மான் ஆடும் சோலை ----அங்கு
மயில் கூடும் வேளை
மீன் போன்ற கண்ணாள் ---ஒரு
மின்னல் போல் வந்தாள்
யாரென்று நானும் கேட்டேன் ----அவள்
எழில் என்று சொன்னாள்
கூரான விழிகளைக் கொண்டு ----என்னை
குத்திக் கிழித்துத் சிரித்தாள்
சீறினாள் சிங்கமாய் அன்று ---நானோ
சிறுநரி ஆனேனே நின்று
வேறென்ன சொல்லவா முடியும் ---அந்த
விரகமே என்றுதான் விடியும்
உள்ளத்தில் வந்ததே நடுக்கம் ---புது
உறவுக்கு என்னுள் கிறக்கம்
வெள்ளத்தில் மிதக்கின்ற துரும்போ ----அவளை
வீழ்த்திட என்மனமும் விரும்பும்
கருணைப் பார்வை யவள் வீசவே ---பின்பு
கவர்ந்தேனே அன்பாகப் பேசியே
அருகினில் என்னையவள் இழுத்தாள் ---நான்
அப்பாவி என்பதால் பிழைத்தேன்
மயில் கூடும் வேளை
மீன் போன்ற கண்ணாள் ---ஒரு
மின்னல் போல் வந்தாள்
யாரென்று நானும் கேட்டேன் ----அவள்
எழில் என்று சொன்னாள்
கூரான விழிகளைக் கொண்டு ----என்னை
குத்திக் கிழித்துத் சிரித்தாள்
சீறினாள் சிங்கமாய் அன்று ---நானோ
சிறுநரி ஆனேனே நின்று
வேறென்ன சொல்லவா முடியும் ---அந்த
விரகமே என்றுதான் விடியும்
உள்ளத்தில் வந்ததே நடுக்கம் ---புது
உறவுக்கு என்னுள் கிறக்கம்
வெள்ளத்தில் மிதக்கின்ற துரும்போ ----அவளை
வீழ்த்திட என்மனமும் விரும்பும்
கருணைப் பார்வை யவள் வீசவே ---பின்பு
கவர்ந்தேனே அன்பாகப் பேசியே
அருகினில் என்னையவள் இழுத்தாள் ---நான்
அப்பாவி என்பதால் பிழைத்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக