மானாடும் வேளை -அது
மகிழ்வான சோலை
மனம்துள்ளும் நேரம் -என்
மணவாளன் எங்கே
தேனோடும் மொழியான் -அவனை
தினம்தேடி அலைந்தேன்
வீணாக மறைந்தே -ஏனோ
என்விழிநீரை ரசித்தான்
விண்ணோடும் முகிலே -அங்கு
விளையாடும் மீனே
என்தேவன் எங்கே -எனை
இட்டுப்போ அங்கே
கண்ணாலே பேசியே -நல்ல
காலங்கள் போச்சு
என்னாசைத் துரையே -உன்னை
எந்நாளும் மறவேன்
நீராடும் வேளை -எனது
நெஞ்சத்தில் நீயே
போராடும் மனதில் -நீ
புதையலாய் வந்தாய்
நீயள்ளித் தந்தாய் -நானும்
நிறைவாக உண்டேன்
சொல்லியது சொர்க்கம் -அதில்
சொக்கினேன் நித்தம்
வந்தாலே மகிழ்வேன் -எனது
வாசல் வழி பார்ப்பேன்
சொந்தமெனச் சொல்ல -எனக்கு
சுந்தரனும் நீயே
மகிழ்வான சோலை
மனம்துள்ளும் நேரம் -என்
மணவாளன் எங்கே
தேனோடும் மொழியான் -அவனை
தினம்தேடி அலைந்தேன்
வீணாக மறைந்தே -ஏனோ
என்விழிநீரை ரசித்தான்
விண்ணோடும் முகிலே -அங்கு
விளையாடும் மீனே
என்தேவன் எங்கே -எனை
இட்டுப்போ அங்கே
கண்ணாலே பேசியே -நல்ல
காலங்கள் போச்சு
என்னாசைத் துரையே -உன்னை
எந்நாளும் மறவேன்
நீராடும் வேளை -எனது
நெஞ்சத்தில் நீயே
போராடும் மனதில் -நீ
புதையலாய் வந்தாய்
நீயள்ளித் தந்தாய் -நானும்
நிறைவாக உண்டேன்
சொல்லியது சொர்க்கம் -அதில்
சொக்கினேன் நித்தம்
வந்தாலே மகிழ்வேன் -எனது
வாசல் வழி பார்ப்பேன்
சொந்தமெனச் சொல்ல -எனக்கு
சுந்தரனும் நீயே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக