சனி, 22 மார்ச், 2014

அன்பே 220

நிலவால்  வளர்ந்தேன் -உன்
 நினைவால்  மலர்ந்தேன்
 உலவும் பூங்காற்றே -நீ
 உண்மையை  சொல்லிவிடு

 நோயால்  தளர்ந்தேன் -உடல்
 நூலாய்  மெலிந்தேன்
 பாலைத் துறந்தேன் -கொண்ட
 படுக்கை  மறந்தேன்

 உன்னை  நினைத்தேன் -உற்ற
 உறவை  வெறுத்தேன்
 என்னை  இழந்தேன் -நாளும்
 எதையும்  வெறுத்தேன்

 இரவால்  மயக்கம் -இன்னும்
 எதற்கோ  தயக்கம்
 ஏழைப்  பெண்மேல் -உனக்கு
 ஏனோ  வஞ்சம்

 தஞ்சம்  அடைந்தேன் -உனையே
 தழுவிட  நினைத்தேன்
 நெஞ்சம்  இல்லையோ -காதல்
 நினைவே  தொல்லையோ

 ஒன்றாய்  இருப்போம் -நம்
 உணர்வால்  கலப்போம்
 அன்பே  வருக -மன
 அமைதி   தருக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக