கண் மலர்வாய் கண்ணே -எங்கள்
கலியை தீர்த்த பெண்ணே
விண்ணில் உலவும் நிலவோ -நீ
வேனில் காலத்து குளிரோ
பொன்னும் மணியும் பூட்டி -அழியா
பொங்கும் செல்வம் ஈட்டி
என்னில் உறையும் இறைவன் -என்றும்
எல்லா நலமும் தருவார்
அன்னைநீ இங்கே பிறந்தாய் -என்
ஆசை நிறைய செய்தாய்
உன்னை எண்ணியே மகிழ்வேன் -இந்த
உலகில் நெடுநாள் வாழ்வேன்
மாடு மனையும் சுகமும் -உனது
மக்கள் தொகையும் பெருகும்
ஏடு போற்ற வாழ்க -நீயோ
எங்கள் வீட்டின் விளக்கு
ஆசை பலவும் சொன்னேன் -தூய
ஆலயம் எங்கும் தொழுவேன்
அன்பு நிறைந்த பேத்தி -நீயே
அனைத்திலும் எனக்கு உசத்தி
வாழும் காலம் முழுதும் -நீ
வாழ்க வளர்க என்பேன்
வேலும் மயிலும் காக்கும் -எதிலும்
வெற்றி உனக்கே கிடைக்கும்
கலியை தீர்த்த பெண்ணே
விண்ணில் உலவும் நிலவோ -நீ
வேனில் காலத்து குளிரோ
பொன்னும் மணியும் பூட்டி -அழியா
பொங்கும் செல்வம் ஈட்டி
என்னில் உறையும் இறைவன் -என்றும்
எல்லா நலமும் தருவார்
அன்னைநீ இங்கே பிறந்தாய் -என்
ஆசை நிறைய செய்தாய்
உன்னை எண்ணியே மகிழ்வேன் -இந்த
உலகில் நெடுநாள் வாழ்வேன்
மாடு மனையும் சுகமும் -உனது
மக்கள் தொகையும் பெருகும்
ஏடு போற்ற வாழ்க -நீயோ
எங்கள் வீட்டின் விளக்கு
ஆசை பலவும் சொன்னேன் -தூய
ஆலயம் எங்கும் தொழுவேன்
அன்பு நிறைந்த பேத்தி -நீயே
அனைத்திலும் எனக்கு உசத்தி
வாழும் காலம் முழுதும் -நீ
வாழ்க வளர்க என்பேன்
வேலும் மயிலும் காக்கும் -எதிலும்
வெற்றி உனக்கே கிடைக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக