நிலவால் வளர்ந்தேன் -உன்
நினைவால் மலர்ந்தேன்
உலவும் பூங்காற்றே -நீ
உண்மையை சொல்லிவிடு
நோயால் தளர்ந்தேன் -உடல்
நூலாய் மெலிந்தேன்
பாலைத் துறந்தேன் -கொண்ட
படுக்கை மறந்தேன்
உன்னை நினைத்தேன் -உற்ற
உறவை வெறுத்தேன்
என்னை இழந்தேன் -நாளும்
எதையும் வெறுத்தேன்
இரவால் மயக்கம் -இன்னும்
எதற்கோ தயக்கம்
ஏழைப் பெண்மேல் -உனக்கு
ஏனோ வஞ்சம்
தஞ்சம் அடைந்தேன் -உனையே
தழுவிட நினைத்தேன்
நெஞ்சம் இல்லையோ -காதல்
நினைவே தொல்லையோ
ஒன்றாய் இருப்போம் -நம்
உணர்வால் கலப்போம்
அன்பே வருக -மன
அமைதி தருக
நினைவால் மலர்ந்தேன்
உலவும் பூங்காற்றே -நீ
உண்மையை சொல்லிவிடு
நோயால் தளர்ந்தேன் -உடல்
நூலாய் மெலிந்தேன்
பாலைத் துறந்தேன் -கொண்ட
படுக்கை மறந்தேன்
உன்னை நினைத்தேன் -உற்ற
உறவை வெறுத்தேன்
என்னை இழந்தேன் -நாளும்
எதையும் வெறுத்தேன்
இரவால் மயக்கம் -இன்னும்
எதற்கோ தயக்கம்
ஏழைப் பெண்மேல் -உனக்கு
ஏனோ வஞ்சம்
தஞ்சம் அடைந்தேன் -உனையே
தழுவிட நினைத்தேன்
நெஞ்சம் இல்லையோ -காதல்
நினைவே தொல்லையோ
ஒன்றாய் இருப்போம் -நம்
உணர்வால் கலப்போம்
அன்பே வருக -மன
அமைதி தருக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக