கண்களை மூடினால் -----நீ
கனவினில் வருகுவாய்
பெண்களில் புதுமையே ---நீயோ
பேசிடும் பதுமையே
உன் மனம் நுழைந்திட ---எனக்கு
உரிமையைத் தாருமே
கண்களில் கருணையைத் ---என்
கயல்விழி காட்டுவாய்
திங்களும் வானும் போல் ---நல்ல
தேனுடன் பாலும் போல்
சங்கமம் காணலாம் ---புது
சரித்திரம் பேணலாம்
ஈரடி நடந்திடில் ---என்
இளமைகள் எழுந்திடும்
போரினை நடத்தவே ----உடன்
புதுப்படை கிளம்பிடும்
கவிஞர்கள் பாடுவார் ---நீ
கற்பக விருட்சமே
காதலை ஏற்றிடு ---எனது
கவலையைப் போக்கிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக