வெள்ளி, 4 ஏப்ரல், 2014

வெற்றி 224.

கண்   மலர்வாய்  கண்ணே -எங்கள்
 கலியை  தீர்த்த  பெண்ணே
 விண்ணில்  உலவும்  நிலவோ -நீ
 வேனில்   காலத்து  குளிரோ

 பொன்னும்  மணியும்  பூட்டி -அழியா
 பொங்கும்  செல்வம்  ஈட்டி
 என்னில்  உறையும்  இறைவன் -என்றும்
 எல்லா  நலமும்  தருவார்

 அன்னைநீ  இங்கே  பிறந்தாய் -என்
 ஆசை   நிறைய  செய்தாய்
 உன்னை  எண்ணியே  மகிழ்வேன் -இந்த
 உலகில்  நெடுநாள்  வாழ்வேன்

 மாடு   மனையும்  சுகமும் -உனது
 மக்கள்  தொகையும்  பெருகும்
 ஏடு  போற்ற  வாழ்க -நீயோ
 எங்கள்    வீட்டின்   விளக்கு

 ஆசை  பலவும்  சொன்னேன் -தூய
 ஆலயம்  எங்கும்  தொழுவேன்
 அன்பு  நிறைந்த  பேத்தி -நீயே
 அனைத்திலும்  எனக்கு  உசத்தி

 வாழும்   காலம்  முழுதும் -நீ
 வாழ்க  வளர்க  என்பேன்
 வேலும்  மயிலும்  காக்கும் -எதிலும்
 வெற்றி  உனக்கே  கிடைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக