பொன்னான காலம் -மீண்டும்
புவிமீது வருமா
என்னாசைக் கண்ணா -உன்னை
என்றுநான் காண்பேன்
கண்களில் நீரோ -ஏனோ
கரைந்தோட நின்றேன்
பெண்ணிலே நானோ -என்ன
பெரும்பிழைகள் செய்தேன்
கங்கை நதிதீரம் -நம்
காதல்கதை சொல்லும்
கண்ணனின் கீதம் -நம்
காதுகளை அள்ளும்
கோபியர் நடுவே -நீ
குழலூதும் காட்சி
கொள்ளை இன்பமாகும் -அது
குவலயத்தில் நேர்த்தி
காளிங்கனை வதைத்து -மக்களை
காத்தவனும் நீயே
ஆலிங்கன சுகம்பெறவே -இன்னும்
அலையுதே நெஞ்சம்
துரியனின் சபையில் -அன்று
துகிலுரியும் பொழுதில்
பெண்மானம் காத்த - எங்கள்
பெருமானும் நீயே
கீதையெனும் வேதம் -உரைத்த
கிருஷ்ணனும் நீயே
சோதனையில் காக்கும் -நல்ல
சுகபுருஷன் நீயே
புவிமீது வருமா
என்னாசைக் கண்ணா -உன்னை
என்றுநான் காண்பேன்
கண்களில் நீரோ -ஏனோ
கரைந்தோட நின்றேன்
பெண்ணிலே நானோ -என்ன
பெரும்பிழைகள் செய்தேன்
கங்கை நதிதீரம் -நம்
காதல்கதை சொல்லும்
கண்ணனின் கீதம் -நம்
காதுகளை அள்ளும்
கோபியர் நடுவே -நீ
குழலூதும் காட்சி
கொள்ளை இன்பமாகும் -அது
குவலயத்தில் நேர்த்தி
காளிங்கனை வதைத்து -மக்களை
காத்தவனும் நீயே
ஆலிங்கன சுகம்பெறவே -இன்னும்
அலையுதே நெஞ்சம்
துரியனின் சபையில் -அன்று
துகிலுரியும் பொழுதில்
பெண்மானம் காத்த - எங்கள்
பெருமானும் நீயே
கீதையெனும் வேதம் -உரைத்த
கிருஷ்ணனும் நீயே
சோதனையில் காக்கும் -நல்ல
சுகபுருஷன் நீயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக