வானில் உலவும் நிலவு -உனக்கு
வந்து என்ன சொல்லும்
காணும் உலகில் என்றும் -தூய
கடமை ஒன்றே வெல்லும்
தேனைப் போன்ற குணமும் -பிறர்க்கு
தீமை எண்ணா மனமும்
வானைப் போல உயர்வும் -உன்
வாழ்வில் பெறவும் வேண்டும்
நன்றி சொல்லப் பழகு -அது
நாளும் தருமே சிறப்பு
ஒன்று சேர்ந்து வாழு -அது
உனக்குள் போக்கும் தாழ்வு
காலம் எங்கோ ஓடும் -தினம்
கவலை உன்னை வாட்டும்
வேலை வேலை யென உழைத்தால் -வந்த
வினைகள் விலகியே ஓடும்
நானும் நீயும் ஒன்றே -இதில்
நமக்குள் பேதம் சரியோ
பிணக்கும் பேச்சும் எதற்கு -நீயும்
பிரிந்திட நினைப்பது முறையோ
எங்கோ இறைவன் இருப்பான் -அவன்
எல்லா மக்களை யும் அணைப்பான்
தங்கம் போலவே ஜொலிப்போம் -இந்த
தரணியை ஒருநாள் ஜெயிப்போம்
வந்து என்ன சொல்லும்
காணும் உலகில் என்றும் -தூய
கடமை ஒன்றே வெல்லும்
தேனைப் போன்ற குணமும் -பிறர்க்கு
தீமை எண்ணா மனமும்
வானைப் போல உயர்வும் -உன்
வாழ்வில் பெறவும் வேண்டும்
நன்றி சொல்லப் பழகு -அது
நாளும் தருமே சிறப்பு
ஒன்று சேர்ந்து வாழு -அது
உனக்குள் போக்கும் தாழ்வு
காலம் எங்கோ ஓடும் -தினம்
கவலை உன்னை வாட்டும்
வேலை வேலை யென உழைத்தால் -வந்த
வினைகள் விலகியே ஓடும்
நானும் நீயும் ஒன்றே -இதில்
நமக்குள் பேதம் சரியோ
பிணக்கும் பேச்சும் எதற்கு -நீயும்
பிரிந்திட நினைப்பது முறையோ
எங்கோ இறைவன் இருப்பான் -அவன்
எல்லா மக்களை யும் அணைப்பான்
தங்கம் போலவே ஜொலிப்போம் -இந்த
தரணியை ஒருநாள் ஜெயிப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக