பல்லவி
பொங்கல் பிறந்தது பாருங்கடி ----இளம்
பூவையர் யாவரும் வாருங்கடி
அனுபல்லவி
திங்களை தேவியைக் கும்பிடுவோம் -----இந்த
தேசம் செழித்திட உழைத்திடுவோம்
சரணங்கள்
எங்கும் பசுமை நீரோட்டம் ----இங்கு
எத்துணை மனிதர் பெருங்கூட்டம்
புத்தர் பிறந்ததும் நம்நாட்டில் ---அவர்
போதனை செழித்தது அயல்நாட்டில்
இல்லையென்பதை மாற்றி வைப்போம் ---நமது
இந்திய நாட்டை உயரவைப்போம்
எல்லையில் தோன்றும் பகைவர்களை ----நமது
இரும்புக் கரத்தால் முறியடிப்போம்
மதங்களின் பெயரால் எதற்கு சண்டை ----இந்த
மண்ணில் அனைவரும் ஒன்றேயன்றோ
எதற்கும் துணிந்து நடைபோடு -----நாம்
இந்தியர் என்கின்ற நினைவோடு
(தையில் வருகின்ற பொங்கலை வரவேற்கும் பாடல் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக