ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே -இங்கு
அன்பின் வருகை ஆனந்தமே
நானந்த நாளிலே கேட்டது -அந்த
நாயகன் அருளால் கிடைத்தது
தாயின் கருணையோ பெரியது -நமது
தமிழின் பெருமை அரியது
வாய்மை வழிதான் நல்லது -அது
வாழ்நாளில் எதையுமே வெல்வது
திங்களை மதியை தந்ததார் -எட்டு
திசைகளை நமக்கு கொடுத்ததார்
உங்களை எங்களை படைத்ததார் -அவர்
உயர்வினை உலகிலே உணர்பவரார்
வானகம் வையகம் யாராலே -மானிட
வளர்ச்சி அவரது கையாலே
காணும் பொருள் எதிலுமே -அந்த
கடவுளைக் காண்பாய் உன்னறிவாலே
நாளும் நமக்காக வேண்டும் -பலர்
நட்பும் சுகமாக வேண்டும்
தோளால் உழைத்திட வேண்டும் -நீ
தொட்டது துலங்கிட வேண்டும்
அன்பால் உலகையே ஆளலாம் -மன
அமைதியால் இறைவனை வேண்டலாம்
பண்பால் பாரினை வென்றிடலாம் -நம்
பாரதம் என்றுமே உயரலாம்
அன்பின் வருகை ஆனந்தமே
நானந்த நாளிலே கேட்டது -அந்த
நாயகன் அருளால் கிடைத்தது
தாயின் கருணையோ பெரியது -நமது
தமிழின் பெருமை அரியது
வாய்மை வழிதான் நல்லது -அது
வாழ்நாளில் எதையுமே வெல்வது
திங்களை மதியை தந்ததார் -எட்டு
திசைகளை நமக்கு கொடுத்ததார்
உங்களை எங்களை படைத்ததார் -அவர்
உயர்வினை உலகிலே உணர்பவரார்
வானகம் வையகம் யாராலே -மானிட
வளர்ச்சி அவரது கையாலே
காணும் பொருள் எதிலுமே -அந்த
கடவுளைக் காண்பாய் உன்னறிவாலே
நாளும் நமக்காக வேண்டும் -பலர்
நட்பும் சுகமாக வேண்டும்
தோளால் உழைத்திட வேண்டும் -நீ
தொட்டது துலங்கிட வேண்டும்
அன்பால் உலகையே ஆளலாம் -மன
அமைதியால் இறைவனை வேண்டலாம்
பண்பால் பாரினை வென்றிடலாம் -நம்
பாரதம் என்றுமே உயரலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக