புதன், 19 பிப்ரவரி, 2020

கிறக்கம் 8 1 7

 மான்           ஆடும்           சோலை      ----அங்கு
மயில்           கூடும்        வேளை
மீன்         போன்ற         கண்ணாள்    ---ஒரு
மின்னல்        போல்      வந்தாள்

யாரென்று       நானும்      கேட்டேன்    ----அவள்
எழில்          என்று        சொன்னாள்
கூரான       விழிகளைக்       கொண்டு    ----என்னை
குத்திக்       கிழித்துத்        சிரித்தாள்

சீறினாள்        சிங்கமாய்        அன்று    ---நானோ
சிறுநரி         ஆனேனே      நின்று
வேறென்ன       சொல்லவா      முடியும்    ---அந்த
விரகமே        என்றுதான்      விடியும்

உள்ளத்தில்      வந்ததே        நடுக்கம்   ---புது
உறவுக்கு       என்னுள்      கிறக்கம்
வெள்ளத்தில்     மிதக்கின்ற     துரும்போ    ----அவளை
வீழ்த்திட        என்மனமும்        விரும்பும்

கருணைப்       பார்வை யவள்       வீசவே    ---பின்பு
கவர்ந்தேனே       அன்பாகப்        பேசியே
அருகினில்       என்னையவள்      இழுத்தாள்     ---நான்
அப்பாவி         என்பதால்       பிழைத்தேன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக