பொன்னிற வானம் -நன்கு
பூத்திடும் வேளை
கண்களின் எதிரே -ஒரு
காரிகை வந்தாள்
நில்லெனச் சொன்னேன் -தலை
நிமிரவே இல்லை
வில்லெனும் புருவம் -பிறர்
வியந்திடும் உருவம்
தங்கத்தின் நிறமோ -அந்த
தாரகை அழகு
பொங்கிடும் இளமை -கவியில்
புனைவதோ பெருமை
வாழைத் தண்டென -அவளுக்கு
வாய்த்திட்டக் கால்கள்
பாளைக் குருத்தென -நன்கு
பளிச்சிடும் பற்கள்
நெற்றியில் திலகம் -அவளை
நெருங்கினால் கலகம்
பற்றிப் படருமே -அந்த
பாவை இளங்கொடி
துணையென வேண்டி -நானும்
தூதுகள் விடவோ
இணையில்லாப் பரிசினை -எனக்கே
என்றுநான் கொள்ளவோ
பூத்திடும் வேளை
கண்களின் எதிரே -ஒரு
காரிகை வந்தாள்
நில்லெனச் சொன்னேன் -தலை
நிமிரவே இல்லை
வில்லெனும் புருவம் -பிறர்
வியந்திடும் உருவம்
தங்கத்தின் நிறமோ -அந்த
தாரகை அழகு
பொங்கிடும் இளமை -கவியில்
புனைவதோ பெருமை
வாழைத் தண்டென -அவளுக்கு
வாய்த்திட்டக் கால்கள்
பாளைக் குருத்தென -நன்கு
பளிச்சிடும் பற்கள்
நெற்றியில் திலகம் -அவளை
நெருங்கினால் கலகம்
பற்றிப் படருமே -அந்த
பாவை இளங்கொடி
துணையென வேண்டி -நானும்
தூதுகள் விடவோ
இணையில்லாப் பரிசினை -எனக்கே
என்றுநான் கொள்ளவோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக