உலகாளப் பொது நீதி உருவாகலாம் -அதில்
உண்மை ஒன்றே வெளியாகலாம்
நிலமாள வந்தவர் நிலையாவரோ -ஐயா
நீயின்றி புவிவாழ்வில் சுகமாகுமோ
கலைசூழும் வடிவான கதிர்வேலனே -உன்
கருணைக்கு எதெல்லை இப்புவிமீதிலே
விடிவெள்ளி போலாகி விளையாடுவாய் -வந்த
வினையெல்லாம் பறந்தோட எனைனாடுவாய்
வரவேண்டும் முருகா நீ மனதாளவே -நீ
வந்தாலே வருமின்பம் ஜெகமீதிலே
தொடவேண்டும் முருகாஉன் திருப்பாதமே -உன்னைத்
தொட்டாலே சொர்க்கமே எப்போதுமே
தேவர் குலம் காத்த செந்தில்வேலனே -அந்த
தெய்வயானை மனங்கொண்ட சிவபாலனே
பாப வினை தீர்க்கும் பரந்தாமனே -உனது
பக்தரைக் காத்திடும் குணசீலனே
அலையாடும் செந்தூரில் குடிஏறினாய் -நாடும்
அன்பர்கள் இல்லத்துப் படிஏறினாய்
கலையாவும் உனதென்று தினம் பாடுவேன் -உனது
காலடி துணையோடு நானாடுவேன்
தமிழென்ற சொல்லிற்கு பொருளானவன் -இந்த
தரணியிலே எல்லோர்க்கும் அருளானவன்
அமிழ்தென்று சுவையாகும் அவனநாமமே -இதை
அறிந்தோர்க்கு சுகமுண்டு என்னாளுமே
உண்மை ஒன்றே வெளியாகலாம்
நிலமாள வந்தவர் நிலையாவரோ -ஐயா
நீயின்றி புவிவாழ்வில் சுகமாகுமோ
கலைசூழும் வடிவான கதிர்வேலனே -உன்
கருணைக்கு எதெல்லை இப்புவிமீதிலே
விடிவெள்ளி போலாகி விளையாடுவாய் -வந்த
வினையெல்லாம் பறந்தோட எனைனாடுவாய்
வரவேண்டும் முருகா நீ மனதாளவே -நீ
வந்தாலே வருமின்பம் ஜெகமீதிலே
தொடவேண்டும் முருகாஉன் திருப்பாதமே -உன்னைத்
தொட்டாலே சொர்க்கமே எப்போதுமே
தேவர் குலம் காத்த செந்தில்வேலனே -அந்த
தெய்வயானை மனங்கொண்ட சிவபாலனே
பாப வினை தீர்க்கும் பரந்தாமனே -உனது
பக்தரைக் காத்திடும் குணசீலனே
அலையாடும் செந்தூரில் குடிஏறினாய் -நாடும்
அன்பர்கள் இல்லத்துப் படிஏறினாய்
கலையாவும் உனதென்று தினம் பாடுவேன் -உனது
காலடி துணையோடு நானாடுவேன்
தமிழென்ற சொல்லிற்கு பொருளானவன் -இந்த
தரணியிலே எல்லோர்க்கும் அருளானவன்
அமிழ்தென்று சுவையாகும் அவனநாமமே -இதை
அறிந்தோர்க்கு சுகமுண்டு என்னாளுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக