புதன், 30 ஏப்ரல், 2014

கீதை 230.

பொன்னான  காலம் -மீண்டும்
 புவிமீது   வருமா
 என்னாசைக்  கண்ணா -உன்னை
 என்றுநான்   காண்பேன்

 கண்களில்   நீரோ -ஏனோ
 கரைந்தோட   நின்றேன்
 பெண்ணிலே   நானோ -என்ன
 பெரும்பிழைகள்   செய்தேன்

 கங்கை  நதிதீரம் -நம்
 காதல்கதை   சொல்லும்
 கண்ணனின்  கீதம் -நம்
 காதுகளை    அள்ளும்

 கோபியர்   நடுவே -நீ
 குழலூதும்   காட்சி
 கொள்ளை   இன்பமாகும் -அது
 குவலயத்தில்   நேர்த்தி

 காளிங்கனை   வதைத்து -மக்களை
 காத்தவனும்   நீயே
 ஆலிங்கன   சுகம்பெறவே -இன்னும்
 அலையுதே   நெஞ்சம்

 துரியனின்   சபையில் -அன்று
 துகிலுரியும்   பொழுதில்
 பெண்மானம்   காத்த - எங்கள்
 பெருமானும்   நீயே

 கீதையெனும்   வேதம் -உரைத்த
 கிருஷ்ணனும்   நீயே
 சோதனையில்   காக்கும் -நல்ல
 சுகபுருஷன்   நீயே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக