சனி, 22 மார்ச், 2014

வெற்றி -218

உன்னால்   முடியும்  தயங்காதே  -இந்த
 உலகம்   உனது   மயங்காதே
 தன்னால்   எதுவும்  நடக்காதே  -அந்த
 தலைவன்  உருவம்   தெரியாதே

 வந்தார்  போவார்   கணக்கில்லை -இனி
 வாழ்வை   அறிவதே  உனக்கெல்லை
 நிந்தனை  களைவது  நிம்மதியே -அதனை
 நினைக்க  மறப்பது  உன்விதியே

 பாலும்  தேனும்   ஓடாது -நீ
 பக்குவம்  இழந்தால்  வரும்  தீது
 நாலும்  அறிவது  நன்மையடா -உனக்கு
நல்லவர்  சொல்வது  உண்மையடா

 எல்லா  மனிதரும்  ஓரினமே -இதை
 உணர  மறுப்பது  மதியீனமே
 கல்லா  நிலையினைக்  களைந்துவிடு -நம்
 கழனியில்  நல்லதை  வளர்த்துவிடு

 நீரும்  நிலமும்  நிலையாகும் -உனது
 நெஞ்சிலே  அன்பினை  வரவாக்கு
 போரும்  பூசலும்  உனக்கெதற்கு -இதனை
 புரிந்து  கொள்வாய்  வாழ்வதற்கு

 தாயின்  பெருமை  அறிவாயே -அவள்
 தாளடி  நிதமும்  பணிவாயே
 வாய்மை  வழிதனில்  செல்வாயே -என்றும்
 வாழ்வினில் வெற்றியே  கொள்வாயே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக