தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ
சர்வமும் அவர் என்றால் விந்தை உண்டோ -திரைப் படப் பாடல்
எந்நாளும் மறவேனே -என்றும்
என்வாழ்வில் உனையே
எழில் மேவும் திருவே -நீ
எனக்கென்றும் துணையே
பிறர்க்காக உதவும் -நல்ல
பெம்மானும் நீயே
பிழையேதும் புரியாத -நற்
பெருஞ்செல்வம் ஆனாய்
வறியோரைக் காக்கும் -புது
வள்ளலும் நீயே
வாய்மையில் தவறாத -உயர்
வல்லவன் நீயே
கடமைக்குப் பேர்பெற்ற -சிறந்த
கண்ணியன் நீயே
கவிதைக்குப் பொருளாகும் -என்
கற்பகமும் நீயே
வம்சத்தில் பலபிள்ளை -இங்கு
வரவேண்டும் உனைப்போல்
வாழ்நாளில் பலபாடல் -எனக்கு
வரவேண்டும் இதுபோல்
இறையோனின் கருணை -நிதம்
எனைக் காக்க வேண்டும்
இதைப் பாட வைக்கும் -உனது
எழிற்ப்பாதம் போற்றி
சர்வமும் அவர் என்றால் விந்தை உண்டோ -திரைப் படப் பாடல்
எந்நாளும் மறவேனே -என்றும்
என்வாழ்வில் உனையே
எழில் மேவும் திருவே -நீ
எனக்கென்றும் துணையே
பிறர்க்காக உதவும் -நல்ல
பெம்மானும் நீயே
பிழையேதும் புரியாத -நற்
பெருஞ்செல்வம் ஆனாய்
வறியோரைக் காக்கும் -புது
வள்ளலும் நீயே
வாய்மையில் தவறாத -உயர்
வல்லவன் நீயே
கடமைக்குப் பேர்பெற்ற -சிறந்த
கண்ணியன் நீயே
கவிதைக்குப் பொருளாகும் -என்
கற்பகமும் நீயே
வம்சத்தில் பலபிள்ளை -இங்கு
வரவேண்டும் உனைப்போல்
வாழ்நாளில் பலபாடல் -எனக்கு
வரவேண்டும் இதுபோல்
இறையோனின் கருணை -நிதம்
எனைக் காக்க வேண்டும்
இதைப் பாட வைக்கும் -உனது
எழிற்ப்பாதம் போற்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக