ஞாயிறு, 8 மார்ச், 2009

அம்மா

பத்து மாதம் சுமந்திருந்து
பாசமெல்லாம் காட்டி வைத்து
நித்தம் என்னை காத்து வந்த
நேச
மிகு தெய்வம் எங்கே

அடித்து
என்னை வளர்க்கவில்லை
ஆளடிமை
செய்யவில்லை
தடித்த ஒரு வார்த்தை கூட என்
தங்கமே
நீ சொன்னதில்லை

காலன் உன்னை அழைத்தானோ உன்னை
கையை தொட்டும் இழுத்தாணூ
பாலன் முகம் பார்ர்த்தபின்னும் அந்த
பாவி மகன் மறுத்தானோ

கற்றாழை
பறிக்க வந்த
காலமெனும்
கொடிய மகன்
பொற்றாமரை
பறித்தான் என்னை
புழு
போல துடிக்க விட்டான்

என்ன நினைத்து அவன்
என்னுயிரை
எடுத்து சென்றான்
சின்னவன் தானே என்று சிறிது
சித்து விளையாடினானா

காலனை
இங்கு அழைப்பேன் அவனை
கட்டி
வைத்தும் உதைப்பேன்
கோல மயில் உன்னை மீண்டும்
கூட்டி
வந்து வாழ வைப்பேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக