புதன், 23 அக்டோபர், 2019

தீபாவளி 8 0 7

தீப    வொளி           குலுங்கும்         தீபாவளி   ---நம்
தேவி        அருள்   கூடும்       தீபாவளி
பாப        இருள்      போக்கும்     தீபாவளி    ---நம்
பாரதம்        சிறப்பாகும்    தீபாவளி

நரகாசுரன்       என்றால்      தீபாவளி   ---அவனை
நாயகி        கொன்ற    கதை     தீபாவளி
உறவின்    பெருமை      சொல்லும்     தீபாவளி   ---மண்ணில்
உயர்ந்த      நெறி    வளர்க்கும்     தீபாவளி

கலைகள்     சிறந்தோங்கும்      தீபாவளி    ----ஏழை
கண்களில்     மகிழ்ச்சி நாள்      தீபாவளி
விலைகள்      குறையட்டும்      தீபாவளி    ---எங்கும்
விளைச்சல்    பெருகட்டும்     தீபாவளி

பகைமை       அழித்த   நாள்      தீபாவளி    ---பட்ட
பாட்டிற்கு      நல்ல பலன்       தீபாவளி
உவமை      சொல்லவொண்ணா      தீபாவளி   ----நம்
உயரிய        பண்டிகையே      தீபாவளி

நாடு        நலமாகும்        தீபாவளி    ----என்றும்   
நன்மை        அரசாளும்      தீபாவளி
வீடு         விளங்கட்டும்      தீபாவளி    ---நமக்கு
வெற்றித்       திருநாளே       தீபாவளி 

உறவென்று 8 0 6

கற்பனை        கோயில்         செய்தேன்   ----உனக்கு
கவிதையில்       மாலை     செய்தேன்
அற்புதம்       அடைய      வேண்டி    ---உன்
அழகிய        பாதம்       தொட்டேன்

நிற்பதும்       நடப்பதும்     நின்செயல்  ---என்று
அற்புத       வரிகள்        சொன்னார்
அவர்  பெயர்     உலகில்     நிற்க    ---உள்ள
அனைத்தையும்     செய்தாய்     முருகா

கண்ணனோ        மாயம்       செய்தான்    ---அந்த
காளியோ      ஞாணம்         தந்தாள்
சொன்னதை      நானும்      தந்தேன்    ----இந்த
சுகத்தினில்      வாழ்வாய்      நெஞ்சே

எழுதிட         வலிமை        தருக    ---இங்கு
எண்ணற்ற       கவிதை    வருக
பழுதிலா          புலமை       பெறுக   ----அந்த
பரம்பொருள்      உலகைக்       காக்க

உறவென்று        ஒருவர்         இல்லை    ----உன்
மனம்          எனது          எல்லை
அறிதுயில்         கொள்ளும்         மாலே    ---உந்தன்
அன்பு      தான்        எனக்குக்       காவல் 

அற்புதம் 8 9 5

ஏட்டினில்        எழுத         வைத்தாய்    ----நீ
என்குரல்       தெரிய      வைத்தாய்
பாட்டினைப்       பாட     வைத்தாய்    ---உந்தன்
பாதத்தில்       தலையை    வைத்தேன்

நாட்டினில்      உள்ள     துன்பம்   ----வரும்
நாளிலே       தீர்தல்    வேண்டும்
வீட்டிலும்     அமைதி     வேண்டும்    ---என்றும்
வெற்றிகள்     தொடர     வேண்டும்

வயலிலே      விளைச்சல்       காண  ---இங்கு
வான்   மழை      பெய்ய    வேண்டும்
சொல்லிலே      உண்மை      வேண்டும்   ---உலகை
செயித்திடும்     திறமை       வேண்டும்

கற்பினைக்        காக்க      வேண்டும்   ----எங்கும்
கவிதைகள்       வாழ        வேண்டும்
அற்புதம்        நிகழ்த்த      வேண்டி    ----எங்கள்
அய்யனே       நின் வருகை     வேண்டும்

கண்ணிலே       காந்தம்        வேண்டும்  ----சொல்லும்
கருத்திலே        தெளிவு        வேண்டும்
மண்ணிலே       வானம்        வேண்டும்    ----ஏழை
மனமெல்லாம்      குளிர      வேண்டும் 

கத்தரிப்பூ 8 0 4

வாழ          வயது           இருக்கு     ---நாம
வாழ்ந்து        விட      வெகு   நாளிருக்கு
கோல         முகம்         இருக்கு   ----இனி
கொஞ்சி     நிற்க       இடமிருக்கு

இன்னும்      என்னடியோ      என்  செல்லக்கண்ணே   ---உன்னை
நினைத்து      நானும்      உருகித்      தவிக்கிறேண்டி
கண்ணுக்கு    இனியவளே    காதலுக்கு   நல்லவளே   ---அடி
இன்னும்      புரியலையா     இந்த    ஏழையோட     மனசு

வட்ட       நிலாவும்      வாவெனக்      கூப்பிடுதே   ---உன்னை
தொட்டுச்     சுவைக்க      துடிக்குது     என்  இளமை
விட்டுப்       பிரிந்தாலே      விரகம்     கொல்லுமடி   ---என்னை
அட்டியின்றி     நீயும்    சற்று     அணைத்து      மகிழ்ந்திடடி

கத்தரிபூ     சேலை      காதோலை     கருகமணி   ---உனக்கு
நித்தமும்      பூட்டி      எந்தன்     நெஞ்சில்      சுமப்பேனடி
முத்த    மழை      பொழிஞ்சு      மோகத்தில்     நீராடு   ----என்
பத்தினிப்      பெண்ணே     என்   பக்கம்     வரக்கூடாதா

நாலு     பேரை      வச்சு       நமக்குக்     கல்யாணம்  ----பின்னே
நல்லபடி      விருந்து       நாமும்      தரவேணும்
வேளை      வந்ததென     நீயும்     விரைந்து     வருவாயடி   ---நாம
வெற்றிக்      கனி  பறிக்க      வேண்டுவோம்     கடவுளையே 

திங்கள், 21 அக்டோபர், 2019

ரோஜா 8 0 3

கோண         வளவுப்           பாதையில்    ----ஒரு
குமரிப்         பொண்ணு      போகிறாள்
தேனைப்       போல       இனிக்கிறாள்   ----அவளை
தினமும்       பார்த்து      ரசிக்கிறேன்

கள்ளில்       ஊறிய          விழிகள்   ----பேச
கரும்பைப்       போன்ற      மொழிகள்
முள்ளில்       மலர்ந்த       ரோஜா    ----அவளை
முகரத்         துடிக்கும்        ராஜா

சிலையைப்       போன்ற       உருவம்    -----அதில்
சீதளமாய்த்      தோன்றும்      பருவம்
விலையைச்      சொல்லிட     முடியுமா    ----அவளிடம்
விரும்பிச்       சென்றால்       படியுமா

வாழைத்        தண்டாய்க்        கால்கள்    ----அவள்
வனப்போ       கொல்லும்      வேல்கள்
பாளை         வெடித்த       சிரிப்பு    ----யாரும்
பார்க்க       நினைக்க       இனிப்பு

எனக்கு        வந்தது        மயக்கம்    ----இனி
இரவில்        வருமோ      உறக்கம்
கனியைப்      பார்த்ததில்      கிறக்கம் -----அது
காலம்        முழுதும்       இருக்கும் 

முத்துக்கள் 8 0 2

கண்ணில்      வைத்துக்        காத்திருந்தேன்    ----உன்னை
காலம்        முழுதும்        பார்த்திருந்தேன்
உன்னில்       என்னை       வைத்திருந்தேன்  ----உன்னை
உயிராய்         நானும்      நினைத்திருந்தேன்

சிரித்தால்    உதிர்வது      முத்துக்களோ   ---அது
சீதனமாய்ப்       பெற்ற      சொத்துக்களோ
பிரித்தால்      பிரியும்       உறவல்லவே   ----நமக்குள்
பின்னிப்       பிணைந்த      சுகமல்லவா

கண்கள்       மூடினால்       தூக்கமில்லை    ----இந்த
காதல்        செய்வதும்      பெருந்தொல்லை
மண்ணை       மறந்த       மழை   போல    ---உந்தன்
மனமும்        வறண்டுப்      போனதடி

என்ன        தவறுகள்         செய்தேனோ    ----எனோ
பிரிந்து         சென்று       விட்டாய்
அன்னக்       கொடியே      அழகரசி    ----உன்னை
அடைந்தும்      அடையா      மாபாவி

என்னைத்       தேடி நீ         வருவாயா  ----உன்
இதயத்தில்     எனக்கிடம்    தருவாயா
புண்ணினைப்     போக்கும்     அருமருந்தே    ----இந்த
பூமியில்      வாழ்வோம்     என்றும்      நலமாக 

ஏழுமலை 8 0 1

ஏழுமலை          ஏறி          வந்தேன்    ----உன்னிடம்
எந்தன்        மனக்குறை      சொல்ல      வந்தேன்
சூழும்  வினை     போக்க  வந்தேன்   ---உனது
சுந்தர      முகம்     காண     வந்தேன்

தாய்         தந்தை       இல்லை   ----இங்கே
தக்கத்      துணை      ஒருவருமில்லை
வாய்   விட்டு     கதருமெனை   ---நீதான்
வாரி     என்னையும்    அணைக்கலாதோ

நின்றது       நெடிய        கோலம்    ----தினம்
நிகழ்வது       வர்ண       ஜாலம்
கன்றினை     தாய்ப்    பசு    காப்பது  போல்   ---என்னை
காத்திட       வருவாய்      அய்யா

கண்களால்       கவலை        போக்கு    ---உன்
கனிமொழி        அமுத       வாக்கு
மண்ணினை      அளந்த      மாலே   ----என்
மனமிருள்        போக்கு       நாளே

கேட்டதைக்        கொடுக்க      வந்தாய்    ---எங்கள்
கேள்விக்குப்       பதிலும்        ஆனாய்
பாட்டினைப்        பாட        வந்தேன்    ----உனது
பாதமே        துணையாய்க்      கொண்டேன் 

சனி, 5 அக்டோபர், 2019

மஹா விஷ்ணு 8 0 0

மலை மீதில்         வாழ்கின்ற        மாலவா   ---ஏழை
மனங்களை         எந்நாளும்       ஆளவா
சிலையாக        நிற்பாயே        நேரிலே    ----என்
சிரம் தாழ்த்தி    வணங்குவேன்     பாரிலே

அலர்மேலு         மங்கையோ       அடிவாரம்    ----தன்
அடியாரைக்        காப்பது        அவள் பாரம்
புலர்கின்ற         காலையில்     பூபாளம்  ----அன்னை
பொன்னான       உள்ளமோ      தாராளம்

பத்மாவதித்        தாயார்        அருகிருக்க   ---உந்தன்
பாதார         விந்தங்கள்    என்றும்      பரவசமே
சத்திய   நெறி      வழங்கும்       சாயுஜ்யனே   ---உனது
சன்னதி        எந்நாளும்    எமக்கு     வைபோகமே

மலையேறி       வந்தார்க்கு       நிறையப்      பலனுமுண்டு   ----எங்கள்
மாதவா        உன்னைக் காணப்      பொருள்     குவியும்
விலையில்லாப்       பொருளான      விஷ்ணுமூர்த்தி    ---நீ
வேண்டுவோர்க்கு      வரமருளும்      வெங்கடேசனே

கோவிந்தா       வெனச் சொல்ல      வினை தீருமே   ---உன்
கோமள      முகத்திலோ        நல்லருள்   வெள்ளமே
வாரி       வழங்குகின்ற        எங்கள்        வரதராஜனே    ----உன்னை
வணங்கிடக்      கிடைப்பது      அமைதி       ஆனந்தமே 

வெள்ளி, 4 அக்டோபர், 2019

முன்னணி 7 9 9

என்ன          நடக்குது           உலகிலே   ----இதிலே
எதுவும்        எனக்கு        விளங்கலே
சொன்னதை      மாத்திப்     பேசுறான்   ----தான்
சுகப்பட         பிறரையும்        ஏய்க்கிறான்

பேரைக்         கெடுத்துக்        கொள்கிறான்    ---நல்ல
பெரிய       மனுஷன் போல்     திரிகிறான்
ஊரினை      வளைச்சிப்       பிடிக்கிறான்    ----நாளும்
உத்தமன்      போலவே       நடிக்கிறான்

வள்ளலாய்      வேஷம்       போடுறான்   ---பணத்தை
வாரிச்        சுருட்டியே       அமுக்கிறான்
கள்ளமே      மூச்சாய்     வாழ்கிறான்   ----அந்த
கடவுளை      நினைத்திட     மறக்கிறான்

கொள்ளைகள்        அடிக்கிறான்        கூட்டிலே  ---இவன்
கொடுமை         தீருமோ        நம்நாட்டிலே
நல்லவர்        வாழ்ந்திட       வேண்டுமே    ----சற்று
நாமும்        இதை       நினைத்தால்     போதுமே

ஒன்றாய்        சேர்ந்திங்கு       கூடுவோம்   ----இந்த
உலுத்தரை     தினமும்        சாடுவோம்
நன்மைகள்       அதிகம்        செய்குவோம்    ----நம்
நாட்டினை        முன்னணி       ஆக்குவோம் 

வியாழன், 3 அக்டோபர், 2019

சரஸ்வதி 7 9 8

கவிஞர்கள்        நாவினில்        குடியிருப்பாள்    ---அவர்
கற்பனைக்கு      உயிர்       கொடுப்பாள்
புவியினைக்      காப்பது      அவள்  பாரம்   ----தோன்றும்
புதுமைகள்       எல்லாம்       அவள்  சாரம்

வெள்ளைத்       தாமரையில்      வீற்றிருந்து   ----பல
விந்தைகள்      செய்திடும்       தாயல்லவா
பிள்ளைத்      தமிழின்      பாடல்களில்  ---தினம்
பின்னிப்      பிணைபவள்     அவளல்லவா

ஏடுகளில்       எல்லாம்      இருக்கின்றாள்   ---அவளே
இயல்    இசை      நாடகமென்றாவாள்
பாடும்       என்னுள்ளும்      இருக்கின்றாள்   ----அவளை
பணிவதும்      புகழ்வதும்       என்பணியே

கல்விக்       கண்ணைத்      திறப்பவளாம்  ---உலகில்
கவிதைகள்     தோன்றிடக்      காரணமாம்
வெள்ளை நிற     ஆடைகள்      அணிபவளாம்   ---நாம்
வேண்டிடில்       அனைத்தும்     அளிப்பவளாம்

சரஸ்வதி         என்பது        அவள்      பெயராம்    ---உயர்
சாத்திரங்கள்       சொல்லிடும்       கருப்பொருளாம்
அமைதி        என்பது        அவள்       உருவம்    ---அவளது
அருளினைப்      பெற்றவர்க்கு     கிடைப்பது     யானை பலம்

[நவராத்திரி    வைபவத்     திருநாளில்   அன்னை  சரஸ்வதியைப்
போற்றி     துதி    செய்வதாய்    அமைக்கப்பட்டது  இந்தப்  பாடல் ]

கருணாநிதி 7 9 7

கண்ணா         மணியே         கருணாநிதி    ---உந்தன்
காலடி          ஒன்றே       எனக்குக்    கதி
எந்நாளும்       உன்னை      மறவேன்  ---இந்த
ஏழையைக்     காப்பது      நினது     செயல்

மேடு பள்ளம்      கடந்து      வந்தேன்   ---உனது
மேன்மையைத்     தினமும்      பாடுகிறேன்
பாடும்        என்னையும்       நீயறிவாய்    ---உன்
பாசமுகம்      தன்னையும்     நானறிவேன்

ஊரும்         உலகமும்       உன்னாலே   ---என்றும்
உண்மை      வென்றிடும்     தன்னாலே
பேரும்        புகழும்      நீ      கொடுப்பாய்  ----உலகில்
பேதங்கள்       இல்லாதப்       பெரும்பொருளே

அன்னையும்      தந்தையும்      நீயல்லவா   ---நீ
அன்பினில்       விளைந்த    அமுதல்லவா
பண்புகள்       தந்திட்ட       பரமகுரு     ----உன்னை
பணிவதும்     புகழ்வதும்      எனது பணி

கருணை      மழைதனைப்     பொழியவிடு   ---மண்ணில்
கவலைகள்      எல்லாம்      மறையவிடு
அருமை         அண்ணலைப்      பாடுகிறேன்   ----நான்
அனுதினம்       அவரைப்       போற்றுகிறேன் 

செவ்வாய், 1 அக்டோபர், 2019

காந்தி 7 9 6

அண்ணல்          காந்தியே     ----எங்கள்
அமர             ஜோதியே
கன்னல்      தமிழிலே   ---நாங்கள்
புதுக்   கவிதை      பாடுவோம்

வெள்ளைக்       கொக்கினை   ----அன்று
விரட்டி       யடித்தவர்
கொள்ளை     நடப்பதைக்   ---கண்டு
கொதித்து      எழுந்தவர்

நல்ல      எண்ணங்களை    ---இந்திய
நாட்டில்     விதைத்தவர்
வெள்ளை       மனத்தவர்    ----ஏழை
மனங்களில்     நிலைத்தவர்

காலம்        மாறினும்    ---அவரின்
கருணை      மறக்குமோ
ஏழையாய்      வாழ்ந்த    ---அந்த
எளிமை       போற்றுவோம்

அடிமை      விலங்கினை    ---அன்று
அகற்றிக்      காத்தவர்
மடமை       நீங்குவோம்    ---இந்தியா
மதிப்பை      உயர்த்துவோம்

[   02--10 --2019 அன்று    காந்திஜி     பிறந்த    நாள்  ]