வாழ வைப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக