சொல்லாமல் இருக்க முடியல்லே ----உலகம்
சொன்னதும் திருந்துமோ தெரியல்லே
வெள்ளையைப் பாலெனச் சொல்லுறான் ---வீணே
வெட்டியாய்க் காலத்தை மெல்லுறான்
உள்ளதை பொய்யென மாத்துறான் ---இங்கே
உழைக்காமல் காசினைத் தேத்துறான்
கள்ளமே வாழ்வெனக் கொள்ளுறான் ---என்றும்
கயவனாய் உலகினில் வாழ்கிறான்
பெண்களை கேலியாய்ப் பேசுறான் ---அவர்
பின்னாலே வலைதனை வீசுறான்
அன்பில்லா மிருகமாய் அலைகிறான் ----காலம்
அடித்திடும் வேளையில் அழுகிறான்
வள்ளலாய் வேஷங்கள் போடுறான் ----ஏழை
வறுமையில் இன்பத்தை தேடுறான்
கொள்ளைகள் அடித்துக் குவிக்கிறான் ----அவை
கொள்ளை போனபின் துடிக்கிறான்
உத்தமன் போலவே தெரிகிறான் ----இந்த
உலகத்தையே வளைத்திடத் துடிக்கிறான்
சத்திய நெறிவழி மறக்கிறான் -----தன்னையே
சாஸ்வதமாய் எண்ணிக் கொள்கிறான்
சொன்னதும் திருந்துமோ தெரியல்லே
வெள்ளையைப் பாலெனச் சொல்லுறான் ---வீணே
வெட்டியாய்க் காலத்தை மெல்லுறான்
உள்ளதை பொய்யென மாத்துறான் ---இங்கே
உழைக்காமல் காசினைத் தேத்துறான்
கள்ளமே வாழ்வெனக் கொள்ளுறான் ---என்றும்
கயவனாய் உலகினில் வாழ்கிறான்
பெண்களை கேலியாய்ப் பேசுறான் ---அவர்
பின்னாலே வலைதனை வீசுறான்
அன்பில்லா மிருகமாய் அலைகிறான் ----காலம்
அடித்திடும் வேளையில் அழுகிறான்
வள்ளலாய் வேஷங்கள் போடுறான் ----ஏழை
வறுமையில் இன்பத்தை தேடுறான்
கொள்ளைகள் அடித்துக் குவிக்கிறான் ----அவை
கொள்ளை போனபின் துடிக்கிறான்
உத்தமன் போலவே தெரிகிறான் ----இந்த
உலகத்தையே வளைத்திடத் துடிக்கிறான்
சத்திய நெறிவழி மறக்கிறான் -----தன்னையே
சாஸ்வதமாய் எண்ணிக் கொள்கிறான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக