உன்னால் முடியும் தயங்காதே -இந்த
உலகம் உனது மயங்காதே
தன்னால் எதுவும் நடக்காதே -அந்த
தலைவன் உருவம் தெரியாதே
வந்தார் போவார் கணக்கில்லை -இனி
வாழ்வை அறிவதே உனக்கெல்லை
நிந்தனை களைவது நிம்மதியே -அதனை
நினைக்க மறப்பது உன்விதியே
பாலும் தேனும் ஓடாது -நீ
பக்குவம் இழந்தால் வரும் தீது
நாலும் அறிவது நன்மையடா -உனக்கு
நல்லவர் சொல்வது உண்மையடா
எல்லா மனிதரும் ஓரினமே -இதை
உணர மறுப்பது மதியீனமே
கல்லா நிலையினைக் களைந்துவிடு -நம்
கழனியில் நல்லதை வளர்த்துவிடு
நீரும் நிலமும் நிலையாகும் -உனது
நெஞ்சிலே அன்பினை வரவாக்கு
போரும் பூசலும் உனக்கெதற்கு -இதனை
புரிந்து கொள்வாய் வாழ்வதற்கு
தாயின் பெருமை அறிவாயே -அவள்
தாளடி நிதமும் பணிவாயே
வாய்மை வழிதனில் செல்வாயே -என்றும்
வாழ்வினில் வெற்றியே கொள்வாயே
உலகம் உனது மயங்காதே
தன்னால் எதுவும் நடக்காதே -அந்த
தலைவன் உருவம் தெரியாதே
வந்தார் போவார் கணக்கில்லை -இனி
வாழ்வை அறிவதே உனக்கெல்லை
நிந்தனை களைவது நிம்மதியே -அதனை
நினைக்க மறப்பது உன்விதியே
பாலும் தேனும் ஓடாது -நீ
பக்குவம் இழந்தால் வரும் தீது
நாலும் அறிவது நன்மையடா -உனக்கு
நல்லவர் சொல்வது உண்மையடா
எல்லா மனிதரும் ஓரினமே -இதை
உணர மறுப்பது மதியீனமே
கல்லா நிலையினைக் களைந்துவிடு -நம்
கழனியில் நல்லதை வளர்த்துவிடு
நீரும் நிலமும் நிலையாகும் -உனது
நெஞ்சிலே அன்பினை வரவாக்கு
போரும் பூசலும் உனக்கெதற்கு -இதனை
புரிந்து கொள்வாய் வாழ்வதற்கு
தாயின் பெருமை அறிவாயே -அவள்
தாளடி நிதமும் பணிவாயே
வாய்மை வழிதனில் செல்வாயே -என்றும்
வாழ்வினில் வெற்றியே கொள்வாயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக