சனி, 28 மார்ச், 2020

சரம் 819

அழகாக         வந்தாய்     ----என்னை 
அறிவாலே      வென்றாய் 
பழகாமல்        சென்றாய்     ---தமிழ் 
பாவை        நீ  யாரோ 

சிலை போல      நின்றேன்     ---உன் 
சிற்றிடை     கண்டேன் 
கலையாத     நிலவோ    ---நீ 
காமன்      விடும்   சரமோ 

உளமாற       நினைத்தேன்   ---என் 
உறவாக்கத்    துடித்தேன் 
விழிவாசல்      திறப்பாய்    ---என்னை 
விரும்பி  நீ      அணைப்பாய் 

நாலடி        நடந்தால்    ---புது 
நாடகம்       நடக்கும் 
சேலடி       பட்டால்    ---என் 
சிந்தையும்      மயஙகும் 

வரம்  வேண்டி       வந்தேன்   ---இனிய 
வாழ்வையே      தருவாய் 
கரம்  பற்ற      வேண்டும்    ----உந்தன் 
காலடி        தொடர்வேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக