
அழகான உலகொன்று படைத்தான் -அதில்
ஆணொன்று பெண்ணென்று சமைத்தான்
தெரியாமல் திருநங்கை ஏன் படைத்தான்-அவர்
தெருவோரம் அழுதும் தெரியாமல் சிரித்தான்
உடலாலே வருகின்ற மாற்றம் -அதை
உணராமல் நாம் போடும் பலமான ஏச்சல்
கடல்போல பெருநோக்கு வேண்டும் -அவர்
கடைத்தேற நல்வழி கண்டாகவேண்டும்
உயிர் வாழ பல் உதவி உடனே செய்வீர்
உயர் கல்வி நல வாழ்வு ஓட்டுரிமை தருவீர்
வளமான சிந்தனையில் வாலிபரே வருவீர்
வற்றாத சுகவாழ்வு வனிதயற்கு தருவீர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக