
ஏனடி என்னடி ஆனது
உனக்கு எப்படி பொழுது போனது
கூறடி தேனடி நீயடி -உன்னை
குலவ வந்தவன் யாரடி
கார்மேக கூந்தலால் கட்டி இழுத்தாயோ
கயல் விழி கண்ணாலே வெட்டி இழுத்தாயொ
நீர்போல சலச்சளத்து நெஞ்சை அழைத்தாயோ
நெடுமூச்சு விடும்போது கெஞ்சி விழித்தாயொ
சூராதிசூரனோ அந்த சுப்ரமண்யன் தம்பியோ
வில்லாதிவில்லனோ அந்த வில்விஜயந்தம்பியோ
தேரோடும் வீதியிலே தினம் சுற்றும் வீரனோ
வீராதி வீரனோ வேங்கைதிருமார்பனோ
எவ்வளவு கேட்டுமடி இல்லை உன் பதில்
எந்நாளும் நீதானே எனக்குள்ள புதிர்
பொன்னான உன் மனது புரியாதவளோ நான்
புத்தம் புது பானையிலே நீ பொங்கிவரும் தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக