ஞாயிறு, 5 ஜனவரி, 2020

மிருகம் 8 1 5

சொல்லாமல்          இருக்க        முடியல்லே   ----உலகம்
சொன்னதும்       திருந்துமோ      தெரியல்லே
வெள்ளையைப்      பாலெனச்     சொல்லுறான்    ---வீணே
வெட்டியாய்க்        காலத்தை       மெல்லுறான்

உள்ளதை        பொய்யென      மாத்துறான்    ---இங்கே
உழைக்காமல்       காசினைத்      தேத்துறான்
கள்ளமே        வாழ்வெனக்       கொள்ளுறான்     ---என்றும்
கயவனாய்      உலகினில்       வாழ்கிறான்

பெண்களை       கேலியாய்ப்       பேசுறான்   ---அவர்
பின்னாலே       வலைதனை       வீசுறான்
அன்பில்லா        மிருகமாய்      அலைகிறான்    ----காலம்
அடித்திடும்        வேளையில்      அழுகிறான்

வள்ளலாய்       வேஷங்கள்       போடுறான்    ----ஏழை
வறுமையில்       இன்பத்தை     தேடுறான்
கொள்ளைகள்      அடித்துக்       குவிக்கிறான்    ----அவை
கொள்ளை      போனபின்          துடிக்கிறான்

உத்தமன்         போலவே         தெரிகிறான்    ----இந்த
உலகத்தையே      வளைத்திடத்       துடிக்கிறான்
சத்திய       நெறிவழி       மறக்கிறான்     -----தன்னையே
சாஸ்வதமாய்         எண்ணிக்         கொள்கிறான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக