அவன் :செவத்த பொண்ணு செல்லம்மா -நீ
சித்தே கொஞ்சம் நில்லம்மா
ஒத்த ஆளு தானம்மா -உனக்கு
உதவி செய்ய வேணுமா
அவள் : பொலம்ப வேணாம் புலவரே -உனக்கு
பொழப்பு எதுவும் இல்லையா
சொல்லிப் புட்டேன் தெரியுதா -நீயும்
சுருக்கப் போயிடு புரிஞ்சுதா
அவன்: அம்பைச் சொன்னால் பாவமா -உனக்கு
அதிகம் எதுக்கு கோவமா
வம்பு செய்யலை நானம்மா -இது
வயசு பண்ணும் கோலம்மா
அவள்: சத்தம் போட்டு நான் அழைக்கவா -என்
சாதி சனத்தை இங்கே கூட்டவா
பேரைக் கெடுப்பேன் போதுமா -நீ
பொழைச்சு போய்யா விவரமா
அவன்: அழகைப் பாத்தேன் ஆசையில் -நான்
அதிகம் வளத்தேன் மீசையை
பழக வந்தேன் பாசத்தில் -உனக்கு
பாக்கு வைப்பேன் வருகிற மாசத்தில்
இருவரும்: முறை இருக்குது கொஞ்சவே -நமக்கு
மோகம் பொங்குது நெஞ்சிலே
உறவைக் கூட்டித்தான் கண்ணாலம் -பொறவு
உடனே கிளம்பணும் ஊர்கோலம்
சித்தே கொஞ்சம் நில்லம்மா
ஒத்த ஆளு தானம்மா -உனக்கு
உதவி செய்ய வேணுமா
அவள் : பொலம்ப வேணாம் புலவரே -உனக்கு
பொழப்பு எதுவும் இல்லையா
சொல்லிப் புட்டேன் தெரியுதா -நீயும்
சுருக்கப் போயிடு புரிஞ்சுதா
அவன்: அம்பைச் சொன்னால் பாவமா -உனக்கு
அதிகம் எதுக்கு கோவமா
வம்பு செய்யலை நானம்மா -இது
வயசு பண்ணும் கோலம்மா
அவள்: சத்தம் போட்டு நான் அழைக்கவா -என்
சாதி சனத்தை இங்கே கூட்டவா
பேரைக் கெடுப்பேன் போதுமா -நீ
பொழைச்சு போய்யா விவரமா
அவன்: அழகைப் பாத்தேன் ஆசையில் -நான்
அதிகம் வளத்தேன் மீசையை
பழக வந்தேன் பாசத்தில் -உனக்கு
பாக்கு வைப்பேன் வருகிற மாசத்தில்
இருவரும்: முறை இருக்குது கொஞ்சவே -நமக்கு
மோகம் பொங்குது நெஞ்சிலே
உறவைக் கூட்டித்தான் கண்ணாலம் -பொறவு
உடனே கிளம்பணும் ஊர்கோலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக