செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கண்ணாலம் 228.

அவன் :செவத்த  பொண்ணு  செல்லம்மா -நீ
 சித்தே  கொஞ்சம்  நில்லம்மா
 ஒத்த   ஆளு  தானம்மா -உனக்கு
 உதவி   செய்ய   வேணுமா

 அவள் :  பொலம்ப   வேணாம்   புலவரே -உனக்கு
 பொழப்பு  எதுவும்  இல்லையா
 சொல்லிப்  புட்டேன்  தெரியுதா -நீயும்
 சுருக்கப்   போயிடு  புரிஞ்சுதா

 அவன்:  அம்பைச்  சொன்னால்  பாவமா -உனக்கு
 அதிகம்  எதுக்கு  கோவமா
 வம்பு  செய்யலை  நானம்மா -இது
 வயசு   பண்ணும்   கோலம்மா

 அவள்:  சத்தம்  போட்டு நான்  அழைக்கவா -என்
 சாதி சனத்தை  இங்கே  கூட்டவா

 பேரைக்  கெடுப்பேன்  போதுமா -நீ
 பொழைச்சு  போய்யா  விவரமா


 அவன்:  அழகைப்  பாத்தேன்  ஆசையில் -நான்
 அதிகம்  வளத்தேன்  மீசையை
 பழக   வந்தேன்  பாசத்தில் -உனக்கு
 பாக்கு  வைப்பேன்  வருகிற  மாசத்தில்

 இருவரும்:  முறை  இருக்குது  கொஞ்சவே -நமக்கு
 மோகம் பொங்குது  நெஞ்சிலே
 உறவைக்  கூட்டித்தான்  கண்ணாலம் -பொறவு
 உடனே  கிளம்பணும்  ஊர்கோலம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக