வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

azhakoviyam162

அலையான  கூந்தல்  கருநீலமோ -உன்
 அழகான  கண்கள்  கவிபாடுமோ
 சிலையான  பொன்மேனி  கலைக்கூடமோ -நீ
 சிரிக்கின்ற  போதிலே முத்தாடுமோ

 வளைவான அங்கங்கள்  பந்தாடுமோ -அருகே
 வந்தாலே என்னுள்ளம்  பித்தாகுமோ
 குழைவான  அதரங்கள்  பழ்தோட்டமோ -உன்
 குலுங்கிடும் அழகு  ஒருசதிராட்டமோ

 வளையாடும்  கையோசை  வளையாபதி -நீயோ
 வந்தாலே  பெறலாமே  மனநிம்மதி
 கலையோடும்  கருவிழிகள்  மீந்தானடி -உனைக்
 கண்டாலே  இனிக்கின்ற  தேன்தானடி

 நிலவுக்கு குளிர்ச்சியே  நீதானடி -தினம்
 நினைத்தாலே  வருவது  மலர்ச்சிதானடி
 கலவிக்கு  வழிகாட்டும்  கண்ஜாடையே -நாளும்
 கலைவெள்ளம் வழிந்தோடும் சிர்ரோடையே

 அழகுக்கு  அழகூட்டும்  அழகோவியம் -தெருவில்
 அசைந்தாடி  வருகின்ற எழிலோவியம்
 பருவத்தில்  உலகாளும் மலர்க்கூட்டமே -தமிழில்
 பாடியே  ரசிப்பதில்  என்நாட்டமே 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

vayaloor murugan-161.

வயலூர்  எங்கும்  பெருங்கூட்டம் -அந்த
 வள்ளல் முருகன் திருக்கூட்டம்
 பயமே  இல்லை  பணிந்தாலே -நல்ல
 பலனே உண்டு  நினைந்தாலே

 கருணை பொழியும்  கந்தனவன் -மனக்
 கவலை  தீர்க்கும்  சொந்தமவன்
 அருணகிரி போற்றும் அன்பனவன் -நம்
 ஆதிசிவன் பெற்ற  திருமுருகன்  

 பசுமை  சூழ்ந்திடும்  வயல் நடுவே -கேட்கும்
 வரம்தர  முருகன்  இருக்கின்றான்
 சுமைதனை  இறக்கிட  வாருங்கள் -மனத்
 தூய்மையில்  அவனைப்  பாருங்கள்

 பார்த்திடப்  பரவசம்  தலைக்கேறும் -வந்த
 பஞ்சமும்  நோயும்  பறந்தோடும்
 பிரார்த்தனை  அனைத்தும்  நிறைவேறும் --சிவன்
 பிள்ளையால்  அன்றோ தெளிவாகும்

 வயலூர்  முருகன்  வடிவேலன் -நம்மை
 வந்தே  காக்கும்  குணசீலன்
 துணையாய்  இருப்பான்  நம்மோடு -இனி
 துதிப்போம்  இன்றே  அன்போடு

 அள்ளித்  தருவது  வள்ளல் குணம் -நம்மை
 அனைத்துக்  காப்பது அன்புமனம்
 சொல்லித் தருவது புரிகிறதா -ஒரு
 சொர்க்கம்  இருப்பது தெரிகிறதா

 நாளும் இங்கே  வாருங்கள் -உமக்கு
 நல்லது நடந்தால்  கூறுங்கள்
 வேலும்  கோளும்  பலமளிக்கும் -நெஞ்சில்
 வெற்றி  வேலனே குடீருப்பான் 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

vetri-160

இறைவன்  ஒருநாள்
 என்னிடம் வருவார்
 இர்ருப்பவர்  காத்திட
 இனியவை கேட்பேன்

 பெண்களைப்  போற்றும்
 பெருமை கேட்பேன்
 கண்களில்  மேலாம்
 கருணை  கேட்பேன்

 மண்ணகம்  வாழ்ந்திட
 மகிமை  கேட்பேன்
 மாதங்கள்  முழுதும்
 மழைவரக் கேட்பேன்

 வீரம் கேட்பேன்
 வெற்றியைக்  கேட்பேன்
 சோரம்  போகா
 சொல்வளம் கேட்பேன்

 மதியினால்  ஆளும்
 மாயம்  கேட்பேன்
 விதியை வென்றிட
 விவரம்  கேட்பேன்

 பிள்ளைகள்  கேட்பேன்
 பெரும்புகழ்  கேட்பேன்
 எல்லையில்  அமைதி
  இருந்திடக்  கேட்பேன்

 பிறவா  வரமது
 பெற்றிடக்  கேட்பேன்
 மறவாது நினைத்திடும்
 மங்களம்  கேட்பேன்

kannammaa

உன்னையே  ரதிஎன்று
உருகுகின்ரேனடி  கண்ணம்மா
 என்னிலேபாதி  என்ரும்நீயடி

 கார்கால  நிலவினிலே
 காற்று வாங்கப்  போகயிலே
 தூறலாக  வந்தவளே கண்ணம்மா

 இரவு பகல் நேரத்திலே
 இளமை பாட்டு படிக்கையிலே
உலகம்நமக்கு மறந்து போகும்  கண்ணம்மா

 துடிஇடையில் சேலை செய்த
 சுகத்தை  கூட பெறவில்லையே
 துடிக்கும் என்மனசைக்  கேளு  கண்ணம்மா

 அன்னம் போல நடக்கயிலே
 ஆவி பறி  போகுதடி
 எண்ணமெல்லாம்  நீயல்லவோ  கண்ணம்மா

 என்னை  உனக்கு புரியல்லியா
 எதுவும் இன்னும் தெர்யல்லியா
 கண்ணிலே  வலை விரித்தாய்  கண்ணம்மா

 பின்னல் ஜடை  ஆடுகையில்
 பேரழகு  குலுங்கும்போது
 என்னை நானே மறந்தேனே கண்ணம்மா

 ஒன்று படும் காலம் வரும்
 உலகம் நம்மை  சேரவிடும்
 நன்றி சொல்வோம்  அப்போது  கண்ணம்மா

 பிள்ளை குட்டி அதிகம் வேண்டும்
 பெருமையான வாழ்வு வேண்டும்
 நல்லவராய்  வாழவேண்டும் கண்ணம்மா 

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

ulagamkaa

காலமெனும்  காட்டாறு -நம்
 கண்ணெதிரில்  ஓடுதடா
 சீலமிகும் மனிதரெல்லாம் -தெருவில்
 சிலையாக  நிற்பாரடா

 ஆளைசுரண்டிப்  பிழைப்பதுவும் -சிலர்
 ஆளடிமை  செய்வதுவும்
 வேலையில்லா  வீணர் செய்யும் -தினம்
 விஷமமான  வேலையடா

 சோலைகளும்  பறவைகளும் -இங்கு
 சொல்லுகிற  சேதி என்ன
 நாலைஇந்த  உலகம் -என்றும்
 நமதுகையில்  தானே என்று

 வானத்தாய்  வடிக்கின்ற -அந்த
 வற்றாத  கண்ணீரோ
 தானமாக  பூமயிலே -நமக்கு
 தண்ணீராய்  கொட்டுதடா

 கொட்டுகிற  மழையினுக்கு -வானில்
 குளிர்நிளவு  குடையாகும்
 எட்டுகிற உயரம்வரை -நாம்
 எட்டிப்பிடிக்க  வேண்டாமோ

 வம்புபேசி  கதையளக்க -இந்த
 வாழ்நாளே போதுமாடா
 அன்பினாலே  ஆள்வதற்கு -இனி
 யாருமென்ன  வேண்டாமோ

 குடிசைகளும்  கோபுரமாய் -நமது
 குவலயத்தில்  மாறாதோ
 மடமைகளும்  மமதைகளும் -என்று
 மாயமாகிப்  போகாதோ

 இருப்பதைக்  கொடுத்துவிடு -மனதில்
 இரக்கத்தை  வளர்த்துவிடு
 உறக்கத்தை  மறந்துவிடு -நீயிந்த
 உலகத்தை  வென்றுவிடு 

சனி, 10 ஆகஸ்ட், 2013

mogam

பூவார்  சோலையில்
 புதுமலர்  கண்டேன்
 பொன்னெழில்  மேனியில்
 புதுமை  கொண்டேன்

 நாவார்   தமிழில்
 நயம்பட உரைத்தேன்
 நாயகி  நீயென
 நானும் நினைத்தேன்

 காரெழில்  கூந்தலில்
 கவனம் இழந்தேன்
 கண்மணி உன்னிடம்
 காதல்   அறிந்தேன்

 நிலவில் இரவில்
 நிம்மதி  மறந்தேன்
 நேரிழை உன்னால்
 நினைவும் துறந்தேன்

 பேச்சினை விட்டேன்
பிரியம்  வளர்த்தேன்
 மூச்சினை  மட்டும்
 மோகம் கொண்டேன்

இணையடி  நிழலில்
 எனது  மனமே
 துணையென  வந்திடில்
 தொடருமே இன்பம்

 இன்பங்கள்  கோடி
 இருவரும் தேடி
 அன்பெனும் வழியில்
 அமைதியைக்  காண்போம் 

pillaiyaarpatti karpaka vinaayakar

அற்புத  அழகு -நம்
 அகத்தினில்  தெளிவு
 கற்பகத்  திருவடி -மலர்
 பற்றிட  இனிது

 குடவரைக் கோவில் -நம்
 கொற்றவன் அருளால்
 சிற்பிகள்  அன்று -இங்கு
 செய்தனர்  நன்று

 அற்புத  மூர்த்தி -நாம்
 அடையலாம்  கீர்த்தி
 கற்பகத்  திருவினைக் -கண்ணால்
 கண்டிட  நேர்த்தி

 தொப்பைக்  கணபதி -தினம்
 தொழுதிட  அமைதி
 அப்பம் ஆவலுடன் -இங்கே
 அனைவரும் தொழுவார்

 சதுர்த்தி  நாளில் -நான்கு
 சக்கரத்  தேரில்
 சுற்றியே  வருவார் -நமக்கு
 சுகமெலாம் தருவார்

 வல்லமை பெற்றிட -இந்த
 வல்லபை பணிவோம்
 அல்லல்  நீங்கிடும் -என்றும்
 அகவொளி  கூடிடும்

manithaa

கண்களை  மூடி
 கடவுளை  தேடு
 கலக்கம் நீங்கி
 கற்பகம் தோன்றும்

 அற்புத அமைதி
 அகத்தினில்  கூடும்
 யாவும் சிவமென
 அகவொளி  கூடும்

 சஞ்சலம்  தீரும்
 சாந்தம்  சேரும்
 பஞ்சென  துயரம்
 பறந்தே  ஓடும்

 எல்லாம்  இனிக்கும்
 இனிப்பும் கசக்கும்
பொல்லா  எண்ணம்
 நில்லாது  போகும்

 நிலையாய் வாழ்வு
 நிலைத்திட  வேண்டி
 அலையும் மனதினை
 அடக்குதல் வேண்டும்

 கலையாய் மிளிரும்
 கடவுளை பணிவாய்
 அலைவாழ்  கடலிலும்
 ஆண்டவன் தெரிவான்

 தெரியும் அவனது
 திருவடி நாடு
 புரியும் உண்மை
 புறப்படு  மனிதா 

pottri pottri

எல்லா   உலகமும்
 இர்ருப்பாய்  போற்றி
 எம்மைக்  காக்கும்
 இறைவா  போற்றி

 போற்றிப்  பாடும்
 புதல்வன்  நானே
 பூமியை  ஆளும்
 புனிதரே  போற்றி

 போற்றி  துதிப்பார்
 பெருமையை  தானே
 எங்கிலும்  அமைதி
 இறைவனே  தருவாய்

 திருவாய்  தேனாய்
 திகழும் உருவே
 தேனார்  தமிழில்
 தினமுனை  தொழுவோம்

 வானோர்   மதியில்
 வடிவம்  நீயே
 வற்றாக்  கருணை
 வளமே  போற்றி

 எண்ணும்  எழுத்தும்
 இசையும்  நீயே
 எல்லாக் காலமும்
 இருப்பவன் நீயே

 பூக்கும் மலரின்
 புன்னகை  நீயே
 புண்ணியம்  யாவும்
 தருபவன்  நீயே

 யாக்கை  என்பது
 உனது  உடமை
 யாவும்  நீயே
 நலம் அருள்வாயே

 அருளின் உருவே
 அமைதி நிழலே
 இருளைப்  போக்கும்
 இனியா  போற்றி

 நாயேன் சிறியேன்
 நன்னிலை  அறியேன்
 தாயாய்  நீயே
 தாங்கிட வேண்டும்

 அருள்நிலை உலகில்
 அனைவரும் பெற்று
 பொருளுடன்  கூடிய
 புகழினைப் பெறுக

 எழுகதிர்  செல்வா
 எங்களின்  தலைவா
 இன்னுயிர்  கக்கும்
 இறைவனே  போற்றி

 போற்றி போற்றி
 புனிதனை  போற்றி
 எனது  எண்ணம்
 எடுத்து  உரைத்தேன்

 பார்க்கும்  யாவரும்
 பயன்பெற வேண்டும்
 பாட்டுடை  தலைவா
 உன்பாதம்  போற்றி