சனி, 22 மார்ச், 2014

தந்தை -219

தந்தையைப்  போல் உலகிலே  தெய்வம்  உண்டோ
 சர்வமும்  அவர்  என்றால்  விந்தை உண்டோ -திரைப்  படப்  பாடல்


 எந்நாளும்  மறவேனே  -என்றும்
 என்வாழ்வில்  உனையே
 எழில் மேவும்  திருவே -நீ
 எனக்கென்றும்  துணையே

 பிறர்க்காக  உதவும் -நல்ல
 பெம்மானும்  நீயே
 பிழையேதும்  புரியாத -நற்
 பெருஞ்செல்வம்  ஆனாய்

 வறியோரைக்  காக்கும் -புது
 வள்ளலும்  நீயே
 வாய்மையில்   தவறாத -உயர்
 வல்லவன்  நீயே

 கடமைக்குப்  பேர்பெற்ற -சிறந்த
 கண்ணியன்  நீயே
 கவிதைக்குப்  பொருளாகும் -என்
 கற்பகமும்   நீயே

 வம்சத்தில்  பலபிள்ளை -இங்கு
 வரவேண்டும்  உனைப்போல்
 வாழ்நாளில்  பலபாடல்  -எனக்கு
 வரவேண்டும்  இதுபோல்

 இறையோனின்  கருணை -நிதம்
 எனைக்  காக்க  வேண்டும்
 இதைப் பாட   வைக்கும் -உனது
 எழிற்ப்பாதம்  போற்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக