திங்கள், 24 ஆகஸ்ட், 2020

காட்சி 8 2 5

கண்ணால்       வலையை     வீசி    ====நல்ல
காதல்       கதைகள்      பேசி
என்னை      வளைத்தாய்    மானே   ---இனி
நீதான்      எனக்கு    இனிக்கும்     தேனே

நிலவைப்      போல     குளிர்வாய்  ---என்
நெஞ்சம்        நிறைய      அமர்வாய்
பழக       பழமாய்       இனிப்பாய்    ---எனக்கு
பருவ        விருந்து      அளிப்பாய்

வாழுங்     காலம்       கோடி   ----நல்ல
வாழ்வு       வருமே     தேடி
சூழும்      துயரம்    ஏது   ----நம்
தோள்கள்      இணையும்    போது

கண்ணில்     இமையாய்     இருப்பேன்    ----உன்
கருணை      முகத்தை      ரசிப்பேன்
மண்ணில்     வந்த       வானம்    ----அடி
மங்கையே      இன்னுமா     நாணம்

கண்கள்        காணும்        காட்சி   ---அது
காலம்       முழுதும்          ஆட்சி
பெண்ணாய்     பிறந்த      தேவி    ---உன்னை
பிரிய      நினைத்தால்    நானே    பாபி
 

கண்ணே 8 2 4

கனியாத         காதல்       கைகூடுமா    ---இல்லை
கானல்          நீரான        கதையாகுமா
இனிதாக      மணவாழ்வு      உறவாகுமா     ----இல்லை
ஏக்கமே         வாழ்வினில்      வரவாகுமா

கணை விட்டுப்        பாயுதே       அம்பு     ---அடி
கண்ணாட்டி  உன்னோடு   எந்நாளும்    வம்பு
வீணாகப்        போகுதே       காலம்    ----இந்த
விவரம்      அறிந்தால்     வரும்  நல்லகாலம்

உறவுக்கு      கையேந்தி      நின்றேன்    ----உன்னை
உளமாற      தினம்    பூசை  செய்தேன்
பிரிவென்ற     வரம்தர      வேண்டாம்    ---இந்த
பித்தனை    எந்நாளும்     மறந்திட  வேண்டாம்

வாழ்ந்திடக்      கனவுகள்        கண்டேன்    ----உன்
வாலிபத்தை    வாரியள்ளி       உண்பேன்
சூழ்ந்திடும்       நிலையென்று    மாறும்     ----என்
சுந்தரி         அமைதி     உன்னாலே    சேரும்

உள்ளதை       வெளியில்     சொன்னேன்    ---உன்
உள்ளத்தில்    இடம் தேடி     வந்தேன்   
இல்லையென்      சொல்லாதே    பெண்னே    ----நான்
இருப்பது      உன்னாலே  அல்லவோ     அன்பே 



தெய்வம் 8 2 3

கண்ணில்     வைத்துக்      காத்திருந்தேன்    ----காதலை
நெஞ்சில்        பூசை       வைத்தேன்
பொன்னாய்     மதித்து    வாழ்ந்தேன்    ----உன்
பூவடியில்       தஞ்சம்       என்றேன்

மஞ்சம்        என்னையும்     அழைக்குது    ----உன்
மைவிழி       சுண்டி  சுண்டி    இழுக்குது
கொஞ்சம்     இரங்கிடக்      கூடாதா    ----நான்
கூவித்        தவிப்பது      புரியாதா

கருணை     மழைதனை       பொழியவிடு    ----இந்த
காதலன்        பக்கம்  திரும்பிவிடு
அருளை       வாரியே      வழங்கிவிடு   ----இந்த
அடிமையை      இனியாவது     வாழவிடு

நீயும்        நானும்        ஒன்றல்லவா   ---நம்
நினைவுகள்       எந்நாளும்       நன்றல்லவா
காயும்       நிலவைக்      கணக்கிலெடு    ----உன்
காதலன்       எனக்கினி      வாழ்வு கொடு

வானில்         எங்கும்      பறந்திடலாம்    ----இந்த
வையகம்       முழுதும்    திரிந்திடலாம்
தேனின்        சுவையென     வாழ்ந்திடலாம்    ----அந்த
தெய்வம்       அருளால்       சுகம் பெறலாம் 

கீதங்கள் 822

கண்ணில்     வந்தாய்    கண்மணி   ---உன்
கனிஇதழ்       என்றும்     மாங்கனி
என்னில்   மலர்ந்த     பூங்கொடி  ---நான்
என்றும்     உந்தன்     கைப்பிடி

பொன்னில்    விளைந்த      பூவையே   ---உன்
பூவுடல்        எனக்கு       தேவையே
கண்கள்      சொல்வது      காவியம்    ---நீ
கம்பன்        வரைந்த        ஓவியம்

நின்றால்       நடந்தால்      நிலவடி    ----நான்
நித்தம்       தொழுவேன்     திருவடி
ஒன்றாய்       சேர்ந்திடக்     கூடுமோ    ----உன்
மனம்       அதனை யும்       நாடுமோ

இரவு     முழுவதும்       ஏக்கம்      ----அடியே
எங்கேயோ      போனது      தூக்கம்
உறவு       என்பதில்     நாட்டம்   ---நீ
உதறினால்     எடுப்பேன்      ஓட்டம்

வாட்டம்      போக்கிட      வந்திடு    ----உனது
வற்றாத        அன்பினை     தந்திடு
தோட்டம்      துறவினில்      ஆடலாம்    ----நாம்
சுகமாய்       கானம்       பாடலாம் 



வெள்ளி, 1 மே, 2020

பலா 8 2 1

நிலவால்          முகம்         மறைத்தாய்   ----உன்
நினைவால்      என்னை     வளர்த்தாய்
பழகத்          தமிழாய்      இனித்தாய்    ---உன்
பருவத்தால்         என்னை     வளைத்தாய்

கண்கள்       உறங்க         வில்லை     ----அடி
காதலே        பெருந்       தொல்லை
பெண்கள்        படைத்   தலைவி   -----நீ
பேசப்  பேசப்    கொட்டும்     அருவி

சிரித்து       என்னை      சிறைபிடித்தாய்    ---என்
ஜீவன்          பறி      போகுதடி
பழுத்த      பலாச்      சுளையே    ----நீ
பக்கம்      இருக்க     ஏது   கவலையே

நினைக்க       நினைக்க       இனிக்குமடி    ----உன்
நீண்ட        விழிகள்       அழைக்குமடி
அணைக்க     நெஞ்சம்     துடிக்குமடி   ----என்
அருகில் வர      என்ன      வெட்கமடி

ஆசை        அடங்க      வில்லை   ----என்
அன்பில்     எந்தக்     குறையுமில்லை
பூசை       செய்திடும்    பக்தனடி   ---உனது
புன்னகை     ஒன்றே      போதுமடி 

சனி, 28 மார்ச், 2020

விடிவெள்ளி 8 2 0

காலையில்       சீக்கிரம்       எழுவாய்    ---உள்ள 
கடமையை      விரைவில்     முடிப்பாய் 
வேளைக்குப்    பள்ளி       செல்வாய்    ----அங்கு 
விவரம்       தெரிந்து       கொள்வாய் 

மாலையில்       இல்லம்      வருவாய்   ---மற்றவரோடு 
இருந்திடு        நீயும்       இயல்பாய் 
சோலையில்     சுற்றி      மகிழ்வாய்    ----அங்கு 
சுத்தமான      காற்றினை     உணர்வாய் 

அன்னை       தந்தையை      மதிப்பாய்    ----அவர் 
அறிவுரைப்படியே  தினமும்     நடப்பாய் 
எண்ணத்தில்    நல்லதை      நினைப்பாய்  ---என்றும் 
இதயத்தில்      நன்றியை     சுமப்பாய் 

தேசம்       செழிப்புற        உழைப்பாய்   ----நீ 
தேடிய      செல்வத்தை      பகிர்வாய் 
மோச       எண்ணத்தை      துறப்பாய்    ---வீண் 
மோக     மென்பதை      தவிர்ப்பாய்    

நாட்டிற்கு        நன்றியாய்       இருப்பாய்   ----என்றும் 
நயவஞ்சகர்க்கு      எதிரியாய்     திகழ்வாய் 
வீட்டிற்கு         பிள்ளையாய்      ஒளிர்வாய்   ---நீ 
விடிவெள்ளியாய்      உலகினில்       நிலைப்பாய் 

சரம் 819

அழகாக         வந்தாய்     ----என்னை 
அறிவாலே      வென்றாய் 
பழகாமல்        சென்றாய்     ---தமிழ் 
பாவை        நீ  யாரோ 

சிலை போல      நின்றேன்     ---உன் 
சிற்றிடை     கண்டேன் 
கலையாத     நிலவோ    ---நீ 
காமன்      விடும்   சரமோ 

உளமாற       நினைத்தேன்   ---என் 
உறவாக்கத்    துடித்தேன் 
விழிவாசல்      திறப்பாய்    ---என்னை 
விரும்பி  நீ      அணைப்பாய் 

நாலடி        நடந்தால்    ---புது 
நாடகம்       நடக்கும் 
சேலடி       பட்டால்    ---என் 
சிந்தையும்      மயஙகும் 

வரம்  வேண்டி       வந்தேன்   ---இனிய 
வாழ்வையே      தருவாய் 
கரம்  பற்ற      வேண்டும்    ----உந்தன் 
காலடி        தொடர்வேன் 

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

சங்கமம் 8 1 8

 கண்களை            மூடினால்      -----நீ 
கனவினில்        வருகுவாய் 
பெண்களில்        புதுமையே    ---நீயோ 
பேசிடும்            பதுமையே 

உன் மனம்      நுழைந்திட    ---எனக்கு 
உரிமையைத்      தாருமே 
கண்களில்        கருணையைத்    ---என் 
கயல்விழி        காட்டுவாய் 

திங்களும்        வானும் போல்   ---நல்ல 
தேனுடன்        பாலும்   போல் 
சங்கமம்       காணலாம்    ---புது 
சரித்திரம்     பேணலாம் 

ஈரடி        நடந்திடில்    ---என் 
இளமைகள்      எழுந்திடும் 
போரினை       நடத்தவே    ----உடன் 
புதுப்படை       கிளம்பிடும் 

கவிஞர்கள்      பாடுவார்    ---நீ 
கற்பக         விருட்சமே 
காதலை      ஏற்றிடு    ---எனது 
கவலையைப்      போக்கிடு 

புதன், 19 பிப்ரவரி, 2020

கிறக்கம் 8 1 7

 மான்           ஆடும்           சோலை      ----அங்கு
மயில்           கூடும்        வேளை
மீன்         போன்ற         கண்ணாள்    ---ஒரு
மின்னல்        போல்      வந்தாள்

யாரென்று       நானும்      கேட்டேன்    ----அவள்
எழில்          என்று        சொன்னாள்
கூரான       விழிகளைக்       கொண்டு    ----என்னை
குத்திக்       கிழித்துத்        சிரித்தாள்

சீறினாள்        சிங்கமாய்        அன்று    ---நானோ
சிறுநரி         ஆனேனே      நின்று
வேறென்ன       சொல்லவா      முடியும்    ---அந்த
விரகமே        என்றுதான்      விடியும்

உள்ளத்தில்      வந்ததே        நடுக்கம்   ---புது
உறவுக்கு       என்னுள்      கிறக்கம்
வெள்ளத்தில்     மிதக்கின்ற     துரும்போ    ----அவளை
வீழ்த்திட        என்மனமும்        விரும்பும்

கருணைப்       பார்வை யவள்       வீசவே    ---பின்பு
கவர்ந்தேனே       அன்பாகப்        பேசியே
அருகினில்       என்னையவள்      இழுத்தாள்     ---நான்
அப்பாவி         என்பதால்       பிழைத்தேன்  

சனி, 18 ஜனவரி, 2020

பொங்கல் 816

                                         பல்லவி 
பொங்கல்          பிறந்தது            பாருங்கடி    ----இளம் 
பூவையர்           யாவரும்           வாருங்கடி 
                                  அனுபல்லவி 
திங்களை          தேவியைக்       கும்பிடுவோம்    -----இந்த 
தேசம்          செழித்திட         உழைத்திடுவோம் 
                               சரணங்கள் 
எங்கும்           பசுமை         நீரோட்டம்   ----இங்கு 
எத்துணை      மனிதர்       பெருங்கூட்டம் 
புத்தர்           பிறந்ததும்        நம்நாட்டில்    ---அவர் 
போதனை       செழித்தது      அயல்நாட்டில் 

இல்லையென்பதை       மாற்றி         வைப்போம்     ---நமது 
இந்திய        நாட்டை     உயரவைப்போம் 
எல்லையில்        தோன்றும்     பகைவர்களை    ----நமது 
இரும்புக்           கரத்தால்         முறியடிப்போம் 

மதங்களின்        பெயரால்       எதற்கு         சண்டை   ----இந்த 
மண்ணில்        அனைவரும்       ஒன்றேயன்றோ 
எதற்கும்         துணிந்து       நடைபோடு     -----நாம் 
இந்தியர்         என்கின்ற       நினைவோடு 

(தையில்     வருகின்ற      பொங்கலை       வரவேற்கும்      பாடல் )

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மிருகம் 8 1 5

சொல்லாமல்          இருக்க        முடியல்லே   ----உலகம்
சொன்னதும்       திருந்துமோ      தெரியல்லே
வெள்ளையைப்      பாலெனச்     சொல்லுறான்    ---வீணே
வெட்டியாய்க்        காலத்தை       மெல்லுறான்

உள்ளதை        பொய்யென      மாத்துறான்    ---இங்கே
உழைக்காமல்       காசினைத்      தேத்துறான்
கள்ளமே        வாழ்வெனக்       கொள்ளுறான்     ---என்றும்
கயவனாய்      உலகினில்       வாழ்கிறான்

பெண்களை       கேலியாய்ப்       பேசுறான்   ---அவர்
பின்னாலே       வலைதனை       வீசுறான்
அன்பில்லா        மிருகமாய்      அலைகிறான்    ----காலம்
அடித்திடும்        வேளையில்      அழுகிறான்

வள்ளலாய்       வேஷங்கள்       போடுறான்    ----ஏழை
வறுமையில்       இன்பத்தை     தேடுறான்
கொள்ளைகள்      அடித்துக்       குவிக்கிறான்    ----அவை
கொள்ளை      போனபின்          துடிக்கிறான்

உத்தமன்         போலவே         தெரிகிறான்    ----இந்த
உலகத்தையே      வளைத்திடத்       துடிக்கிறான்
சத்திய       நெறிவழி       மறக்கிறான்     -----தன்னையே
சாஸ்வதமாய்         எண்ணிக்         கொள்கிறான்