
உலகை மறந்திருந்தேன்
என்னை தவிக்க விட்டே - நீ
எங்கோ ஏன் சென்றாய் !
இரவு பகல் எனினும்- என்னை
இமை போல் காத்திருந்தாய்
உறவு என்னும் சொல்லினுக்கு-இங்கு
உரிய இலக்கணம் நீ !
வாழும் காலம் தோறும் - உன்
வருகை எதிர் பார்ப்பேன்
நாளும் பொழுதும் தினம் -நான்
உனது நட்பை நினைத்திருப்பேன்
நீ இருந்த இடம்மெல்லாம் - என்
நெஞ்சில் நிழல் ஆடும்
உதய நிலவாகி பாட - தமிழில்
உகந்த பொருள் ஆனாய் !!
கண்ணன் திருவடியில் அன்று
கவனமுடன் சேர்ந்தாயோ
அன்னை அருள் நிழலில் - நீயும்
அயர்ந்து கண் மலர்வாய் அய்யா !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக