செவ்வாய், 25 மார்ச், 2014

ஆனந்தம் -222.

ஆனந்தம்  ஆனந்தம்  ஆனந்தமே -இங்கு
 அன்பின்  வருகை  ஆனந்தமே
 நானந்த   நாளிலே  கேட்டது -அந்த
 நாயகன்  அருளால்  கிடைத்தது

 தாயின்  கருணையோ  பெரியது -நமது
 தமிழின்   பெருமை  அரியது
 வாய்மை  வழிதான்  நல்லது -அது
 வாழ்நாளில்  எதையுமே  வெல்வது

 திங்களை  மதியை  தந்ததார் -எட்டு
 திசைகளை  நமக்கு  கொடுத்ததார்
 உங்களை  எங்களை  படைத்ததார் -அவர்
 உயர்வினை  உலகிலே  உணர்பவரார்

 வானகம்  வையகம்  யாராலே -மானிட
 வளர்ச்சி  அவரது  கையாலே
 காணும்  பொருள்  எதிலுமே -அந்த
 கடவுளைக்  காண்பாய்  உன்னறிவாலே

 நாளும்  நமக்காக  வேண்டும் -பலர்
 நட்பும்  சுகமாக  வேண்டும்
 தோளால்   உழைத்திட  வேண்டும் -நீ
 தொட்டது  துலங்கிட  வேண்டும்

 அன்பால்  உலகையே  ஆளலாம் -மன
 அமைதியால்  இறைவனை வேண்டலாம்
 பண்பால்  பாரினை  வென்றிடலாம் -நம்
 பாரதம் என்றுமே  உயரலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக