சனி, 22 மார்ச், 2014

மழலை செல்வம் -221.

அருள்விழி -இங்கு
 புது மொழி
 அசைந்திடும்  பூங்கொடி -என்
 அன்னமே  நீ வரும்போதிலே

 சிந்திடும்  புன்னகை -எனது
 சீவனை  உலுக்கிடும்
 செல்வமே  உனைக் காணும்போதிலே -எனது
 சிந்தை   மயங்கிடத்  தோன்றுதே

 ஆடியே  வருகையில் -காணும்
 என்மனம்  ஆடுமே
 அன்பெனும்  அழகிய தேவியே -ஏனோ
 அடிமையானது  எனது நெஞ்சமே

 சிற்றிடை  ஆடிடும் -உனது
 சிலம்புகள்  பாடிடும்
 சிங்காரியைக்  காணும்போதிலே -தினம்
 சிறப்புகள்  கோடி சேருமே

 முல்லையில்  பற்களும் -வான்
 முழுமதி எழிலும்
 அள்ளியே  அணைத்திடத்  தோன்றுமே -என்
 ஆவலை  அதிகம்  கூட்டுமே

 பட்டுபோல் மேனியும் -நல்ல
 பால்வண்ணத்  தோற்றமும்
 சிட்டுபோல்  வந்தாய் நேரிலே -நீ
 சீர்பெற  வேண்டும்  பாரிலே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக