ஞாயிறு, 2 மார்ச், 2014

சுகம் 217-

உலகாளப்  பொது நீதி  உருவாகலாம் -அதில்
 உண்மை  ஒன்றே  வெளியாகலாம்
 நிலமாள  வந்தவர்  நிலையாவரோ -ஐயா
 நீயின்றி  புவிவாழ்வில்  சுகமாகுமோ

 கலைசூழும்  வடிவான  கதிர்வேலனே -உன்
 கருணைக்கு  எதெல்லை  இப்புவிமீதிலே
 விடிவெள்ளி  போலாகி  விளையாடுவாய் -வந்த
 வினையெல்லாம்  பறந்தோட  எனைனாடுவாய்

 வரவேண்டும்  முருகா  நீ  மனதாளவே -நீ
 வந்தாலே  வருமின்பம்  ஜெகமீதிலே
 தொடவேண்டும்  முருகாஉன்  திருப்பாதமே -உன்னைத்
 தொட்டாலே  சொர்க்கமே  எப்போதுமே

 தேவர் குலம்  காத்த செந்தில்வேலனே -அந்த
 தெய்வயானை  மனங்கொண்ட  சிவபாலனே
 பாப வினை  தீர்க்கும்  பரந்தாமனே -உனது
 பக்தரைக்  காத்திடும்  குணசீலனே

 அலையாடும்  செந்தூரில்  குடிஏறினாய் -நாடும்
 அன்பர்கள்  இல்லத்துப்  படிஏறினாய்
 கலையாவும்  உனதென்று  தினம்  பாடுவேன் -உனது
 காலடி   துணையோடு  நானாடுவேன்

 தமிழென்ற  சொல்லிற்கு  பொருளானவன் -இந்த
 தரணியிலே  எல்லோர்க்கும்  அருளானவன்
 அமிழ்தென்று  சுவையாகும்  அவனநாமமே -இதை
 அறிந்தோர்க்கு  சுகமுண்டு  என்னாளுமே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக