வெள்ளி, 25 ஏப்ரல், 2014

அழகு 227.

பொன்னிற   வானம் -நன்கு
 பூத்திடும்  வேளை
 கண்களின்  எதிரே -ஒரு
 காரிகை   வந்தாள்

 நில்லெனச்  சொன்னேன் -தலை
 நிமிரவே  இல்லை
 வில்லெனும்  புருவம் -பிறர்
 வியந்திடும் உருவம்

 தங்கத்தின்  நிறமோ -அந்த
 தாரகை   அழகு
 பொங்கிடும்  இளமை -கவியில்
 புனைவதோ  பெருமை

 வாழைத்  தண்டென -அவளுக்கு
 வாய்த்திட்டக்  கால்கள்
 பாளைக்  குருத்தென -நன்கு
 பளிச்சிடும்  பற்கள்

 நெற்றியில்  திலகம் -அவளை
 நெருங்கினால்  கலகம்
 பற்றிப்  படருமே -அந்த
 பாவை  இளங்கொடி

  துணையென   வேண்டி -நானும்
 தூதுகள்   விடவோ
 இணையில்லாப்  பரிசினை -எனக்கே
 என்றுநான்  கொள்ளவோ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக