அழகாக வந்தாய் ----என்னை
அறிவாலே வென்றாய்
பழகாமல் சென்றாய் ---தமிழ்
பாவை நீ யாரோ
சிலை போல நின்றேன் ---உன்
சிற்றிடை கண்டேன்
கலையாத நிலவோ ---நீ
காமன் விடும் சரமோ
உளமாற நினைத்தேன் ---என்
உறவாக்கத் துடித்தேன்
விழிவாசல் திறப்பாய் ---என்னை
விரும்பி நீ அணைப்பாய்
நாலடி நடந்தால் ---புது
நாடகம் நடக்கும்
சேலடி பட்டால் ---என்
சிந்தையும் மயஙகும்
வரம் வேண்டி வந்தேன் ---இனிய
வாழ்வையே தருவாய்
கரம் பற்ற வேண்டும் ----உந்தன்
காலடி தொடர்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக