காலையில் சீக்கிரம் எழுவாய் ---உள்ள
கடமையை விரைவில் முடிப்பாய்
வேளைக்குப் பள்ளி செல்வாய் ----அங்கு
விவரம் தெரிந்து கொள்வாய்
மாலையில் இல்லம் வருவாய் ---மற்றவரோடு
இருந்திடு நீயும் இயல்பாய்
சோலையில் சுற்றி மகிழ்வாய் ----அங்கு
சுத்தமான காற்றினை உணர்வாய்
அன்னை தந்தையை மதிப்பாய் ----அவர்
அறிவுரைப்படியே தினமும் நடப்பாய்
எண்ணத்தில் நல்லதை நினைப்பாய் ---என்றும்
இதயத்தில் நன்றியை சுமப்பாய்
தேசம் செழிப்புற உழைப்பாய் ----நீ
தேடிய செல்வத்தை பகிர்வாய்
மோச எண்ணத்தை துறப்பாய் ---வீண்
மோக மென்பதை தவிர்ப்பாய்
நாட்டிற்கு நன்றியாய் இருப்பாய் ----என்றும்
நயவஞ்சகர்க்கு எதிரியாய் திகழ்வாய்
வீட்டிற்கு பிள்ளையாய் ஒளிர்வாய் ---நீ
விடிவெள்ளியாய் உலகினில் நிலைப்பாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக