வெள்ளி, 25 ஏப்ரல், 2014

சொர்க்கம் 226.

மானாடும்   வேளை -அது
 மகிழ்வான  சோலை
 மனம்துள்ளும்  நேரம் -என்
 மணவாளன்  எங்கே

 தேனோடும்  மொழியான் -அவனை
 தினம்தேடி  அலைந்தேன்
 வீணாக  மறைந்தே -ஏனோ
 என்விழிநீரை  ரசித்தான்

 விண்ணோடும்  முகிலே -அங்கு
 விளையாடும்  மீனே
 என்தேவன்  எங்கே -எனை
 இட்டுப்போ  அங்கே

 கண்ணாலே  பேசியே  -நல்ல
 காலங்கள்  போச்சு
 என்னாசைத்   துரையே -உன்னை
 எந்நாளும்  மறவேன்

 நீராடும்  வேளை -எனது
 நெஞ்சத்தில்  நீயே
 போராடும் மனதில் -நீ
 புதையலாய்  வந்தாய்

நீயள்ளித்    தந்தாய் -நானும்
 நிறைவாக  உண்டேன்
 சொல்லியது  சொர்க்கம் -அதில்
 சொக்கினேன்  நித்தம்

 வந்தாலே  மகிழ்வேன் -எனது
 வாசல்  வழி  பார்ப்பேன்
 சொந்தமெனச்  சொல்ல -எனக்கு
 சுந்தரனும்  நீயே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக